சிவகங்கை,ஜன.17- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்- கலைஞர்கள் சங்கத்தின் மாநிலக்குழு உறுப்பினரும் எழுத்தாளருமான ஜனநேசன் என்ற வீரராகவன் (வயது 70) திடீர் உடல்நலக்குறைவால் காலமானார். ஜனவரி 18 பகல் 12 மணிக்கு சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அவரது உடல் தானம் செய்யப்பட உள்ளது. எழுத்தாளர் ஜன நேசன் பல்வேறு புத்தகங்கள், தீக்கதிர் வண்ணக்கதிர், செம்மலர் மாத இதழ், விகடன் வார இதழ் ஆகிய வற்றில் ஏராளமான கதைகள், கட்டுரைகள் எழுதியுள் ளார். அண்மையில் சென்னையில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சியில் அவருடைய புத்தகம் வெளி யிடப்பட்டது. இவருடைய புத்தகங்கள் தெலுங்கு மொழியிலும் ஐரோப்பிய மொழிகளிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஜனநேசன், காரைக்குடி அரசு கலைக் கல்லூரியில் நூலகராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் . அனைத்துத்துறை ஓய்வு பெற்றோர் சங்கத்தின் காரைக்குடி வட்டார பொறுப்பாளராக செயல்பட்டு வந்தார். அவருக்கு மனைவியும் இரண்டு மகன்களும் உள்ளனர். தற்போது தெலுங்கானா மாநிலத்தில் உள்ள அவரது மகனுடன் வசித்து வந்த அவர், உடல் நலம் பாதிக்கப்பட்டு வெள்ளிக்கிழமையன்று காலை 7 மணியளவில் காலமானார். அவரது உடல் காரைக்குடி ஸ்ரீராம் நகருக்கு வெள்ளியன்று இரவு 7 மணிக்கு தெலுங்கானாவில் இருந்து கொண்டு வரப்பட்டது. ஜனவரி 18 சனிக்கிழமை பகல் 12 மணிக்கு சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அவரது உடல் தானம் செய்யப்படுகிறது. இரங்கல் ஜனநேசன் மறைவுக்கு தமுஎகச மாநிலத் தலைவர் மதுக்கூர் இராமலிங்கம், மாநிலப் பொதுச் செயலாளர் ஆதவன் தீட்சண்யா ஆகியோர் இரங்கல் தெரிவித் துள்ளனர். சிபிஎம் மாவட்டச் செயலாளர் மோகன் இரங்கல் தெரிவித்துள்ளார்.