states

இயல்பைவிட இன்று வெப்பம் அதிகரிக்கும்

சென்னை, ஜூன் 9- தமிழ்நாட்டில் சனிக்கிழமையும் (ஜூன் 10)  வெப்ப அலை வீசும் என்றும் மக்கள் அதிக நீர் பருக வேண்டும் என்றும் வானிலை ஆய்வு  மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை கேரள பகுதி களில் தொடங்கியுள்ளது. மேலும் இது தென் தமிழக பகுதிகளிலும் பரவியுள்ளது. மத்திய கிழக்கு, தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் நிலவிய தீவிர புயல்  ‘பிப்பர்ஜாய்’ வடக்கு - வடகிழக்கு திசையில் நகர்ந்து, கோவாவில் இருந்து மேற்கிலும்  மும்பையில் இருந்து மேற்கு-தென்மேற்கி லும் போர்பந்தரில் (குஜராத்) இருந்து  தென்-தென்மேற்கில் நிலை கொண்டுள்ளது. இது மேலும் வலுப்பெற்று வடக்கு-வட கிழக்கு திசையிலும் அதன் பிறகு வடக்கு-வடமேற்கு திசையிலும் நகரக்கூடும். இத்துடன், தமிழ்நாட்டில் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக, ஜூன் 9 முதல் 12 வரை தமிழ்நாடு மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்ன லுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி முதல் 41 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். ஒருசில இடங்களில் இயல்பிலிருந்து 2-4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். எனவே, பொதுமக்கள் அதிகமாக தண்ணீரை பருக வேண்டும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.