புதுதில்லி,செப்.24- தில்லி ரோஹினி பகுதியில் உள்ள கீழமை நீதிமன்றத்தில் செப்டம்பர் 24 அன்று வழக்கு விசாரணைக்கு பிரபல ரவுடி ஜிதேந்தர் கோகி ஆஜரானார். அப்போது வழக்கறி ஞர்கள் உடையில் வந்திருந்த 2 பேர் திடீரென்று துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் ரவுடி ஜிதேந்தர் கோகி உயிரிழந்தார். இதனை தொடர்ந்து போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ரவுடிகள் 3 பேர் உயிரிழந்தனர்.