states

உச்சநீதிமன்றத் தீர்ப்பை செல்லாததாக்கும் எதேச்சதிகார அவசரச் சட்டத்தைத் திரும்பப்பெறுக!

புதுதில்லி, மே 20-  உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை செல்லாத தாக்கும் அவசரச்சட்டத்தை ஒன்றிய அரசாங்  கம் திரும்பப் பெற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.  இதுகுறித்து கட்சியின் அரசியல் தலை மைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி யிருப்பதாவது:  மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தில்லி யூனி யன் பிரதேச அரசாங்கத்தின் உரிமைகளை  உயர்த்திப்பிடித்து சமீபத்தில் உச்சநீதி மன்றத்தில் ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரச மைப்புச்சட்ட அமர்வாயம் அளித்திட்ட தீர்ப் பினை செல்லாததாக்கி, ஒன்றிய அரசாங்கம் பிறப்பித்துள்ள அவசரச் சட்டத்திற்கு அரசியல்  தலைமைக்குழு கடும் கண்டனம் தெரி வித்துக்கொள்கிறது. இவ்வாறு அவசரச்சட்டம் பிறப்பித்திருப்பது நீதிமன்ற அவமதிப்பு மட்டு மல்ல, அரசமைப்புச் சட்டத்தின் கூட்டாட்சி அம்  சத்தின் மீதும், உச்சநீதிமன்றத்தால் வரை யறுக்கப்பட்ட ஜனநாயக அரசாங்கத்தின் செயல்பாடுகள் மீதும், அவை மக்களுக்குப் பதில் சொல்லும் பொறுப்பு ஆகியவற்றின் மீதும் நேரடித் தாக்குதல்களாகும்.

உச்சநீதிமன்றத்தை அவமதிக்கும் செயல்

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பையே மீறி யிருக்கும் இந்தச் செயலானது, மோடி அர சாங்கத்தின் அப்பட்டமான எதேச்சதிகார செய லாகும். நாட்டின் நலன் கருதித்தான் இவ்வாறு அவசரச்சட்டம் பிறப்பிக்கப்பட்டிருப்பதாக அது கூறிடும் போலியான காரணங்கள், முத்  திரை பதித்த தீர்ப்பு வழங்கிய உச்சநீதி மன்றத்தின் அரசமைப்புச்சட்ட அமர்வா யத்திற்கு நாட்டின் நலன்பற்றி அக்கறை யில்லை என்பதுபோல் ஆகிறது. இது, உச்சநீதி மன்றத்தினையே வெளிப்படையாக அவ மதித்திடும் செயலாகும். இது மக்கள் மற்றும் தில்லி அரசாங்கத்தின் பிரச்சனைகள் மட்டுமல்ல, நாட்டு மக்கள் அனைவரையும் பாதிக்கக் கூடிய, அரச மைப்புச் சட்டம் அளித்துள்ள கூட்டாட்சித் தத்து வத்தினையே புல்டோசர் மூலம் இடித்துத் தரை மட்டமாக்கிடும் செயலாகும். இது எதிர்க்கப்பட வேண்டும். இந்த அவசரச் சட்டம் விலக்கிக் கொள்ளப்பட வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.  (ந.நி.)