states

img

பாஜகவின் ‘பொய்’ விமானம் உ.பி.யில் இனி தரையிறங்காது!

லக்னோ, பிப்.9- உத்தரப் பிரதேச சட்டப்பேர வைத் தேர்தல், 7 கட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டத் தேர்தல் வியாழ னன்று 11 மாவட்டங்களில் உள்ள 58 தொகுதிகளில் நடைபெறுகிறது. இன்னும் 6 கட்டத் தேர்தல் நடைபெறவுள்ளதால் பிரச்சாரம் தொடர்ந்து வருகிறது. இந்நிலை யில், லக்னோவில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி யுடன் இணைந்து அகிலேஷ் வாக்கு சேகரித்தார். அப்போது, அகிலேஷ் பேசியதாவது: “கடந்த ஆண்டு மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலின் போது பாஜக தனது முழு பலத்தையும் செலுத்தி தேர்தலில் போட்டியிட் டது.

ஆனால் மம்தா பானர்ஜி யை பாஜகவினரால் தோற்கடிக்க முடியவில்லை. நேற்றைய தினம் பிரதமர் நரேந்திர மோடி உத்தரப் பிரதேச தேர்தல் பரப்புரைக்கு மோசமான வானிலை காரணமாக நேரில்  வர முடியவில்லை என்று கூறி, அதற்காக மக்களிடம் மன்னிப்பு கேட்டார். ஆனால் மம்தா பானர்ஜி, மேற்கு வங்க மாநி லத்தில் இருந்து லக்னோவிற்கு வந்துள்ளார்.  உ.பி.க்கு வர முடியாததற்கு, பாஜகவினர் கூறும் காரணங் களே, அவர்களின் “பொய் விமா னம்” இந்த தேர்தலில் உத்தரப்பிர தேச மாநிலத்தில் எந்த இடத்தி லும் தரையிறங்க முடியாது என்ப தைத்தான் காட்டுகின்றன.”  இவ்வாறு அகிலேஷ் விமர்சித் தார்.  மம்தா பேசுகையில், “பாஜக வின் பொய்யான வாக்குறுதி களுக்கு உத்தரப்பிரதேச மாநில மக்கள் மயங்கி விடாதீர்கள்; பாஜகவைத் தோற்கடியுங்கள்” என்று வேண்டுகோள் விடுத்தார்.