states

தீக்கதிர் விரைவு செய்திகள்

ரயில்வேயில் மூன்று லட்சம் காலிப் பணியிடங்கள்

புதுதில்லி, டிச.11- ரயில்வே துறையில் 2.98 லட்சத்துக்கும் அதிகமான பணியிடங்கள் காலியாக இருப்ப தாக ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். மாநிலங்களவையில் காங்கிரஸ் தலை வர் மல்லிகார்ஜுன கார்கேவின் கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், “குரூப் ஏ பிரிவில் 2,201 காலிப் பணியிடங்கள், குரூப்  பி பிரிவில் 858 காலிப் பணியிடங்கள் நிரப்பப்  படாமல் உள்ளன. குரூப் சி பிரிவில் வடக்கு ரயில்வேயில் 38,754 பணியிடங்களும், மேற்கு ரயில்வேயில் 30,476 பணியிடங்களும் நிரப்பப்  படாமல் முதல் இரண்டு இடங்களில் உள்ளன. கிழக்கு ரயில்வேயில் 30,141 பணியிடங்க ளும், மத்திய ரயில்வேயில் 28,653 பணியி டங்களும் நிரப்பப்படாமல் உள்ளன எனத் தெரிவித்துள்ளார். ரயில்வேயில் 1991-ஆம் ஆண்டு 16,54,985 பணியாளர்கள் பணியாற்றினர். 2019-ஆம் ஆண்டு 12,48,101 பேர் பணியாற்றினர். 2019-ஆம் ஆண்டு ஜூன் 1-ஆம் தேதி  நில வரப்படி ரயில்வேயில் ஏ, பி, சி மற்றும் முந் தைய டி பிரிவுகளில் 2,98,574 காலியிடங்கள் உள்ளன. 2,94,420 பணியாளர்களை ஆட் சேர்ப்பு செய்வதற்கான பணிகள் நடந்து வருகிறது என்கிறது ஒன்றிய அரசு.

மண்டூஸ் புயலை கையாள்வதில் தோல்வி: சிபிஐ புகார்

சிபிஐ எம்பி பினாய் விஸ்வம் ஆந்திரப் பிரதேச முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு சனிக் கிழமை கடிதம் எழுதியுள்ளார், “மாநிலத்தில் மாண்டூஸ் புயலைக் கையாள்வதில் அரசு நிர்வா கம் தோல்வியடைந்தது” என குறிப்பிட்டுள்ளார். சூறாவளியால் மக்கள் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ள நகரங்கள் மற்றும் கிராமங்களை அவர் பார்வையிட்டார். இந்தப் பகுதிகளில் மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை என்று அவர் கூறினார்.

‘பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவோம்!’

இமாச்சலப் பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு ஞாயிற்றுக்கிழமை, சட்டப்பேரவைத் தேர்த லுக்கு முன்பு காங்கிரஸ் அளித்த 10 வாக்குறுதிகளை தனது அரசாங்கம் நிறைவேற்றும் என்றும் பழைய ஓய்வூதியத் திட்டத்தையும் அமல்படுத்தும் என்று கூறினார். 18 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு மாதம் ₹1,500 வழங்கப்படும் என்றும் காங்கிரஸ் கூறியுள்ளது.

இயல்பு நிலைக்கு  திரும்பிய சென்னை விமான நிலையம்

சென்னை, டிச.11-  வங்க கடலில் உருவான மாண்டஸ் புயல் மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது. இதன் காரணமாக கடந்த 2 நாட்களாக சென்னை மற்றும்  புறநகர் பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை கொட்டியது.  இதனால் கடந்த 2 நாட்களாக சென்னை விமான நிலையத்தில் விமான  சேவை பாதிக்கப்பட்டது. வெள்ளிக் கிழமை 14 விமானங்கள் ரத்து செய்யப் பட்டன. இதே போல் சனிக்கிழமை 19 விமானங்கள் ரத்து செய்யப்பட்டது. மேலும் நள்ளிரவு 1 மணி முதல் அதி காலை 3 மணி வரை 2 மணி நேரம் ஓடு  பாதையும் மூடப்பட்டது.  இந்த நிலையில் தற்போது பலத்த மழை, காற்று இல்லாததால் சென்னை யில் விமான சேவை மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பி உள்ளது. அனைத்து விமானங்களின் புறப்பாடு, வருகை சரியான நேரத்திற்கு மாறி இருக்கிறது. 

உருவாகிறது  புதிய புயல்

சென்னை, டிச.11- தெற்கு அந்தமான் கடல் பகுதியில் புதிய புயல் உருவாக வாய்ப்பு இருப்பதாக  இந்திய வானிலை மையம்  தெரிவித்துள்ளது.  வருகிற 13-ந்தேதி தெற்கு அந்தமான் கடல் பகுதியில் மேல் அடுக்கு சுழற்சி உருவாகிறது. இது 13, 14-ந்தேதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாற உள்ளது. பின்னர் அது புயலாக மாறுமா? என்பது  அடுத்தடுத்த நாட்களில் தெரிய வரும்.  13-ந்தேதிக்கு பிறகே அது  தொடர்பான கூடுதல் தகவல்கள் தெரிய வரும் என்று தெரிவித்துள்ளது.  இந்த மேலடுக்கு சுழற்சி வலுப்பெற்று புயலாக மாறும் என்று எதிர்பார்க்க ப்படுகிறது. 13-ந்தேதி வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவான பின்னர் அது 17, 18, 19 ஆகிய தேதிகளில் புய லாக மாறி கரையை கடக்க வாய்ப்பு  இருப்பதாக தகவல்கள் வெளியாகி யுள்ளன. இந்த புதிய புயல் இலங்கை மற்றும் அதனை ஒட்டிய தமிழக பகுதி களின் அருகில் கரையை கடக்க வாய்ப்புள்ளது என்றும் கூறப்படுகிறது.  புயல் கரையை கடக்கும் பகுதி கள் மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்க ளில் தொடர் மற்றும் கனமழை பெய்ய  வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. புதிய புயல் உருவாகும் பட்சத்தில் தமிழக கட லோர பகுதிகளில் மீண்டும் மழை பெய் வதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன. 

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஆளுநருக்கு பாமக கேள்வி 

சென்னை, டிச. 11-  ஆன்லைன் சூதாட்டத்தில் கடந்த 12 நாட்களில் நான்காவது உயிரிழப்பு ஏற்பட்டுள்ள நிலையில் ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளிப்பது எப்போது? என்று பாமக தலைவர் அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் ஞாயிறன்று தனது ட்விட்டர் பக்கத்தில் கூறி யுள்ளதாவது: ‘’சேலம் மாவட்டம் வாழப்பாடியை அடுத்த உத்தண்டி வளவு கிராமத்தைச் சேர்ந்த மணி முத்து என்ற ஓட்டுநர் ஆன்லைன் சூதாட்டத்தில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்ததால் தூக்கிட்டு  தற்கொலை செய்து கொண்டி ருக்கிறார். அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். ஆன்லைன் சூதாட்டத் தடை நீக்கப்பட்ட பிறகு, சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் நிகழும் 36-ஆவது தற்கொலை இதுவாகும். ஆன்லைன் சூதாட்டத்தடை அவசர சட்டம் காலாவதியானதற்கு பிந் தைய 12 நாட்களில் நிகழ்ந்த நான்கா வது தற்கொலை இதுவாகும். ஆன்லைன் சூதாட்டம் எவ்வளவு கொடியது என்பதற்கு அண்மைக் காலங்களில் அதிகரித்து வரும் தற்கொலைகளே சாட்சி. இந்த சூதாட்டம் தடை செய்யப்படவில்லை என்றால், அதில் பணத்தை இழந்து தற்கொலை  செய்து கொள்வது அன்றாட நிகழ்வு களாக மாறுவதை தவிர்க்க முடி யாது. இதை தடை செய்து நிறைவேற்றப்பட்ட சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க வேண்டியது அவசரத் தேவை. ஆன்லைன் சூதாட்டத்தால் தமிழகத்தில் நிகழும் தற்கொலைகளை ஆளுநர் கண்டுகொள்ளாமல் இருப்பது வருத்தமளிக்கிறது. சூதாட்டத் தடை சட்டத்திற்கு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும்.’’ என  அன்புமணி தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

இலங்கை சிறையில்  24 தமிழக  மீனவர்கள் 

ஒன்றிய அரசு தகவல்

சென்னை, டிச.11- இலங்கைக் கடற்படையினரால் இந்திய மீனவர்கள் தாக்கப் பட்டதற்கு இந்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? என்று மதிமுக. பொதுச்செயலாளர் வைகோ கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு ஒன்றிய வெளியுறவுத் துறை அளித்துள்ள பதிலில்  இந்திய மீனவர்கள் சர்வதேச கடல்  எல்லைக் கோட்டை தாண்டி, இலங்கைக் கடற்பரப்பில் மீன்பிடித்த தாகக் கூறி இலங்கை அதிகாரிக ளால் அவ்வப்போது கைது செய்யப் படுகின்றனர். இந்திய மீனவர்களின் பாதுகாப்பு மற்றும் நலனுக்கு இந்திய அரசு அதிக முன்னுரிமை அளிக்கிறது. இந்திய மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் செய்திகள் கிடைத்த வுடன், ராஜதந்திர வழியின் மூலம் அரசாங்கம் இலங்கை அரசிடம் இந்த  விவகாரத்தை எடுத்துக் கொள்கி றது. கடந்த மூன்று ஆண்டுகளில் கிடைத்த தகவலின்படி, மொத்தம் 485 (2020ல் 74, 2021ல் 159, 2022ல் 252) இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப் பட்டுள்ளனர். மொத்தம் 66 இந்திய படகுகள் (2020ல் 11, 2021இல் 20 மற்றும் 2022 இல் 35) இலங்கை அதி காரிகளால் பறிமுதல் செய்யப் பட்டன. அரசின் தொடர் முயற்சி யால் 461 மீனவர்கள் விடுவிக்கப்பட் டுள்ளனர்.  தற்போது இலங்கைக் காவலில் 24 இந்திய மீனவர்கள் உள்ளனர். இலங்கைக் காவலில் உள்ள  இந்திய மீனவர்களை முன்கூட்டியே  விடுவிப்பது குறித்து,  அந்நாட்டு அரசு  கவனத்திற்கு கொண்டு செல்லப் பட்டுள்ளதாகவும் வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும்  67 பத்திரிகையாளர்கள் கொலை சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்கள் 375 பேர்

பிரஸ்லஸ், டிச.11- உக்ரைன்-ரஷ்யா போர், ஹைட்டியில் ஏற்படுத்தப் பட்டுள்ள குழப்பமான சூழல், மெக்சிகோவில் நிலவும் அசாதா ரண  சூழல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் உலகம் முழு வதும் 2022-ஆம் ஆண்டு மட்டும் டிசம்பர் 11-ஆம் தேதி வரை 67 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 2021-ஆம்  ஆண்டு 47 பேர் கொல்லப்பட்டனர். கடந்தாண்டை ஒப்பிட்டால் இது 30 சதவீதம் அதிகம். இந்தத் தகவலை சர்வதேச ஊடகவியலாளர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. பிரஸ்ஸல்ஸை தளமாகக் கொண்ட சர்வதேச ஊடக வியலாளர்கள் கூட்டமைப்பு (IFJ) 140-க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள தொழிற்சங்கங்கள் மற்றும் சங்கங்களில் இருந்து 600,000 ஊடக வல்லுநர்களை பிரதிநிதித்துவப்படுத்துகிறது.  ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு சர்வதேச ஊடகவியலாளர்கள் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் அந்தோணி பெல்லங்கர் விடுத்துள்ள அறிக்கையில், ‘‘கடந்த ஆண்டு 47 பேர் கொல்லப்பட்ட நிலையில், இந்த ஆண்டு டிசம்பர் 11-ஆம் தேதி வரை உலகம் முழுவதும் 67 ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக  ஊழியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். உலகம் முழுவதும்  சிறைகளில் 375 பத்திரிகையாளர்கள் அடைக்கப் பட்டுள்ளனர்’’ என்று குறிப்பிட்டுள்ளார். ஊடக ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், ஊடகவியலாளர்களையும் கருத்துச் சுதந்தி ரத்தை பாதுகாக்கவும் உறுதியான நடவடிக்கை எடுக்க உலக நாடுகளுக்கு சர்வதேச ஊடகவியலாளர்கள் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. பாகிஸ்தானில் அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் ஐந்து பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். கொலம்பியா, பிலிப்பைன்ஸ் நாடுகளிலும் பத்திரிகையாளர்கள் தொடர்ந்து ஆபத்தை எதிர்நோக்கியுள்ளனர்.

‘ஆந்திராவில் பெண்களின் உயிருக்கு பாதுகாப்பு இல்லை’

அமராவதி: ஆந்திராவில் சட்டம்-ஒழுங்கு நிலையை காவல்துறை அதிகாரிகள் புறக்கணிப்பதால் பெண்களின் உயிருக்கு பாதுகாப்பு இல்லை என்று தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு கூறினார். விஜயவாடாவில் உள்ள பல் மருத்துவக் கல்லூரி மாணவி இந்த வாரம் படுகொலை  செய்யப்பட்டதை அடுத்து அவர் கருத்து வெளியாகியுள்ளது. “முதல்வர் ஜெகன் மீண்டும் சட்டம் ஒழுங்கை பராமரிக்க தவறி விட்டார்” என்று தெலுங்கு தேசம் கட்சியின் வர்ல ராமையாவும் கூறினார்.

56 கோடி வாக்காளர்கள் ஆதார் இணைப்பு

புதுதில்லி : பதிவு செய்யப்பட்ட சுமார் 95 கோடி  வாக்காளர்களில் கிட்டத்தட்ட 56 கோடி பேர் தங்களது ஆதார் விவரங்களை வாக்காளர் பட்டியலுடன் இணைத்துள்ளதாக தேர்தல் ஆணையத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆதார் மற்றும் வாக்காளர் பட்டியல் விவரங்களை தானாக முன்வந்து இணைக்க வழி வகுக்கும் வகையில் கடந்த ஆண்டு டிசம்பரில் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் திருத்தப்பட்டது.