புதுதில்லி, டிச. 8 - இமாச்சலப் பிரதேசம், குஜராத் ஆகிய 2 மாநிலங்களிலும் பாஜக ஆட்சி நடைபெற்று வந்த நிலையில், இமாச்சலப் பிரதேசத்தில் பாஜக ஆட்சியை இழந்துள்ளது. இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 40 இடங் களில் வெற்றிபெற்றதன் மூலம் 5 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது. எதிர்பார்க்க ப்பட்டதைப் போலவே, இங்கு ஆட்சியி லிருந்த பாஜக இமாச்சல் மாநில மக்களால் தூக்கி எறியப்பட்டுள்ளது. அதேநேரம் குஜராத்தில், ஆம் ஆத்மி உதவியுடன் 156 இடங்களைக் கைப்பற்றி பாஜக மீண்டும் ஆட்சியை தக்கவைத்துக் கொண்டுள்ளது. குஜராத்தில் உள்ள 182 தொகுதி களுக்கு டிசம்பர் 1, 5 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இதில், கடந்த முறை பதிவான 71.28 சதவிகித வாக்குகளைக் காட்டிலும் குறைவாக 66.31 சதவிகித வாக்குகளே பதிவாகின. இதேபோல 68 தொகுதி களைக் கொண்ட இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவைக்கு நவம்பர் 12-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடை பெற்றது. இதில், 75.6 சதவிகித வாக்கு கள் பதிவாகின. குஜராத், இமாச்சலப் பிரதேசம் ஆகிய 2 மாநிலங்களிலும் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை, வியாழ னன்று (டிசம்பர் 8) காலை 8 மணிக்கு துவங்கி நடைபெற்றது. இதில், குஜ ராத்தில் ஆரம்பம் முதலே பாஜக செல்வாக்கு செலுத்தியது. அதே நேரம் இமாச்சலப் பிரதேசத்தில் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே கடும் போட்டி நிலவியது. ஒருகட்டத் தில் பாஜக முன்னிலையிலும் இருந்தது. ஆனால், அடுத்தடுத்த சுற்று வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் முன்னிலை பெற்றது.
இறுதியாக, இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் மொத்தமுள்ள 68 தொகுதி களில் காங்கிரஸ் 40 தொகுதிகளில் முன்னிலை பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. பாஜக 25 தொகுதி களில் மட்டுமே முன்னிலைபெற்றது. சுயேச்சைகள் 3 தொகுதிகளில் வெற்றி பெற்றனர். இந்த 3 சுயேச்சைகளும் பாஜக அதிருப்தி எம்எல்ஏ-க்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இமாச்சலப் பிரதேசத்தில், 1985-ஆம் ஆண்டிற்குப் பின் எந்தவொரு ஆளும் கட்சியும், அடுத்தமுறை தேர்தலில் ஆட்சிக்கு வருவதில்லை. இந்த முறையும் அதுவே நடந்துள் ளது. கடந்த 2017-ஆம் ஆண்டு நடை பெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 21 இடங்களிலும், பாஜக 44 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்த நிலையில், 2022 தேர்தலில் அந்த முடிவுகள் அப்படியே மாறியுள்ளன. பெரும்பான்மைக்கு 35 தொகுதி கள் தேவை என்ற நிலையில், அதையும் தாண்டி காங்கிரஸ் கட்சி 40 இடங்களில் வெற்றிபெற்றுள்ளதால், இமாச்ச லில் காங்கிரஸ் மிக எளிதாக ஆட்சி யமைக்கும் நிலை உருவாகியுள்ளது.
எனினும், உத்தரகண்ட், கர்நாடகா, கோவா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா என பல்வேறு மாநி லங்களில், காங்கிரஸ் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி பாஜக குறுக்கு வழியில் ஆட்சியமைத்த வரலாறு இருப்பதால், தேர்தலில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழைப் பெற்ற கையோடு, தங்களின் எம்எல்ஏ-க்களை ஒரே இடத்தில் தங்கவைக்கும் நடவடிக்கையில் காங்கிரஸ் இறங்கியுள்ளது. மறுபுறத்தில் 182 இடங்களைக் கொண்ட குஜராத் சட்டப்பேரவையில், 156 இங்களைக் கைப்பற்றி பாஜக மீண்டும் ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது. கடந்த 2017 ஆண்டு தேர்தலில் பாஜக 99 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. அதுவும் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரசிடமிருந்து தப்பிப் பிழைத்தது. ஆனால், இந்தமுறை நரேந்திர மோடி முதல்வராக இருந்து போதும் கூட பெற முடியாத வெற்றி யை ஈட்டி சாதனை படைத்துள்ளது. கடந்த முறை 77 தொகுதிகளில் வெற்றிபெற்ற காங்கிரஸ் இந்த முறை 17 இடங்களை மட்டுமே பெற்றுள்ளது. பாஜக-வின் மாபெரும் வெற்றிக்கும், காங்கிரசின் படுதோல்விக்கும் ‘ஆம் ஆத்மி கட்சி’ ஏற்படுத்திய மும்முனைப் போட்டியே காரணமாக அமைந்துள்ளது. குறிப்பாக, காங்கிரஸ் கட்சியின் வாக்குகளை ஆம் ஆத்மி கபளீகரம் செய்து விட்டது. பாஜக 52 சதவிகிதத்திற்கும் அதிக மான வாக்குகளையும், காங்கிரஸ் 27 சதவிகித வாக்குகளையும் பெற்று ள்ள நிலையில், ஆம் ஆத்மி கட்சி 13 சதவிகித வாக்குகளைப்பிரித்துள்ளது. இந்த வெற்றியை அடுத்து, குஜரா த்தில் தொடர்ந்து 7-ஆவது முறையாக பாஜக ஆட்சியமைக்கிறது. முதல்வ ராக பூபேந்திர படேல் டிசம்பர் 12-ஆம் தேதி பதவியேற்பார் என்றும் பாஜக அறிவித்துள்ளது.