மூலதனம் உபரி உழைப்புக்கான தன் கண்மூடித்தனமான, கட்டுக்கடங்காத லாபவெறியால் வேலை - நாளின் அதிகபட்ச எல்லைகளையும் மீறிச் செல்கிறது; உடலின் ஆரோக்கியமான பராமரிப்புக்கு உரிய நேரத்தை அபகரித்துக் கொள்கிறது. நல்ல காற்று, சூரிய ஒளி ஆகியவற்றைப் பெறுவதற்கு அவசியமான நேரத்தைக் களவாடுகிறது. கொதிகலனுக்கு நிலக்கரியும், இயந்திர சாதனத்துக்கு மசையும் எண்ணெயும் இடுவது போல, ஓர் உற்பத்திச் சாதனமாகவே பாவித்து தொழிலாளியின் உணவு நேரத்தையும் உற்பத்தி நிகழ்முறையுடனேயே மூலதனம் இணைத்து விடுகிறது.
- காரல் மார்க்ஸ் -