சென்னை, ஜூலை 18- கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரிலுள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவி ஸ்ரீமதியின் சந்தேக மர ணம் குறித்து நீதிவிசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று தமிழக அரசுக்கு, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக சங்கத்தின் மாநிலத் தலைவர் என். ரெஜீஸ்குமார், மாநிலச் செயலாளர் எஸ். பாலா ஆகியோர் அறிக்கை ஒன்றை விடுத்துள்ளனர். அதில், “மாணவி ஸ்ரீமதியை இழந்து தவிக்கும் குடும்பத்திற்கு 25 லட்சம் ரூபாய் நிவாரணம், குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப்பணி வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும். சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியைப் போன்ற தனியார் பள்ளி நிர்வாகங்களின் மோசமான நடவடிக்கைகள் குறித்து மாணவர்கள் மற்றும் பெற்றோரால் முன்வைக்கப்படும் புகார்கள் குறித்து உரிய முறையில் விசாரித்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதை தமிழக அரசு உறுதிப்படுத்த வேண்டும். கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கடந்த ஆண்டு களிலும் சில மாணவர்கள் மரணமடைந்துள்ளனர்.
இம் மரணங்க ளுக்கும் பள்ளி நிர்வாகம்தான் காரணம் என குற்றம்சாட்டப்பட்டது. ஆனால், அது குறித்து முழுமையான விசாரணையோ, நடவடிக்கையோ கடந்த காலத்தில் இருந்த தமிழக அரசால் மேற்கொள்ளப்படவில்லை. எனவே, சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இதுவரை நடை பெற்ற மாணவர்களின் மரணம் குறித்து உயர்நீதிமன்ற நீதிபதி தலைமை யில் விரிவான நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். தனியார் கல்வி நிலையங்களில் தொடரும் மாணவர்களின் மரணத்தை தடுத்தி டவும், மாணவர்கள் எவ்வித பயமுமின்றி தங்களது கல்வியை தொடர்வ தற்கான சூழலை உருவாக்கிடவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளனர். மேலும், இக்கோரிக்கைகளை வலியுறுத்தியும் மாணவி ஸ்ரீமதி யின் மரணத்திற்கு நீதி கேட்டும், கல்வி வளாக மரணங்களை தடுக்க வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் போராட்டங்களை முன்னெடுக்குமாறும் அழைப்பு விடுத்துள்ளனர்.