states

img

மதுரை காமராசர் பல்கலை.யில் ஆட்குறைப்பு

சென்னை,ஏப்.10- மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் ஆட்குறைப்பு நடவடிக்கையை உடனடியாக கைவிட வேண்டும் என்று இந்திய ஜன நாயக வாலிபர் சங்கம் வலியுறுத்தி யுள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் என்.ரெஜீஸ்குமார், மாநிலச் செயலாளர் எஸ். பாலா ஆகியோர் விடுத்திருக்கும் அறிக்கை வருமாறு:-     மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் 1996-ன்படி ஆசிரியர் அல்லாத அனுமதிக்கப் பட்ட பணியிடங்கள் 983. இவற்றில் தற்போது ஆசிரியர் அல்லாத பணியி டங்களில் 274 பேர் மட்டுமே நிரந்தரப் பணியாளர்களாக பணிபுரிகின்றனர். மீதமுள்ள 701 பணியிடங்கள் காலி யாக உள்ளன.  கடந்த பத்தாண்டுகளில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள பாடப்பிரிவு களுக்கான துறைகள், ஆண்-பெண் விடுதி ஆகியவற்றில் ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் சுமார் 130 பணியிடங்கள் காலியாக உள்ளன. ஆக மொத்தம் 831 பணியிடங்கள் காலியாக உள்ளன.

இந்த 831 பணியிடங்களில் தொகுப்பூதியத்தில் 290 பேரும், தினக்கூலி 240 பேரும், ஒப்பந்த அடிப் படையில் 80 பேர் என மொத்தம் 610 பணியாளர்கள் கடந்த  பத்தாண்டு களுக்கு மேல் பணியாற்றி வரு கின்றனர்.  இந்நிலையில் திடீரென நிதிச் சுமையை காரணம்காட்டி மதுரை காமராசர் பல்கலைக்கழக நிர்வாகம், நிர்வாக தேவைக்கு அதிகமாக பணி யாட்கள் இருப்பதாக கூறி முதற் கட்டமாக 135 பேரை ஏப்.8 முதல் பணிக்கு வர வேண்டாம் என அறிவிப்பு வெளியிட்டு வீட்டிற்கு அனுப்பியுள்ளது. மீதமுள்ள தொகுப் பூதியம் ஒப்பந்தம் மற்றும் தினக்கூலி பணியாளர்களையும் வெளியேற்ற திட்டம் இருப்பதாக அறிகிறோம். இத்தகைய நடவடிக்கைகளால் 135  பணியாளர்களின் குடும்பம் மற்றும் குழந்தைகளின் கல்வி, எதிர்காலம் கேள்விக்குறியாக மாறியுள்ளது. நிர்வாகத்தின் இத்தகைய பணி யாளர் விரோதப் போக்கை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தமிழ் நாடு மாநிலக் குழு கண்டிக்கிறது. எனவே, பல ஆண்டுகளாக பணி புரியும் இவர்களை மீண்டும் பணியில் அமர்த்தி, கல்வித்தகுதி அடிப்படை யில் வரைமுறைபடுத்தி பல்கலைக் கழக மானியக் குழுவின் வழி காட்டுதலின் அடிப்படையில் முறை யாக ஊதியம் வழங்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்தி ருக்கிறார்கள்.