ஜம்மு-காஷ்மீரில் பள்ளிகள் திறப்பு
இந்தியா - பாகிஸ்தான் போர் பதற் றம் காரணமாக ஜம்மு-காஷ்மீ ரில் இயல்பு நிலை கடுமையாக பாதிக்கப்பட்டது. பாகிஸ்தான் ராணுவ தாக்குதலால் முன்னெச்சரிக்கை நட வடிக்கையாக ஜம்மு-காஷ்மீரில் உள்ள பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறு வனங்களுக்கு கடந்த ஒரு வார காலமாக விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. தற்போது போர் பதற்றம் முடிவுக்கு வந்த நிலையில், செவ்வாய்க்கிழமை முதல் ஜம்மு-காஷ்மீரின் ரியாஸி உள் ளிட்ட ஒரு சில மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டுள் ளன. பாகிஸ்தான் எல்லையையொட்டி யுள்ள முசாபர்பாத், குப்வாரா, பந்திப் போர், பூஞ்ச், பாரமுல்லா உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த சில நாட்களில் கல்வி நிறுவனங்கள் திறக்கப்படும் என செய்திகள் வெளியாகியுள்ளன. அமிர்தசரஸ்
பஞ்சாபில் விஷச்சாராயம் அருந்தி 14 பேர் பலி அமிர்தசரஸ் காவல்துறை தீவிர சோதனை
பஞ்சாப் மாநிலத்தின் முக்கிய நக ரான அமிர்தசரஸ் அருகே உள்ள தெர்வால், மார்ரி, படல்பூரி, தல் வாண்டி, பங் காலி ஆகிய 5 கிராமங்க ளில் விஷச்சாராயம் குடித்தவர்களுக்கு தீவிர உடல் நலக்குறைவு ஏற்பட்டது. மொத்தம் 20 பேர் அமிர்தசரஸ் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட னர். செவ்வாய்க்கிழமை மதிய நிலவரப் படி ஒவ்வொருவராக 14 பேர் அடுத்தடுத்து உயிரிழந்தனர். மேலும் 6 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண் ணிக்கை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ள தாக செய்திகள் வெளியாகியுள்ளன. விஷச் சாராயம் விற்பனை செய்த பிரப்ஜீத் சிங் உட்பட 5 பேரை அமிர்தசரஸ் காவல்துறை யினர் கைது செய்துள்ளனர். அமிர்தசரஸ் முழுவதும் சோதனை மேலும் பிரப்ஜீத் சிங் கும்பலிடம் மொத்தம் 50க்கும் மேற்பட்டோர் விஷச் சாராயம் வாங்கி அருந்தியுள்ளனர். ஆனால் இதுவரை 20 பேர் மட்டுமே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட் டுள்ளனர். மீதமுள்ள நபர்கள் மருத்துவ பரிசோதனைக்கு பயந்து தகவல் அளிக்காமல் வீடுகளுக்குள் முடங்கி உள்ளனர். இதனால் விஷச்சாராயம் குடித்த மேலும் பலரைக் கண்டறிய அமிர்தசரஸ் காவல்துறை வீடு வீடாக சோதனை நடத்தி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. புதுதில்லி
ஆபரேசன் சிந்தூரால் இந்தியாவுக்கு ரூ.50,000 கோடி இழப்பு
பஹல்காம் பயங்கரவாத தாக்கு தலுக்கு பதிலடியாக “ஆபரேசன் சிந்தூர்” என்ற பெயரில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ் தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கவராத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது. இந்நிலையில், “ஆபரேசன் சிந்தூர்” நடவடிக்கையால் இந்தியாவுக்கு ஏற் பட்ட மொத்த பொருளாதார இழப்பு ரூ. 50,000 கோடிக்கு மேல் இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் ராணுவச் செலவுகள் ரூ.20,000 முதல் 30,000 கோடி, வர்த்தக இழப்புகள் ரூ.5,000 கோடி, சுற்றுலா மற்றும் பங்குச் சந்தை பாதிப்பு கள் ரூ.15,000 முதல் 20,000 கோடி வரை இருக்கலாம் என மதிப்பீடு தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவின் 2024-25ஆம் ஆண்டு ஒன்றிய பட்ஜெட்டில் பாதுகாப்புத் துறைக்கு மட்டும் ரூ.6.21 லட்சம் கோடி யாக ஒதுக்கீடு செய்யப்பட்டது. தற்போது “ஆபரேசன் சிந்தூர்” நடவடிக்கையால் பாதுகாப்பு துறைக்கான பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதிக்கு மேலும் கூடுதல் செலவு ஆக வாய்ப்புள்ளது. எதிர்காலத் தில், இந்தியா – பாகிஸ்தான் இடையே மோதல் தொடர்ந்தால் பொருளாதார இழப்பு மேலும் அதிகரிக்கலாம் என பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.