states

img

காவிரி விவகாரத்தில் பேச்சுவார்த்தைக்கு இடமில்லை

சென்னை, ஆக.12- காவிரி விவகாரத்தில் பேச்சுவார்த்தைக்கு இட மில்லை என அமைச்சர் துரை முருகன் தெரிவித்துள்ளார். தில்லியில் காவிரி  மேலாண்மை ஆணை யத்தின் 22-வது கூட்டம்  தலைவர் எஸ்.கே.ஹல்தர்  தலைமையில் வெள்ளி யன்று (ஆக.11) நடை பெற்றது. இதில் தமிழ்நாடு நீர்வளத்துறை செயலர் சந்தீப் சக்சேனா, காவிரி தொழில்நுட்ப குழு உறுப் பினர்கள், கேரள மாநில நீர்வளத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். கர்நாடகா, புதுச்சேரி ஆகிய  மாநிலங்களை சேர்ந்த நீர்வளத் துறை அதிகாரிகள் இணைய வழியாக பங் கேற்றனர். இந்நிலையில் சென்னை  கோட்டூர்புரத்தில் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுரு கன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “கர்நாடகாவிடம் 82 விழுக் காடு தண்ணீர் உள்ளது. காவிரி நீர் மேலாண்மை ஆணையம் சரியாக செயல் படவில்லை. அதன் செயல் பாடு திருப்தியாக இல்லை” என்றார். உச்சநீதிமன்றத்தில் நீதி கிடைக்கும் என எண்ணுகிறீர்களா என்ற  செய்தியாளர்கள் கேட்ட  கேள்விக்கு,“ உச்சநீதி மன்றத்தில் நீதி கிடைக்க வில்லை என்றால் என்ன செய்வது? என்றும், வேறு  என்ன செய்ய சொல்கிறீர் கள்? என கேள்வி எழுப்பி னார். கர்நாடகாவுடன் பேச்சு வார்த்தை கிடையாது என்றும் துரைமுருகன் கூறினார்.