states

img

‘உரையாடலில் கிடைக்கும் சொற்கள் புதிய கதவைத் திறந்துவிடக்கூடும்’

புதுக்கோட்டை, அக்.14-  கூடி அமர்ந்து உரையாடும்போது கிடைக்கும் சொற்கள் படைப்பாளிகளுக்கு கூடு தல் கதவைத் திறந்துவிடக்கூடும் என தமுஎகச மாநில துணைத் தலைவரும், திரைக்கலை ஞருமான ரோகிணி கூறியுள்ளார். புதுக்கோட்டையில் அக்டோபர் 14 முதல் 18 வரை உலகத் திரைப்பட விழா நடைபெற்று வருகிறது. வெள்ளிக்கிழமை நடைபெற்ற தொடக்க விழாவிற்கு தலைமை வகித்து அவர் பேசியதாவது: இது திரைப்படங்களைப் பார்ப்பதற்கான நிகழ்வு மட்டுமல்ல. வெறும் திரைப்படங் களாக மட்டுமல்லாமல் அதில் உள்ள அரசி யலையும் பார்க்க வேண்டும். நாம் வாழ்க்கை யின் அனைத்துமே அரசியல் சார்ந்ததாகத் தான் இருக்க முடியும். அரசியல் இல்லாத வாழ்வு என்பது எப்பொழுதும் யாருக்கும் இருந்ததில்லை. மவுனமாக இருப்பதுகூட ஒரு அரசியல்தான். அரசியல் இல்லாத ஒரு வாழ்வு இருக்கமுடியாது என்கிறபோது, நமக்குள்  உள்ள அரசியல் உணர்வை வளர்த்துக் கொள்வதற்கான வழிமுறைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். எளிய  மனிதனின் வாழ்க்கை இங்கே இருக்கலாம். இராக்கிலே யும் இருக்கலாம். ஆனால், அவனுடைய  வலி என்பது ஒன்றுதான். அந்த வலியை எதிர்த்து அவர்கள் செய்திருக்கக்கூடிய வழிமுறைகள் என்ன என்பதை திரைமொழி யோடு சேர்ந்து பார்க்கக்கூடிய ஒரு வாய்ப்பு நமக்கு அமைந்துள்ளது. திரைமொழி என்பது மிக முக்கியமானது. ஒரு கதையை நாம் படிக்கும் போது அது நமக்கு பிடித்த கதையாக மாறுகிறது. அதே கதை திரையில் புது மொழியாக மாறி முக்கிய மான பங்கு வகிக்கிறது. இந்த திரைப்படங்கள் சொல்லும் பிரச்சனைகளை நீங்கள் புரிந்து கொண்டு விவாதிக்க வேண்டும். உரையாட லின் போது கிடைக்கும் சொற்கள் படைப்பாளி களுக்கு கூடுதலாக ஒரு கதவைத் திறந்து விடக் கூடும்.  இவ்வாறு அவர் பேசினார்.

கோலாகல துவக்கம்

முன்னதாக தமிழ்நாடு முற்போக்கு எழுத்தா ளர் - கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் 7-ஆவது உலகத்திரைப்பட விழா புதுக்கோட்டை ‘வெஸ்ட்’ திரையங்கத்தில் வெள்ளிக்கிழமை யன்று கோலாகலமாக தொடங்கியது. தொடக்க விழாவிங்கு தமுஎகச மாநில துணைத் தலைவரும், திரைக்கலைஞருமான ரோகிணி தலைமை வகித்தார். பொதுச் செய லாளர் ஆதவன் தீட்சண்யா தொடக்கவுரை யாற்றினார். விழாவுக்கான நோக்க உரையை மாநில துணைப் பொதுச்செயலாளர் களப் பிரன் வழங்கினார். திரையிடல் குறித்து திரைத்துறை பேராசிரியர் எம்.சிவக்குமார் பேசினார். விழாவில் கலந்துகொண்டு புதுக்கோட்டை  மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, கந்தர்வ கோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரை, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் கவிச்சுடர் கவிதைப்பித்தன், தொழிலதிபர் அ.ப.மணிகண்டன், நகர்மன்ற உறுப்பினர் செந்தாமரை பாலு உள்ளிட்டோர் பேசினர். முன்னதாக வரவேற்புக்குழுத் தலைவர் கிருஷ்ணவரதராஜன் வரவேற்க, துணைத் தலைவர் சு.மதியழகன் நன்றி கூறினார். மாவட்டச் செயலாளர் எம்.ஸ்டாலின் சரவணன் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். விழா வில் திரைப்பட இயக்குநர்கள் சசி, வினோத் ராஜ், ஒளிப்பதிவாளர் விக்னேஷ்குமுளை, தமுஎகச நிர்வாகிகள் நந்தலாலா, நா.முத்து நிலவன், ஆர்.நீலா, ஸ்ரீரசா, வெண்புறா, ராசி.பன்னீர்செல்வன், கி.ஜெயபாலன், இரா.தனிக்கொடி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். தொடர்ந்து கூழாங்கல், ஹிட் தி ரோடு,  கம்பார்ட்மெண்ட எண்.6 உள்ளிட்ட திரைப்படங்கள் திரையிடப்பட்டன. தொடர்ந்து 5 நாட்களும் 11 நாடுகளைச் சேர்ந்த 23 திரைப்படங்கள் திரையிடப்படவுள்ளன. திரைப்படங்கள் குறித்து ஒவ்வொரு நாளும் திரை ஆளுமைகளுடன் எழுத்தாளர்கள் சந்திப்பு நடைபெற உள்ளது.