states

img

'அக்பர்-சீதா' பெயர் வைத்த அதிகாரி இடைநீக்கம்!

சிங்கங்களுக்கு 'அக்பர்-சீதா’ என பெயர் வைத்ததற்காக திரிபுரா மாநில முதன்மை வன அதிகாரி பிரபின் லால் அகர்வால்லை அம்மாநில பாஜக அரசு இடைநீக்கம் செய்துள்ளது.
மேற்குவங்க மாநிலத்தில் உள்ள சிலிகுரி உயிரியல் பூங்காவிற்கு பிப்.12-ஆம் தேதி 2 சிங்கங்கள் கொண்டுவரப்பட்டன. 7 வயது உள்ள ஆண் சிங்கத்திற்கு அக்பர் எனவும், 6 வயதுள்ள பெண் சிங்கத்திற்கு சீதா என்றும் பெயரிடப்பட்டது. சிங்கங்களுக்கு அக்பர்-சீதா என பெயர் வைக்கக் கூடாது என வி.எச்.பி சார்பில் தொடரப்பட்ட வழக்கில் பெயர்களை மாற்றுமாறு மாநில அரசுக்கு கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில், சிங்கங்களுக்கு 'அக்பர்-சீதா’ என பெயர் வைத்ததற்காக திரிபுரா மாநில முதன்மை வன அதிகாரி பிரபின் லால் அகர்வால்லை அம்மாநில பாஜக அரசு இடைநீக்கம் செய்துள்ளது.