states

img

நடிகர் திலீப்பின் முன்ஜாமீன் மனுவிசாரணை ஜன.21 க்கு ஒத்திவைப்பு

கொச்சி, ஜன.18- நடிகையை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கின் விசாரணை அதிகாரிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்த சதித் திட்டம் தீட்டிய வழக்கில் நடிகர் திலீப் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு மீதான விசாரணையை கேரள உயர்நீதிமன்றம் வெள்ளியன்று (ஜன.21) விசாரிப்பதாக ஒத்திவைத்தது. அதுவரை அவரை கைது செய்ய விதிக்கப்பட்ட தடை தொடரும்.  இந்த மனுவை செவ்வாயன்று பரிசீலிப்பதாக கடந்த வெள்ளியன்று நீதிமன்றம் முடிவு செய்திருந்தது. அரசு தரப்பு மேலும் அவகாசம் கேட்டதால் விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. இயக்குநர் பாலச்சந்திர குமார் வெளியிட்ட தகவலின் பேரில் திலீப் உள்ளிட்ட 6 பேர் மீது குற்றப் பிரிவு போலீசார் இந்த புதிய வழக்கை பதிவு செய்துள்ளனர். திலீப்பின் சகோதரர் அனூப், சகோதரியின் கணவர் டி.என்.சூரஜ், உறவினர் அப்பு,  இந்த வழக்கில் வி.ஐ.பியாக கருதப்படும் சரத், அவரது நண்பர்  பைஜு செங்கமநாடு ஆகியோரும் முன்ஜாமீன் கோரி விண்ணப்பித்துள் ளனர்.

;