states

உ.பி.யில் அதிகரிக்கும் துப்பாக்கி கலாச்சாரம்: 14 வயது சிறுமி தற்கொலை

பாஜக ஆளும் உத்தரப்பிர தேச மாநிலத்தில் அமெ ரிக்கா போல துப்பாக்கி கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. மாநிலத்தில் வாரத்திற்கு 2 முதல் 3 துப்பாக்கிச்சூடு, கொலைச் சம்பவங்கள் அரங்கேறி வருவது சகஜமாக உள்ளது. மணிப்பூரை போல உத்தரப்பிரதேசமும் வன் முறை பூமியாக மாறி வருகிறது.  இந்நிலையில், செவ்வாயன்று ஷாஜகான்பூரில் 14 வயது சிறுமி  ஒருவர் தன்னைத்தானே துப்பாக்கி யால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அரங்கேறியுள் ளது. 10-ஆம் வகுப்பு படிக்கும்  வினாதி பார்தி என்ற சிறுமி,” தனது  தற்கொலைக்கு யாரும் பொறுப் பில்லை” என கடிதம் எழுதி வைத்து  விட்டு வீட்டில் இருந்த துப்பாக்கி யை வைத்து தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்ட தாக ஷாஜகான்பூர் மாவட்ட எஸ்பி  அசோக் குமார் தகவல் தெரிவித் துள்ளார்.  துப்பாக்கி எப்படி கிடைத்தது? 14 வயது சிறுமி தன்னைத் தானே  சுட்டுக்கொண்டதாக கடிதம் மூலம்  தகவல் வெளியானாலும், சிறு மிக்கு துப்பாக்கி எப்படி கிடைத்தது?  அவருக்கு யார் துப்பாக்கி வாங்கி  கொடுத்தது? துப்பாக்கி மூலம் கொடூரமாக தற்கொலை செய்யும்  அளவிற்கு சிறுமி என்ன நடவ டிக்கையால் பாதிக்கப்பட்டார்? பாலியல் வன்கொடுமை செயயப் பட்டாரா? இது போன்ற பல்வேறு சந்தேகங்கள் கிளம்பியுள்ளன. ஆனால் எஸ்பி அசோக் குமார் பெயரளவுக்கு விசாரணை நடத்தி சென்றுவிட்டார். 14 வயது சிறுமி தற்கொலை துப்பாக்கியால் தற்கொலை செய் துள்ளது அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.