பழங்குடியின சமூகத்தினர் வரவிருக்கும் மக்க ளவைத் தேர்தலில் வாக்களித்து தங்கள் உரி மையைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்துகிறோம். ஆனால் வெளி மணிப்பூர் தொகுதியில் போட்டியிடு வதைத் தவிர்க்க வேண்டும் என்று கோரிக்கை விடு கிறோம் என பழங்குடியின தலைவர்கள் மன்றம் (ஐடிஎல்எப்) அறிக்கையில் வெளியிட்டுள்ளது.
இமாச்சலப் பிரதேசத்தில் நடைபெறவுள்ள சட்ட மன்ற இடைத்தேர்தலில் தகுதி நீக்கம் செய்யப் பட்ட 6 காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கும் பாஜக வாய்ப்பளித்துள்ளது.
உத்தரப்பிரதேசம் மாநிலம் பிலிபிட் தொகுதி யின் தற்போதைய பாஜக எம்பியான வருண் காந்திக்கு மீண்டும் சீட் வழங்காத நிலையில், தங்கள் கட்சியில் இணைய வாருங்கள் என வருண்காந் திக்கு காங்கிரஸ் மக்களவைத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி அழைப்பு விடுத்துள்ளார்.
கர்நாடகா மாநிலம் சித்ர துர்கா மாவட்டம் ஹோசதுர்காவில் ஆன்லைன் கிரிக்கெட் சூதாட்டம் மூலம் ரூ.1.5 கோடியை இழந்த அரசு அதிகாரியின் மனைவி தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக 13 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், 3 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர்.
தெலுங்கானா மாநிலத்தில் ஒட்டுகேட்புக்கான நவீன உபகரணங்கள் உதவியுடன் எதிர்க்கட்சியினரை உளவுபார்த்ததாக முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர ராவ் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தெலுங்கானா மாநிலம் செங்கிசெர்லாவில் உள்ள முஸ்லிம்கள் வெளி நாடுகளில் இருந்து வந்தவர்கள் என்று ஹைதராபாத் பாஜக வேட்பாளர் மாதவி லதா கூறியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அரவிந்த் கெஜ்ரிவால் கைதுக்கு எதிராக ஆம் ஆத்மி தரப்பில் தொடரப்பட்ட வழக்கை தில்லி நீதிமன்றம் புதனன்று விசாரிக்கிறது.
கர்நாடகாவில் குரங்கு காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில், சிக்கமகளூருவில் மூதாட்டி ஒருவர் உயிரிழந்துள்ளார். இதன் மூலம் அப்பகுதி யில் பலி எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது.
சட்டமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்க அனுமதி மறுத்த உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் ஏப்ரல் 1 அன்று விசாரிக்க உள்ளது.