புதுதில்லி, ஜன.8- உத்தரப்பிரதேசத்தில் பிப்ரவரி 10,14, 20, 23, 27 மற்றும் மார்ச் 3 மற்றும் 7 ஆகிய தேதிகளில் ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. பஞ்சாப், உத்தர்கண்ட், கோவா வில் பிப்.14-ஆம் தேதி ஒரே கட்ட மாக தேர்தல் நடைபெறுகிறது மணிப்பூரில் இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது (பிப்ரவரி 27, மார்ச் 3) வாக்கு எண்ணிக்கை மார்ச் 10-ஆம் தேதி நடைபெறுகிறது. உத்தரப்பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய ஐந்து மாநிலங்களின் சட்ட சபை தேர்தலை நடத்த தேர்தல் கமிஷன் தயாராகி விட்டது. அதற் கான தேர்தல் தேதிகள் அறிவிக்கப் பட்டுள்ளன. அதனால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் ஐந்து மாநிலங்களிலும் உடனடியாக அமலுக்கு வந்தது. தற்போதைய உத்தரபிரதேச சட்டசபையின் பதவிக்காலம் மே மாதத்தில் முடிவடையும் நிலையில், மற்ற நான்கு சட்டசபைகளின் பதவிக் காலம் மார்ச் மாதத்தில் வெவ்வேறு தேதிகளில் முடிவடைகிறது. கொரோனா, ஒமைக்ரான் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் இந்தத் தேர்தல்களை நடத்த ஆணை யம் முடிவு செய்துள்ளது. நோய்த் தொற்றுப் பரவலால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் கறாராக அதே நேரத்தில் கடுமையான விதிகளுக்கு உட்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. கோவா, மணிப்பூர், உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் மொத்தம் 690 சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா தெரி வித்துள்ளார். கடந்த காலங்களில் வாக்குப்பதிவு சதவீதம் குறைவான இடங்களில் தேர்தல் ஆணையம் தலையிட்டு வாக்குப்பதிவு சத வீதத்தை அதிகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளும்.
இந்தத் தேர்தலில் 18.34 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ள னர். இவர்களில் பெண்கள் 8.55 கோடி. அனைத்து மாநிலங்களிலும் பெண் களின் பங்களிப்பு அதிகரித்துள்ளது. பாலின விகிதமும் அதிகரித்துள்ளது. 24.9 லட்சம் பேர் முதல்முறை வாக்கா ளர்களாக உள்ளனர். 2017-ஆம் ஆண்டை விட வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கை 16 சதவீதம் அதிகரித்து ள்ளது. வாக்குப்பதிவு நேரம் ஒரு மணி நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. தொலைக்காட்சியில் அரசியல் கட்சி கள் பிரச்சாரம் செய்யும் நேரம் இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது. தொற்றுப்பரவலால் வேட்பாளர்கள் முடிந்தவரை டிஜிட்டல், காணொலிக் காட்சி மூலம் பிரச்சாரம் செய்வது நல்லது. ஜனவரி 15-ஆம் தேதி வரை பிரச்சாரம், இருசக்கர வாகனப் பேரணி, ஊர்வலம் உட்பட எதற்கும் அனுமதி கிடையாது. கொரோனா காரணமாக ஒரு வாக்குச் சாவடிக்கு அதிகபட்ச வாக்கா ளர்களின் எண்ணிக்கை 1,500 இலிருந்து 1,250 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. சில வாக்குச்சாவடிகள் பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளால் மட்டுமே நிர்வகிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்குச் சாவடிகள் மாற்றுத்திறனாளிகள் எளிதில் வந்து வாக்களிப்பதற்கு ஏது வாக மாற்றப்படும். வாக்குச்சாவடி அலுவலர்களுடன் கூடிய வாக்குச்சாவடிக் குழு மூத்த குடிமக்கள் (வாக்காளர்களின்) வீட்டிற்கே சென்று அவர்களின் தபால் வாக்குகளைப் பெறலாம். இது வீடியோவில் பதிவு செய்யப்படும். தேர்தல்களுக்கு அரசு இயந்திரங் களை தவறாக பயன்படுத்துவதை ஆணையம் பொறுத்துக்கொள்ளாது எனக் கூறியுள்ள சுஷில் சந்திரா இலவசங் கள் எந்த வகையிலும் அனுமதிக்கப் படாது என்றார். தேர்தல் நடத்தை விதி மீறல், தேர்தல் முறைகேடு தொடர்பான புகார்களை சி-விஜில் செயலி மூலம் தெரிவிக்கலாம்