states

தீக்கதிர் முக்கிய செய்திகள்

எம்ஜிஆருக்கு கோயில் கட்டுவதில் தவறில்லை!

“காட்பாடியில் எம்ஜிஆருக்கு அதிமுக-வைச் சேர்ந்த ஒருவர் கோவில் கட்ட அடிக்கல் நாட்டியுள்ளார். குஷ்பு-விற்கு கோவில் கட்டும்போது எம்.ஜி.ஆருக்கு கோவில் கட்டுவது தவறு இல்லை” என்று தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார். மேலும், “திராவிடக் கொள்கைகளை உண்மையிலேயே கடைபிடிக்கும் கட்சியாக திமுக மட்டுமே உள்ளது” என்றும், “பட்டியல் - பழங்குடி வகுப்பைச் சேர்ந்த பெண்ணை, குடியரசுத் தலைவர் வேட்பாளராக பாஜக அறிவித்தால் தனிப்பட்ட முறையில் நான் அதை வரவேற்கிறேன்” என்றும் துரைமுருகன் வேலூர் மாநகராட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியின் போது கூறியுள்ளார்.

இறந்த 4 வயது மகளின் உடலை தூக்கிச்சுமந்த தந்தை!

மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் மாவட்டத்தை சேர்ந்த பெற்றோர், தங்கள் நான்கு வயது மகளுக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போனதால், சிகிச்சைக்காக  டாமோவில் உள்ள மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதையடுத்து சிறுமியின் உடலை வீட்டிற்கு எடுத்துச் செல்ல அவரது தந்தை லக்ஷ்மன் அஹிர்வார் ஆம்புலன்ஸை நாடியுள்ளார். ஆனால், அவருக்கு உரிய பதில் கிடைக்காத நிலையில், தனது மகளின் உடலை தோளில் சுமந்தே வீட்டிற்கு கொண்டு சென்றுள்ளார். இதனிடையே, ஆம்புலன்ஸ் கேட்டு, அஹிர்வார் தங்களை நாடவே இல்லை என்று மருத்துவமனை நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது.

மொழிக்காக தமிழர்களைப் போல் போராட வேண்டும்!

ஆந்திர மாநிலம் திருப்பதி எஸ்.வி. பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நீதிபதிகள், வழக்கறிஞர்கள் மற்றும் காவல் உயர் அதிகாரிகளுக்கான கலந்தாலோசனை கூட்டத்தில், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி. ரமணா கலந்துகொண்டு பேசியுள்ளார். அப்போது, “தாய்மொழியை பாதுகாப்பது மிகவும் அவசியம்; மொழி உரிமைகளை பெற தமிழர்களை போல் போராட வேண்டும்; தமிழர்களை உதாரணமாக எடுத்துக் கொண்டு தெலுங்கர்கள் அனைவரும் தங்கள் மொழிக்காக ஒன்றுபட வேண்டும்” என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

நபிகள் மதிப்பை காக்க பயங்கரவாதிகள் தேவையில்லை

முகமது நபியை அவமதித்தற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக, இந்தியாவில் தற்கொலை மனித வெடிகுண்டு தாக்குதல்களை நடத்தப்போவதாக அல்கொய்தா மிரட்டல் விடுத்திருந்தது. இதற்கு மஜ்லிஸ் கட்சித் தலைவர் ஒவைசி பதிலடி கொடுத்துள்ளார். “முகமது நபியின் பெயர் உயர்ந்தது. அதைப் பாதுகாக்க அல் கொய்தா போன்ற பயங்கரவாதிகள் தேவையில்லை. வன்முறையை பரப்பி இஸ்லாத்தின் பெயரைக் கெடுக்கும் கவாரிஜ்களிடமிருந்து அல்லா நம் நாட்டை (இந்தியாவை) காப்பானாக!” என்று டுவிட்டரில் ஒவைசி பதிவிட்டுள்ளார்.

கருத்துக்களை ஏற்க மறுப்பதே மோடி அரசின் கொள்கை

“சுற்றுச்சூழல் ஆய்வு மூலம் வெளியான இந்தியாவின் மோசமான நிலையை, உண்மையல்ல என்று கூறி மோடி அரசு மறுத்துள்ளது. ஏற்கெனவே, இந்தியாவில் கொரோனாவால் ஏற்பட்ட உயிரிழப்புகள் பல மடங்கு அதிகம் என்ற உலக சுகாதார அமைப்பின் (றுழடீ) புள்ளி விவரத்தையும் ஒன்றிய அரசு நிராகரித்தது. இதன்மூலம் எதிர்க்கருத்துக்களை ஏற்க மறுப்பதே தங்கள் ஆட்சியின் பிரதான கொள்கை என்பதை மீண்டும் அரசு நிரூபித்துள்ளது” என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அசம்பாவிதம் நடந்தால் அதற்கு பாஜகதான் பொறுப்பு

இந்தியாவில் மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்துவோம் என்று அல்கொய்தா மிரட்டல் விடுத்தது தொடர்பாக சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் கருத்து தெரிவித்துள்ளார். அதில், “நாட்டில் எல்லாம் நன்றாக இருந்தது. ஆனால் இரு மதத்தினர் இடையிலான மோதலை பாஜக செய்தித் தொடர்பாளர் விரும்புகிறார். தற்போது நாட்டில் ஏதாவது நடந்தால் அதற்கு பாஜகதான் பொறுப்பு” என்று சஞ்சய் ராவத் கூறியுள்ளார். “நாம் நமது வேலையை செய்வோம். ஆனால் இதற்கு பின்னால் இருப்பவர்களை மக்கள் எப்போது அறிவார்கள்?” என்றும் அவர் ஆற்றாமை வெளியிட்டுள்ளார்.

நாளை ரயில்வே தேர்வு: மாணவர்களுக்கு சிறப்பு ரயில் ஏற்பாடு 

சென்னை,ஜூன் 10- ரயில்வே தேர்வு எழுதும் மாண வர்கள் தேர்வு மையங்களுக்குச் செல்ல சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு  ரயில்வே அறிவித்துள்ளது. ரயில்வே தேர்வு வரும் ஜூன் 12 ஆம் தேதி முதல் ஜூன் 17ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த தேர்வுக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் பலர் விண்ணப்பித்துள்ளனர். இந்நிலை யில், தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்க ளுக்கு தேர்வு மையங்கள் வெளிமாநில ங்களில் ஒதுக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக தெற்கு ரயில்வே தேர்வு எழுதும் மாணவர்களுக்காக சிறப்பு ரயில் சேவை ஏற்பாடு செய்துள்ளது. குறிப்பாக, இதற்காக நெல்லூரி லிருந்து ஜூன் 11ஆம் தேதி, காலை 7.05- க்கும் புறப்படும் சிறப்பு ரயில் ( ரயில் எண் 07675), மதியம் 3.15-க்கு  சேலத்தை அடைகிறது. மறுமார்க்க மாக,சேலத்திலிருந்து இரவு 8:30க்குப் புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் காலை 5:30-க்கு ஆந்திராவின் நெல்லூரை  அடைகிறது. எனவே, இந்த வழித் தடத்தில் வரும் மாணவர்கள் இந்த சிறப்பு ரயிலைப் பயன்படுத்திக் கொள் ளும்படி, தெற்கு ரயில்வே அறிவித் துள்ளது

நாட்டு நாய்களைப் பாதுகாக்க  ஆராய்ச்சி மையம்

சென்னை,ஜூன் 10- நாட்டு நாய்களைப் பாதுகாக்க ஆராய்ச்சி மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். வளர்ந்து வரும் நாடுகளில் கால்நடை மருத்துவ தோல் நோய் சிகிச்சை,  கல்வி மற்றும் ஆராய்ச்சியை மேம்படுத் துதல் குறித்த பன்னாட்டு மாநாடு சென்னை வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவ அறிவியல் மருத்து வக்கல்லூரியில் நடைபெற்றது. இந்த மாநாட்டை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து கருத்தரங்கு மலரை வெளியிட்டு, பேசிய அமைச்சர் “தமிழ்நாடு தோல் பொருட்கள் உற்பத்தியில் முதன்மை மாநிலமாக திகழ்கிறது. கால்நடை மருத்துவர்களுக்கு பல்வேறு புத்தாக்கப் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. நாட்டு நாய்களைப் பாதுகாப்பதற்காக நாட்டின  நாய் ஆராய்ச்சி மையம் அமைப்பதற் கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட் டுள்ளது” என்றார்.

இலங்கைக்கு  மீண்டும் நிவாரண பொருட்கள் அனுப்ப முடிவு

சென்னை, ஜூன் 10- இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக, தமிழ்நாடு அரசின் சார்பில் உதவி செய்யப்படும் என முதலமைச்சர் மு.க  ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவிப்பு  ஒன்றை வெளியிட்டார். அதன் படி, ரூ. 80 கோடி மதிப்புள்ள 40 டன் அரிசி,  ரூ. 28 கோடி மதிப்புள்ள 137 வகை மருந்து கள், ரூ. 15 கோடி மதிப்புள்ள 500 டன் பால் பவுடர் ஆகியவை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. சென்னையிலிருந்து இலங்கைக்கு முதற்கட்டமாக நிவாரண பொருட்களை சென்னை துறைமுகத்தில் இருந்து  முதலமைச்சர் ஸ்டாலின் கொடிய சைத்து தொடங்கி வைத்தார். இதன்  தொடர்ச்சியாக, அரிசி, பால் பவுடர்,  அத்தியாவசிய மருந்து பொருட்கள் உள்ளிட்டவை இரண்டாம் கட்டமாக தூத்துக்குடியி லிருந்து அனுப்ப தமிழ்நாடு அரசு தீவிரமாக ஏற்பாடு செய்து வருகிறது. அடுத்த வாரத்தில் நிவாரண பொருட்கள் அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப் படுகிறது.