புதுதில்லி, மே 31- இந்தியாவில் 5-ஜி அலைக் கற்றை ஏலத்திற்கான அடிப் படைப் பணிகள் பணிகளை இந்தியா தொடங்கியுள்ள தாக தொலைத்தொடர்புத் துறை செயலாளரும், டிஜிட்டல் தொடர்பு ஆணை யத் தலைவருமான கே.ராஜா ராமன் தெரிவித்துள்ளார். 2022-23-ஆண்டுக்குள் 5-ஜி மொபைல் சேவைகளை வெளியிட தொலைத் தொடர்பு நிறுவனங்கள் உத்தேசித்துள்ளன. பிஎஸ்என்எல், ஏர்டெல், ரிலையன்ஸ், ஜியோ, வோடோபோன்-ஐடியா உட்பட அனைத்து தொலைத் தொடர்பு நிறுவனங்கள் 5-ஜி நெட்வொர்க்குகளை கட்ட மைப்பை உருவாக்கி வரு கின்றன. இந்தாண்டு ஆண்டு மேற்கொள்ளப்படும். 5-ஜி அலைக்கற்றை ஏலத்திற்குப் பிறகு தங்களின் 5-ஜி சேவை களை உருவாக்க ஆறு மாதங் கள் தேவைப்படும் என்று நிறுவனங்கள் கூறியிருந்தன. 5-ஜி அலைக்கற்றை ஏலம் குறித்து ஒன்றிய அரசு தொலைத்தொடர்பு நிறுவன ங்களுடன் பேசி வருகிறது. இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் (IoT), செயற்கை நுண்ணறிவு (AI), ரோபோ டிக்ஸ் மற்றும் கிளவுட் கம்ப்யூட்டிங் போன்ற 5-ஜி சார்ந்த தொழில்நுட்பங் களில், இந்தியாவிற்கு 2025 ஆம் ஆண்டுக்குள் 2 கோடியே இருபது லட்சம் தகுதி வாய்ந்த வல்லுநர்கள் தேவைப்படுவர். உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை (டிபிஐஐடி) வழங்கிய தரவு களின்படி, தொலைத் தொடர்பு துறையில் ஏப்ரல் 2000-ஆம் ஆண்டு முதல் 2021-ஆம் ஆண்டு மார்ச் வரை 37.97 பில்லியன் டாலர்கள் அந்நிய நேரடி முதலீடாக வந்துள்ளது.