states

ஓ.பி.எஸ்-இபிஎஸ் இணைய வாய்ப்பே இல்லை: ஜெயக்குமார் திட்டவட்டம்

சென்னை, நவ.25-  ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனி சாமி மீண்டும் இணைய வாய்ப்பே இல்லை என ஜெயக்குமார் தெரி வித்துள்ளார்.  இது தொடர்பாக சென்னை பட்டினப் பாக்கத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், ‘‘ஓ.பன்னீர்செல்வம் விவகாரத்தில் பொதுக்குழு மூலம் நிரந்தர தீர்வு எடுக்கப்பட்டுவிட்டது. அதிமுக தலைமையில் தான் கூட்டணி அமையும். அதிமுகவின் உள் விவ காரங்களில் பிரதமர் மோடியோ, உள்துறை அமைச்சர் அமித்ஷாவோ தலையிடவில்லை. பாஜகவை பொறுத்த வரை ஒரு தோழமை உணர்வுடன் எங் களது அணுகுமுறை உள்ளது. ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி இணைய வேண்டும் என பிரதமரோ, அமித்ஷாவோ பேசியது இல்லை, இனியும் அப்படி நடக்காது. ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி மீண்டும் இணைய வாய்ப்பே இல்லை’’ என கூறினார்.