states

அதிமுக அலுவலகம் பூட்டப்பட்டது ஏன்? சட்ட அமைச்சர் விளக்கம்

சென்னை, ஜூலை 12 - அதிமுக அலுவலகம் பூட்டப்பட்டது சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டதால் தான் என்றும், யாருக்கும் சாதகமாக அரசு செயல்படவில்லை என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத் துடன் இணைவு பெற்ற அனைத்து அரசு சட்டக் கல்லூரிகளிலும் பயிற்றுவிக்கப்படும் 5 ஆண்டு சட்டப் படிப்புகளுக்கான 2022-23  ஆண்டிற்கான விண்ணப்ப பதிவை தரமணி யில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த  அவர், “ஆன்லைன் ரம்மி தடை தொடர்பாக குழு அமைக்கப்பட்டு பரிந்துரைகள் வழங்கப் பட்டுள்ளது. அந்த பரிந்துரைகளை பார்க்கும்  போது இது தமிழ்நாடு அரசு மட்டும் செய்யக் கூடிய ஒன்று அல்ல என்பது தெரிகிறது. தமிழ்நாட்டில் தடை செய்தாலும், அண்டை மாநிலங்கள் இருந்து கூட ரம்மி  விளையாடும் வாய்ப்பு இருக்கிறது. இது தொடர்பாக ஒன்றிய அரசிடம் கேட்டு பொது வான சட்டம் வருவதற்கான சூழலை ஏற்படுத்த வேண்டும். நாடு முழுவதும் சட்டம் கொண்டு வந்தால் தான் இதை ஒழிக்க  முடியும்”என்றார். அதிமுக பிரச்சனையில் நாங்கள் யாருக்கும் உடந்தையாக இல்லை. அங்கே பிரச்சனை செய்கிறவர்கள் நாங்கள் பிரச்சனை செய்ய போகிறோம் என சொல்லி விட்டா செல்வார்கள்?அதிமுக அலுவல கம் பூட்டப்பட்டது சட்டம் ஒழுங்கு பிரச்சனை  ஏற்பட்டதால் தான். இதில் யாருக்கும் சாதகமாக தமிழ்நாடு அரசு செயல்பட வில்லை. பிரச்சனை ஏற்பட்ட பிறகு காவல்துறை உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது எனவும் அமைச்சர் தெரிவித்தார். காரைக்குடி சட்டக் கல்லூரியில் இந்த  ஆண்டே மாணவர் சேர்க்கை நடைபெறும்.  தமிழ்நாட்டில் தேவையான சட்டக்கல்லூரி உருவாக்க நிதி கூடுதலாக தேவைப்படுகி றது. இருந்தாலும் காரைக்குடியில் மாண வர் சேர்க்கை தொடங்கப்படும். கூடுதல் கல்லூரி உருவாக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் கூறினார்.