states

img

மாடுகளை கடத்தியதாக முஸ்லிம் இளைஞர்கள் 3 பேர் அடித்துக் கொலை... திரிபுரா பாஜக ஆட்சியில் அரங்கேறிய கொடூரம்...

அகர்தலா:
திரிபுராவின் கோவாய்மாவட்டத்தில் கால்நடைகளைத் திருட முயன்றதாக கூறி, முஸ்லிம் இளைஞர்கள் 3 பேர் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட் டுள்ளனர்.வடக்கு மகாராணிபூர் கிராமம் அருகே, ஞாயிறன்று அதிகாலை இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

மினிவேனில் 5 கால்நடைகள் அகர்தலா நோக்கி கொண்டு செல்லப்படுவதை, இங்குள்ள நமஞ்சோய்பாரா கிராமத்தைச் சேர்ந்த ஒரு கும்பல், அதிகாலை 4.30 மணிக்குப் பார்த்துள்ளது. பின்னர் அந்தவாகனத்தை துரத்திச் சென்று வடக்கு மகாராணிபூர் கிராமம் அருகே மடக்கிய அந்தகும்பல், வாகனத்தில் இருந்தவர்கள் மீது பல்வேறு ஆயுதங்களை கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் 2 பேர்சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் பலியான நிலையில், ஒருவர் தப்பியுள்ளார். ஆனால், அவரையும் வடக்குமகாராணிபூருக்கு அருகிலுள்ள பழங்குடியின குக்கிராமமான முங்கியாகாமியில் மடக்கிய கும்பல், அங்கு வைத்தே அடித்துக் கொன் றுள்ளது.இச்சம்பவம் பெரும்அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், திரிபுரா காவல்துறை தற்போது வழக்கு பதிவு செய்துள்ளது.கொல்லப்பட்டவர்கள் செபாஹிஜாலா மாவட்டத் திற்கு உட்பட்ட சோனாமுரா பகுதியைச் சேர்ந்த ஜெயத்ஜூசைன் (30), பிலால் மியா(28) மற்றும் சைபுல் இஸ்லாம்(18) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

;