states

img

இது நவீன குஜராத் மாடல் - போலி நீதிமன்றத்தை உருவாக்கி மாவட்ட ஆட்சியருக்கே உத்தரவு பிறப்பித்த இளைஞர்

அகமதாபாத் பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் நிகழும் முறைகேடு சம்பவங் கள் அனைத்தும் சிந்தனைக்கு எட்டாத ஆச்சரியம் அளிக்கும் விஷ யமாக இருக்கிறது. போலி அலு வலகம், போலி மருத்துவமனை என  பெரும்பாலான போலிகள் குஜராத்  மாநிலத்தில் தான் கண்டுபிடித்து வருவது வாடிக்கையாகி வரு கிறது. கடந்த ஆண்டு கூட குஜ ராத்தின் மோர்பி மாவட்டத்தில் போலி “டோல் கேட் (சுங்கச்சா வடி)” கண்டுபிடிக்கப்பட்டது. இந்த ஒன்றரை ஆண்டுகளாக செயல் பட்டு வந்த இந்த போலி “டோல் கேட்” மூலம் ரூ.75 கோடி அளவில் மோசடி நிகழ்ந்த சம்பவம் நாட் டையே உலுக்கியது. இத்தகைய சூழலில் போலி “டோல் கேட்” போல போலி நீதிமன்றமும் குஜ ராத் நீதிமன்றத்தில் கண்டுபிடிக்கப் பட்டது. 5 ஆண்டுகள் செயல்பட்ட போலி நீதிமன்றம் குஜராத் மாநிலம் காந்திநக ரைச் சேர்ந்தவர் மோரிஸ் சாமு வேல் கிறிஸ்டியன் (37). இவர் அக மதாபாத்தில் குஜராத் பாஜக அரசு தன்னை தீர்ப்பாய நீதிபதியாக நியமித்ததாக கடந்த 2019இல் அகமதாபாத்தில் நீதிமன்றம் தொடங்கியுள்ளார். அரசு நிலம் தொடர்பான வழக்கில் தனக்குப் பணம் தந்த நபருக்கு ஆதரவான உத்தரவைப் பிறப்பித்தது என பல்வேறு வழக்குகளுக்கு அவர் தீர்ப்பு வழங்கியுள்ளார். கடந்த 5 ஆண்டுகளில்  (2019 முதல் 2024 வரை) சாமுவேல் கிறிஸ்டியன் வழங்கிய தீர்ப்புகள் அனைத்தும் பணம் மற்றும் அரசு நிலங்கள் தொடர்பானவை மட்டுமே.

மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவு போட்டு சிக்கிக் கொண்டார்

இந்நிலையில், கடந்த 2019இல் பால்டி பகுதியில் உள்ள அரசு நிலம் தன்னுடையது என்றும், வருவாய் பதிவேடுகளில் தனது பெயரைச் சேர்க்க வேண்டும் என ஒருவர் போலி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த நபரைத் தொடர்பு கொண்ட போலி நீதிபதி கிறிஸ்டியன் பிரச்சனையை முடித்துத் தருவதாகப் பணம் வாங்கியுள்ளார். பிறகு இவரது பெயரை வருவாய் பதிவேடுகளில் சேர்க்குமாறு மாவட்ட ஆட்சியரு க்கு உத்தரவிட்டுள்ளார். அத்துடன் நிற்காமல் தனது போலியான உத்தரவை மற்றொரு வழக்கறிஞர் மூலம் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ளார். “உத்தரவுக்குப் பின்பு எதற்கு உத்தரவு நகல் நோட்டீஸ் வருகிறது?” என சந்தே கமடைந்த மாவட்ட ஆட்சியர், போலீஸ் மற்றும் அகமதாபாத் சிவில் நீதிமன்ற நீதிபதி மூல மாக கிறிஸ்டியனின் உண்மை தன்மையை விசாரித்து அவர் போலி நீதிபதி என கண்டறிந்துள் ளார். இதனையடுத்து கிறிஸ்டியன் ஒரு மோசடி பேர்வழி என்று அறி வித்த அகமதாபாத் சிவில் நீதி மன்ற நீதிபதி ஹர்திக் தேசாய், அவரை கைது செய்ய கரஞ்ச் காவல் நிலைய போலீசாருக்கு உத்தரவிட்டார். நீதிபதி உத்த ரவை அடுத்து கிறிஸ்டியன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக் கப்பட்டுள்ளார்.