states

img

தொழிலாளர்கள் - விவசாயிகள் சிறப்பு மாநாடு

புதுதில்லி, ஆக.24- அகில இந்திய தொழிலாளர்கள், விவசாயிகள் கூட்டு சிறப்பு மாநாடு, தலைநகர் புதுதில்லியில் வியாழனன்று எழுச்சியுடன் நடைபெற்றது.  மத்தியத் தொழிற்சங்கங்கள்/சம்மேளனங்கள்/சங்கங்களின் கூட்டு மேடையும், விவசாயிகள் சங்கங் களின் கூட்டுமேடையான சம்யுக்த கிசான் மோர்ச்சாவும் இணைந்து மாபெரும் கூட்டு மேடையாக பரிணமித்துள் ளன. இதன் சார்பாக சிறப்பு மாநாடு நடைபெற்றது.   2014க்குப்பின் ஒன்றிய பாஜக அரசாங்கம் பின்பற்றிவரும் நாசகர தொழிலாளர் விரோத, விவசாயி கள் விரோத, மக்கள் விரோத மற்றும் தேச விரோதக் கொள்கைகளால் நாட்டிலுள்ள தொழிலாளர்களும், விவசாயிகளும், அனைத்துப் பிரிவு மக்களும் அவதிக்குள்ளாகி இருப்பது குறித்து இம்மாநாட்டில் ஆய்வு செய்யப்பட்டது.  

போராட்ட அறைகூவல்

தொழிலாளர் - விவசாயிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி வரவிருக்கும் காலங்களில் நாடு தழுவிய அளவில் இயக்கங்களை நடத்திட, அனைத்துத் தொழிலாளர்களும் விவசாயிகளும் ஒன்றுபட்டு நின்று போராட முன்வர வேண்டும் என்று சிறப்பு மாநாடு அறைகூவல் விடுத்திருக்கிறது. (1) 2023 அக்டோபர் 3 அன்று (2021இல் லக்கிம்பூர் கேரி விவசாயிகள் படுகொலை செய்யப்பட்ட தினத்தை) கறுப்பு தினமாக அனுசரித்திட வேண்டும். அன்றைய தினம் ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா டிஸ்மிஸ் செய்யப்பட்டு, வழக்கு தொடரப்பட வேண்டும். (போராட்ட வடிவம் பின்னர் அறிவிக்கப்படும்.) (2)  2023 நவம்பர் 26-28 தேதிகளில் மாநிலத் தலைநகர்,  யூனியன் பிரதேசத் தலைநகர்களின் ஆளுநர் மாளிகை கள், துணை ஆளுநர் மாளிகைகள் முன்பு, இரவு-பகல்  மகா முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும். (2020 நவம்பர் 26 என்பது தொழிலாளர்கள் நடத்திய அகில  இந்திய பொது வேலைநிறுத்த நாள் மற்றும் விவசாயி கள் நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடத்தி வரலாறு படைத்திட்ட நாளாகும்.) (3)  2023 டிசம்பர்/2024 ஜனவரி: நாடு முழுதும்  எதிர்ப்பு இயக்கங்களின் வடிவங்கள் தீர்மானிக்கப் பட்டு பின்னர் அறிவிக்கப்படும். இவ்வாறு சிறப்பு மாநாட்டில் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

கோரிக்கை சாசனம் : இச்சிறப்பு மாநாட்டில் கீழ்க்கண்டவாறு கோரிக்கை சாசனம் வடித்தெடுக்கப்பட்டது

  1.     விலைவாசியைக் கட்டுப்படுத்துக, உணவு, மருந்துகள், வேளாண் இடுபொருட்கள், எந்திரங்கள் போன்ற அத்தியாவசியப் பொருள்கள் மீதான ஜிஎஸ்டி வரியை நீக்கிடுக, பெட்ரோலியப் பொருட்கள் மற்றும் சமையல் எரிவாயு மீதான மத்திய கலால் வரியைக் கணிசமாகக் குறைத்திடுக!
  2.  கோவிட் பெருந்தொற்றைக் காரணம் காட்டி மூத்த குடிமக்கள், பெண்கள், மாற்றுத் திறனாளிகள், விளையாட்டு வீரர்கள்-வீராங்கனைகள் முத லியவர்களுக்குக் கைவிடப்பட்ட ரயில்வே சலுகைக் கட்டணங்களை மீண்டும் வழங்குக!
  3.     உணவுப் பாதுகாப்பை உத்தரவாதப் படுத்துக; அனைவருக்கும் பொது  விநியோக முறையைக் கொண்டு வருக!
  4.  இலவசக் கல்விக்கான உரிமை, சுகா தாரம், தண்ணீர் மற்றும் அனை வருக்கும் துப்புரவு ஆகியவற்றுக்கான உரிமைகளை உத்தரவாதப்படுத்துக; 2020ஆம் ஆண்டு புதியக் கல்விக் கொள்கையைக் கிழித்தெறிக!
  5.  அனைவருக்கும் வீட்டு வசதியை உத்தரவாதப்படுத்துக!
  6.      வன உரிமைகள் சட்டத்தைக் கறாராக அமல்படுத்துக; வனங்களில் வாழ்பவர்களுக்குக் கூட தெரியாமல் வனங்களை அழித்திட, ஒன்றிய அரசாங்கத்தை அனுமதித்திடும்  2023 வனப்பாதுகாப்புச் சட்டம், உயிர் - பன்முகத்தன்மை சட்டம் மற்றும் விதிகளில் கொண்டுவரப்பட்டுள்ள திருத்தங்களை விலக்கிக்கொள்க;  உழுபவருக்கே நிலத்தை உத்தர வாதப்படுத்திடுக!
  7.  தேசியக் குறைந்தபட்ச ஊதியம் மாதத்திற்கு 26,000 ரூபாய் என நிர்ணயம் செய்திடுக!
  8.  இந்திய தொழிலாளர் மாநாட்டைக் குறிப்பிட்ட கால இடைவெளியில் முறையாக நடத்திடுக!
  9.  பொதுத்துறை நிறுவனங்களையும், அரசு நிறுவனங்களையும் தனியாரு க்குத் தாரை வார்ப்பதை நிறுத்துக; நாட்டின் சொத்துக்களை விற்றுக் காசாக்கிடும் தேசியப் பணமாக்கல் கொள்கையை (NMP-National Monetization Pipeline) கிழித்தெறிக;  கனிம வளங்கள் மற்றும் உலோகங் கள் தொடர்பாக உள்ள சட்டத்தில் திருத்தத்தைக் கொணர்ந்து, நிலக்கரிச் சுரங்கங்கள் உட்பட சுரங்க ங்களிலிருந்து வரும் லாபத்தில் 50 விழுக்காடு பங்கினை, உள்ளூர்  மக்களுக்கு, குறிப்பாக பழங்குடி யினர் மற்றும் விவசாயிகளுக்கு அவர்களின் மேம்பாட்டிற்காக அளிப்பதை உத்தரவாதப்படுத்திடுக!  
  10.  2022 மின்சார திருத்தச் சட்டமுன்வடி வை விலக்கிக்கொள்க; முன்கூட்டியே பணம் செலுத்தும் ஸ்மார்ட் மீட்டர்கள் திட்டத்தைக் (Pre-paid smart meters) கைவிடுக!
  11.  வேலை உரிமையை அடிப்படை உரிமையாக்குக; அரசுப் பணிகளில் காலியாகவுள்ள இடங்களை நிரப்பிடுக; வேலையற்றோருக்கு வேலை வழங்கக்கூடிய விதத்தில் வேலைவாய்ப்புகளை உருவாக்கிடுக; மகாத்மாகாந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தின்கீழ் ஆண்டுக்கு 200 நாட்கள் வேலை, நாள் ஊதியம் 600 ரூபாய் என்று விரிவுபடுத்தி, அமல்படுத்திடுக; நகர்ப்புற வேலை வாய்ப்பு உத்தரவாதச் சட்டத்தைக் கொண்டுவருக!
  12.  விவசாயிகளுக்கு விதைகள், உரங்கள், மின்சாரத்திற்காக அளிக்கப்படும் மானியங்களை அதிகரித்திடுக; விவசாயிகளுக்கு வேளாண் உற்பத்திக் கட்டணத்துடன் சி-2+50% உயர்த்தி, சட்டரீதியாக குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்திடுக; விவசாயிகள் தற்கொலைகள் செய்துகொள்வதை எப்பாடுபட்டேனும் தடுத்து நிறுத்திடுக!  
  13.  கார்ப்பரேட் ஆதரவு பிரதமர் பயிர் காப்பீடு திட்டத்தை (PM Fasal Bima Yojana) விலக்கிக் கொள்க; அனைத்துப் பயிர்களுக்கும் புவி வெப்பமயமாதல், வறட்சி, வெள்ளம், பயிர் தொடர்பான நோய்கள் ஆகிய பாதிப்புகளால் ஏற்படும் இழப்பு களுக்காக விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கக்கூடிய விதத்தில் ஓர் ஒருங்கிணைந்த பொதுத்துறை பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தை (a comprehensive Public Sector Crop Insurance Scheme) நிறுவிடுக!
  14.      கடன் வலையிலிருந்து அனைத்து விவசாயிகளையும் விடுவிக்கும் விதத்தில் ஒருங்கிணைந்த கடன் தள்ளுபடித் திட்டத்தைப் பிரகடனம் செய்திடுக! n    வரலாறு படைத்திட்ட விவசாயிகள் போராட்டத்தைத் தள்ளி வைப்பதற்கு  அடிப்படையாக இருந்த, சிங்கு எல்லையில் தியாகிகளான அனை த்து விவசாயிகளுக்கும் நினைவிடம் அமைப்பது, இழப்பீடு வழங்குதல், தியாகிகளின் குடும்பத்தினருக்கு மறுவாழ்வு அளித்திடல், நிலுவை வழக்குகள் அனைத்தையும் விலக்கிக்கொள்ளுதல், உள்துறை இணை அமைச்சரான அஜய் மிஷ்ரா மீது வழக்கு தொடுத்தல் முதலியவை  தொடர்பாக ஒன்றிய அரசாங்கம் அளித்திட்ட எழுத்துப்பூர்வமான உறுதிமொழிகளை அமல்படுத்துக!
  15. தொழிலாளர்களின் உரிமை களைப் பறித்திடும் நான்கு தொகுப்புச் சட்டங்களையும் விலக்கிக்கொள்க; பணியிடங்களில் சமத்துவத்தை யும் பாதுகாப்பையும் உத்தரவாதப் படுத்துக; தொழிலாளர்களைக் ‘கேசு வல்’ தொழிலாளர்களாக மாற்று வதை நிறுத்துக; வீடுகளில் அமர்ந்து  வேலை செய்திடும் தொழிலாளர்கள், சாலையோர வியாபாரிகள், பழைய சாமான்களை சேகரிக்கும் தொழிலாளர்கள், வீட்டு வேலை செய்பவர்கள், கட்டுமானத் தொழி லாளர்கள், புலம்பெயர் தொழி லாளர்கள், திட்டப் பணியாளர்கள், விவசாயத் தொழிலாளர்கள், கடை களில் வேலை செய்பவர்கள், சுமை தூக்குபவர்கள், உப்பளத் தொழி லாளர்கள், பீடித் தொழிலாளர்கள், கள் இறக்குபவர்கள், ரிக்சா ஓட்டு பவர்கள், ஆட்டோ/டாக்சி ஓட்டுநர்கள், மீனவர்கள் முதலான முறைசாராத் தொழிலாளர்கள் அனைவரையும் பதிவு செய்து, அனைவருக்கும் ஓய்வூதியம் உட்பட ஒருங்கிணைந்த சமூகப் பாதுகாப்புத் திட்டத்தைக் கொண்டுவருக!
  16.     கட்டுமானத் தொழிலாளர்களுக்கு நல நிதியிலிருந்து நிதியைப் பெற்றுக் கொண்டு, இ.எஸ்.ஐ. திட்டத்தை அமல்படுத்துக; சுகாதாரப் பாது காப்புத் திட்டங்கள், மகப்பேறு பயன்கள், ஆயுள் மற்றும் ஊன முற்றோருக்கான இன்சூரன்ஸ் திட்டங்களை இ-ஷ்ரம் போர்ட்டலில் (E-Shram) பதிவு செய்திடும்  அனைத்து தொழிலாளர்களுக்கும் அமல்படுத்துக!
  17.      வீடுகளில் வேலை செய்திடும் தொழி லாளர்களுக்கு சர்வதேச தொழி லாளர் ஸ்தாபனத்தின் தீர்மானங் களை ஏற்றுக்கொண்டு, உரிய சட்டங்களைக் கொண்டுவருக; புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ஒருங்கிணைந்த கொள்கையை உருவாக்கிடுக; 1979ஆம் ஆண்டு மாநிலங்களுக்கிடையேயான புலம்பெயர் தொழிலாளர்கள் (வேலைவாய்ப்பை முறைப்படுத்தும்) சட்டத்தை வலுப்படுத்திடுக; அவர் களுக்கு சமூகப் பாதுகாப்பை உத்தர வாதப்படுத்திடுக!
  18.     புதிய ஓய்வூதியத் திட்டத்தைக் கிழித்  தெறிக, பழைய ஓய்வூதியத் திட்டத்தை  மீண்டும் கொண்டுவருக. அனை வருக்கும் சமூகப் பாதுகாப்பை அளித்திடுக!
  19.  பெரும் பணக்காரர்கள் மீது வரி விதித்திடுக; கார்ப்பரேட் வரியை உயர்த்திடுக; செல்வ வரியையும் வாரிசு வரியையும் மீண்டும் கொண்டு வருக!
  20.     பேச்சுரிமை, அரசுக்கு எதிராகக் கருத்து கூறும் உரிமை, மதச் சுதந்திரம், பன்முகக் கலாச்சாரங்கள், மொழிகள், சட்டத்திற்கு முன் அனை வரும் சமம் மற்றும் நாட்டின் கூட்டாட்சி அமைப்பு முறை முதலான  அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை விழுமியங்களின் மீதான தாக்குதல்களை நிறுத்துக!

- தொகுப்பு : ச.வீரமணி