states

img

பாலியல் வன்முறை கூடாரமாகும் மோடியின் தொகுதி 8 வயது சிறுமி அடித்துக்கொலை

பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநிலத்தின் கோவில் நகர மான வாரணாசி பிரதமர் மோடியின் தொகுதியாகும். வாரணாசி “வளர்ச்சியின் ரோல் மாடல்” என பிரத மர் மோடி அடிக்கடி கூறுவார். ஆனால் உண்மையில் வாரணாசி பாலியல் வன்முறை கூடாரமாக மாறி வருகிறது. வாரணாசியின் சுஜாபாத்திற்கு அருகே உள்ள பகதூர்பூர் தொடக்கப் பள்ளியில் பயிலும் 3ஆம் வகுப்பு படிக்  கும் 8 வயது சிறுமி காணாமல் போனார்.  பெற்றோர் மற்றும் உறவினர் தேடுத லுக்குப் பிறகு பள்ளிக்கு அருகே சிறுமி யின் உடல் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டது.  சிறுமியின் உடல் முழுவதும் ரத்த மும், காயங்களும் இருந்தன. தகவல றிந்த காவல்துறையினர் சிறுமியின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்கு அனுப்பி  வைத்தனர். காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் பலாத்காரத்துக்கு எதிர்ப்பு தெரிவித்ததன் காரணமாகவே பக்கத்து வீட்டுக்காரர் இர்ஷாத் என்பவ ரால் 8 வயது சிறுமி கல்லால் தலையில் அடித்துக் கொல்லப்பட்டார் என செய்தி கள் வெளியாகின. குற்றவாளி இர்ஷா த்தை காவல்துறையினர் கைது செய்த னர். பிரதமர் மோடியின் தொகுதியில் பாலி யல் பலாத்காரத்திற்கு எதிர்ப்பு தெரி வித்த 8 வயது சிறுமி அடித்து கொல்லப்  பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கி யுள்ளது.