தொகுதி மறுசீரமைப்பிற்கு எதிராக அனைத்துக்
கட்சி கூட்டம்
மக்களவை தேர்தல்களின் போது தென் மாநிலங்களில் பெரிதாக வெற்றிபெற முடியாத பாஜக, நாடாளுமன்றத்தில் தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட தென் மாநிலங்களின் பிரதி நிதித்துவத்தை குறைக்கும் விதமாக, மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுசீரமைப்பு என்ற சூழ்ச்சித் திட்டத்தை கையில் எடுத்துள்ளது. பாஜகவின் இந்த தொகுதி குறைப்பு சூழ்ச்சியை முறியடிக்கவும், நாடாளு மன்றத்தில் தமிழ்நாட்டின் அரசியல் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்யவும் அம்மாநில முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிப்ரவரி 5ஆம் தேதி சென்னையில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்தி னார். 56 அரசியல் கட்சிகள் பங்கேற்ற இந்த கூட்டத்தின் முடிவில் அநீதியான தொகுதி மறுசீரமைப்பை ஏற்க முடியாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், காங்கிரஸ் ஆளும் தெலுங்கானா அரசும் தொகுதி மறுசீரமைப்பிற்கு எதிராக அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்தப்போவதாக அறி வித்துள்ளது. கூட்டம் நடைபெறு வதற்கான தேதி விரைவில் அறிவிக்கப் படும் என தெலுங்கானா தகவல் மற்றும் மக்கள் தொடர்பு அமைச்சர் பொங்கு லேட்டி ஸ்ரீனிவாஸ் ரெட்டி கூறியுள்ளார்.
மொழியை திணிக்கக் கூடாது
மோடி அரசுக்கு எதிராக களமிறங்கியது சமாஜ்வாதி
தேசிய கல்விக்கொள்கையின் பேரில் தமிழ்நாட்டில் மும்மொழித் திட்டம் எனக் கூறி இந்தியைத் திணிக்க பாஜக தலைமையிலான ஒன்றிய மோடி அரசு சதி முயற்சியில் இறங்கியுள்ளது. இதற்கு எதிராக தமிழ்நாடு அரசு சார்பி லும், அரசியல் கட்சிகள் சார்பிலும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வரு கின்றன. இந்நிலையில், மொழியை திணிக்கக் கூடாது எனக் கூறி மும்மொழிக் கொள்கை க்கு எதிரான போராட்டத்திற்கு சமாஜ் வாதி கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சமாஜ்வாதி செய்தித்தொடர் பாளர் தர்மேந்திர சிங் கூறுகையில், “இந்தி திணிப்புக்கு எதிராக முதலமைச் சர் மு.க.ஸ்டாலினின் தலைமையில் தமிழ்நாடு நடத்தி வரும் போராட்டத்திற்கு ஆதரவு அளிப்போம். யார் மீதும் மொழி யை திணிக்கக் கூடாது. ஒவ்வொரு மாநில மும் தங்களது வட்டார மொழியை பயன் படுத்தலாம் என்று அரசியலமைப்புச் சட்டம் உரிமை அளித்துள்ளது. இது (திணிப் பது) தவறானது” எனக் கூறினார்.
ஒடிசாவில் வினாத்தாள் கசிவு?
காவல்துறை தேர்வு ஒத்திவைப்பு
பள்ளி, கல்லூரி, அரசுப் பணி களுக்கான வினாத்தாள் கசிவது பாஜக ஆளும் மாநிலங்களில் சர்வசாதாரணமான சம்பவமாக மாறிவிட்டது. ஏற்கெனவே குஜராத், உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், ஹரியானா, மத்தியப்பிரதேசம், பீகார், மகாராஷ்டிரா உள்ளிட்ட பாஜக மற்றும் பாஜக கூட்டணி ஆளும் மாநிலங்களில் வினாத்தாள் கசிவு காரணமாக பல்வேறு தேர்வுகள் ரத்து மற்றும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், பாஜக முதன்முறை யாக ஆட்சி அமைத்த மாநிலமான ஒடிசா விலும் வினாத்தாள் கசிவு காரணமாக காவல்துறை தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஒடிசா காவல்துறை ஆட்சேர்ப்பு வாரி யம் (OPRB) குரூப்-பி பதவிகளுக்கான (933 காலியிடங்கள்) தேர்வை மார்ச் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடத்த திட்ட மிடப்பட்டிருந்தது. ஆனால் திடீரென காவல்துறை தேர்வு ஒத்திவைக்கப்படு வதாக ஒடிசா காவல்துறை ஆட்சேர்ப்பு வாரியம் வியாழனன்று இரவு அறி வித்தது. வினாத்தாள் கசிவு காரண மாகவே காவல்துறை தேர்வு ஒத்தி வைக்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.