states

12 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

சென்னை,ஜூன் 19- தமிழ்நாட்டில் 12 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம்  செய்து உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது. அதன்படி, நில சீர்திருத்த துறை ஆணையர் பீலா ராஜேஷ், எரிசக்தி துறை முதன்மைச் செய லாளராகவும், எரிசக்தி துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ரமேஷ் சந்த் மீனா, சிறப்பு முயற்சி கள் துறை கூடுதல் தலைமைச்  செயலாளராகவும் நியமிக்கப்பட் டுள்ளனர். திருவண்ணாமலை கூடுதல் ஆட்சியர் வீர் பிரதாப் சிங், வணிக வரித்துறை இணை ஆணையராக வும், பட்டு வளர்ச்சி துறை இயக்கு நர் விஜய ராணி, கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளரா கவும், தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை மேலாண்மை இயக்குநர் ஆயிஷா மரியம், சிறுபான்மையினர் நலத்துறை ஆணையராகவும், ஊரக வளர்ச்சி துறை இணைச் செயலாளர் சந்திர சேகர் சாமூரி, பட்டு வளர்ச்சி துறை  இயக்குநராகவும்நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சி நிறுவனத் தலைவர் விஜய குமார், தமிழ்நாடு நகர்புற உட்கட்டமைப்பு நிதி சேவைகள் நிறுவன தலைவராகவும், தமிழ்நாடு நகர்புற உட்கட்டமைப்பு நிதி சேவைகள் நிறுவனத் தலைவர் ஸ்வர்ணா, தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சி நிறுவன தலைவராகவும், நீர்வளத்துறை கூடுதல் செயலா ளர் கண்ணன், தமிழ்நாடு சிமெண்ட் நிறுவன மேலாண்மை இயக்குநராகவும் பணியிட மாற்றம்  செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.