2021-ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட காலமுறை தொழிலாளர் குறித்த கணக்கெடுப்புப்படி இந்தியாவில் சுமார் 10 கோடி (கேசுவல் தொழிலாளர்கள்) சாதா ரண தொழிலாளர்கள் உள்ளனர். சுமார் 5 கோடி தொழிலாளர்கள் எழுத்துப்பூர்வ வேலை ஒப்பந்தம் ஏதுமின்றி பணியாற்றி வருகின்றனர். ஒட்டு மொத்தத்தில் இந்த அடிப்படையில் நாடு முழுவதும் 15 கோடி தொழிலாளர்கள் உள்ள னர். நாட்டின் ஒட்டு மொத்த தொழிலாளர்களில் இவர்கள் மட்டும் 30 சதவீதம் உள்ளனர். தொழில்துறையின் வருடாந்திர ஆய்வு, மொத்த தொழில்துறை வேலைவாய்ப்பில் ஒப் பந்தத் தொழிலாளர்களின் வேலை 2004-ஆம் ஆண்டு 24 சதவீதமாக இருந்தது என்றும், 2017-ஆம் ஆண்டு இது 38 சதவீதமாக அதிக ரித்துள்ளது என்றும் தெரிவிக்கிறது. ஒப்பந்தத் தொழிலாளர்கள் தொழில் நுட்ப வல்லுநர்கள், ஓட்டுநர்கள், அலுவல கங்கள் மற்றும் வணிக வளாகங்களில் பணி யாற்றுகின்றனர். பலர் தொழிற்சாலையில் திற மையற்ற தொழிலாளர்கள் என்ற அடிப்படை யில் நிரம்பியுள்ளனர்.
காளான்களாக வளர்ந்துள்ள சப்ளையர்கள்
அவுட்சோர்சிங் ஒரு தொழிலாக மாறிய தால், அதிகரித்து வரும் தேவையை பூர்த்தி செய்ய பல உழைப்பாளிகளை சப்ளை செய்யும் நிறுவனங்கள் நாட்டில் காளான்கள் போல் வளர்ந்துவருகின்றன. 2001-ஆம் ஆண்டிற்குப் பிறகு, பொதுத் துறை நிறுவனங்களும் வேலைக்கு ஆள் எடுப்ப தில்லை. அவை அவுட்சோர்சிங் முறையை மேற்கொள்கின்றன. பொதுத் துறை நிறு வனங்களில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் 2011-12-ஆம் ஆண்டு ஒப்பந்தத் தொழிலாளர் களின் பங்கு 17.1 சதவீதம். இது 2015-16-ஆம் ஆண்டில் 19 சதவீதம் என அதிகரித்துள்ளது. உச்சபட்சமாக 2020-21-ஆம் ஆண்டில் அது 37.2 சதவீதமாக அதிகரித்துள்ளது.
நிரந்தரப் பணியிடங்கள் காலி...
மத்திய பொதுத்துறை நிறுவனங்களில் (CPSE) 2011-ஆம் ஆண்டு 2,68,815 ஒப்பந்தத் தொழிலாளர்கள் மட்டுமே இருந்தனர். 2021-ஆம் ஆண்டு 4,81,395 ஒப்பந்தத் தொழிலா ளர்களாக அதிகரித்திருந்தனர். இதிலிருந்து ஒரு விஷயம் தெளிவாகிறது. பல நிரந்தரப் பணி யிடங்கள் ஒப்பந்தப் பணிகளாக திட்டமிட்டு மாற்றப்படுகிறது என்பது தான். ஒப்பந்தத் தொழிலாளர்களின் பங்கு அதி கரிப்பு மற்றும் நிரந்தர வேலைவாய்ப்பில் சரிவு ஆகியவை இந்தியப் பொருளாதாரத்தின் நிலையை மோசமாக்கிவிடும் என்பது மட்டும் நிச்சயம். நாட்டில் உள்ள 150 மில்லியன் ஒப்பந்தத் தொழிலாளர்களில் பெரும்பான்மை யானோர் குறைந்த ஊதியம் பெறுகின்றனர் என்பதுதான் முக்கியமானது.