சென்னை, ஜூலை 17- தமிழ்நாட்டில் மாணவர்கள் தற்கொலை தொடர்ந்து அதிகாரித்து வருவதால் ஒன்றிய அரசு நீட் தேர்வை கைவிட வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தியி ருக்கிறார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஒன்றியம், வயலப்பாடி அருகே உள்ள கீரனூர் கிராமத்தைச் சேர்ந்த பள்ளி மாணவி நிஷாந்தினி நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்து கொண்டார் என்ற தகவலறிந்து மிகுந்த வேதனையும் துக்கமும் மேலிடுகிறது. அவரது குடும்பத்தை எண்ணி வெகு வாகத் துயரப்படுகிறேன். மருத்துவம் படிப்பது தான் மானத்திற்குரியது என்று இந்த பெண் பிள்ளைக்கு யார்தான் கற்பித்தது? நீட் தேர்வில் தேர்ச்சியடையா விட்டாலும்; அல்லது தேர்ச்சிப் பெற்றாலும் மருத்துவம் படிக்க இடம் கிடைக்கா விட்டால் அப்படி என்ன இழுக்கு ஏற்பட்டு விடும்? இத்தனை இளங்கு ருத்து கள் நீட் என்னும் கொடிய நஞ்சி னால் அவிந்து போயுள்ள நிலையிலும் இந்திய ஒன்றிய ஆட்சியாளர்களின் நெஞ்சில் ஒருதுளியும் ஈரமில்லை என்பது பேரதிர்ச்சியை அளிக்கிறது. அனிதா முதல் நிஷாந்தி வரை இது வரையில் 17 பேரை தமிழ்நாடு நீட்டுக்குப் பறிகொடுத்துள்ளது. ஆனால், ஒன்றிய ஆட்சியாளர்கள் கொஞ்சமும் அசைந்து கொடுக்கவில்லை. ஒருமுறைக்கு இருமுறை நீட் விலக்கு மசோதாவை சட்டப்பேரவையில் நிறைவேற்றி, தமிழ்நாடு அரசு குடியரசுத் தலை வரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தும் பா.ஜ.க. அரசு மெத்தனம் காட்டி வருகிறது. அதற்கு ஒப்புதல் அளிக்கா மல் இன்னும் காலம் தாழ்த்தி வரு வதன் விளைவாகவே அடுத்தடுத்து இரண்டு மாணவர்கள் பலியாக நேர்ந்து ள்ளது. தமிழ்நாடு அரசின் நீட் விலக்கு மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும். நிஷாந்தி குடும்பத்தில் ஒரு வருக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். அக்குடும்பத்திற்கு இழப்பீ டாக ரூ. 1 கோடி வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறி உள்ளார்.