states

img

பாஜகவால் அமைதியை இழந்த மணிப்பூர்

ஒரு மாதத்திற்கும் மேலாக நீடிக்கும் வன்முறை

காலம் கடந்து ஆளுநர் தலைமையில் அமைதிக்கான குழு அமைப்பு!

இம்பால், ஜூன் 10- பாஜக ஆளும் மணிப்பூர் மாநிலத்தில்  தாக்குதல், படுகொலை, தீவைப்பு என வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், மாநில ஆளுநர் அனு சுயா உய்கே தலைமையில் அமைதிக்  குழு (Peace Committee) ஏற்படுத்தப் பட்டு உள்ளது. மணிப்பூர் முதல்வர் என். பைரேன் சிங், மாநில அமைச்சர்கள், எம்.பி.க்கள்,  எம்.எல்.ஏ.க்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இடம்  பெற்றுள்ள இந்த அமைதிக்குழுவா னது, பிரச்சனையைக் கையாளும் அமைப்புகள் மற்றும் குழுக்களிடையே பேச்சுவார்த்தை நடத்தும். சமூக ஒற்  றுமை, பரஸ்பர புரிந்துணர்வை வலுப்  படுத்துவது மற்றும் பல்வேறு இனக் குழுக்களுக்கு இடையே சுமூகமான தொடர்பை எளிதாக்குவதில் பங்காற்றும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள், கல்வி யாளர்கள், இலக்கியவாதிகள், கலை ஞர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் மற்  றும் பல்வேறு இனக்குழுக்களின் பிரதி நிதிகளும் குழுவில் அங்கம் வகிக்கின்ற னர்.

மத, இன வெறியர்களின் பிடியில்...

மணிப்பூர் மாநில மக்கள் தொகை யில், 53 சதவிகிதமாக உள்ள ‘மெய் டெய்’ மக்களின் வாக்குகளுக்காக, அவர்  களுக்கு பழங்குடியினர் அந்தஸ்து வழங்குவதாக பாஜக அரசு பற்றவைத்த நெருப்பு, மெய்டெய் பிரிவினருக்கும்,  34 பிரிவுகளைக் கொண்ட குக்கி - ஜோமி,  நாகா பழங்குடியினருக்கும் இடை யிலான பெரும் மோதலாக உருவெடுத்  துள்ளது. இதில், 120-க்கும் அதிகமா னோர் இதுவரை உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கான வீடுகள், வாகனங் கள், வர்த்தக நிறுவனங்கள், தேவால யங்கள் தீக்கிரையாக்கப்பட்டு உள்ளன.  30 ஆயிரத்திற்கும் மேலானோர் சொந்த மாநிலத்திலேயே அகதிகளாக்கப்பட்டு உள்ளனர். கலவரச் சூழலைப் பயன்  படுத்தி, ஆர்எஸ்எஸ் - சங்பரிவார் கும்பல்  களும், மதவெறியுடன் இறங்கியுள்ளனர். ஒரே இனத்திற்குள்ளும் பிற இனத்தி லும் கிறிஸ்தவர்களை குறிவைத்து தாக்கு கின்றனர் எனவும் தகவல்கள் வெளியாகி யுள்ளன. மாநில காவல்துறை துவங்கி, சிஆர்  பிஎப், அசாம் ரைபிள்ஸ், ராணுவத்தினர் என 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். உள்துறை அமைச்சர் அமித்ஷா, கடந்த வாரம் 4 நாட்கள் மணிப்பூரிலேயே முகாமிட்டு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டார். மோதலில் ஈடுபடும் சமூகங்களின் பிரதி நிதிகளை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். வன்முறையில் உயிரிழந்த வர்களுக்கு தலா ரூ. 10 லட்சம் நிவாரணம்,  குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை  வழங்கப்படும் என்ற அறிவிப்புக்களை யும் வெளியிட்டார். எனினும், மோதல்கள் குறையவில்லை. அண்மையில், குண்டுக் காயம் அடைந்த 8 வயது பழங்குடியின சிறுமி,  அவரது தாய் மற்றும் அவரது உற வினர் என 3 பேரும் பாயெங்கில் இருந்து  இம்பால் மேற்கு நோக்கி ஆம்புலன்ஸில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, கும்பல் ஒன்று அவர்களை தடுத்து நிறுத்தி, அவர்கள் யார் என்று விசாரித்து,  அவர்கள் கிறிஸ்தவர்கள் எனத் தெரிந்து,  ஆம்புலன்ஸ்க்கு தீ வைத்தது. இதில் ஆம்புலன்ஸில் இருந்த மூன்று பேரும் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரி தாபமாக உயிரிழந்தனர். 

சிபிஐ சிறப்பு விசாரணைக்குழு அமைப்பு

இந்த வன்முறைகள் தொடர்பாக, மணிப்பூர் அரசு 3,700 வழக்குகளை பதிவு  செய்துள்ளது. இவற்றில், குற்றச்சதி தொடர்பான 5 வழக்குகள், பொதுச்சதி தொடர்பான ஒரு வழக்கு என 6 வழக்கு களை சிபிஐ-க்கு மாற்ற மணிப்பூர் மாநில  அரசு அண்மையில் பரிந்துரை செய் தது.  அதன்படி, மேற்கண்ட 6 சதி வழக்கு களையும் விசாரிக்க சிறப்பு விசாரணை  குழுவை சிபிஐ தற்போது அமைத்துள் ளது. தனியாகவும் வழக்குப் பதிவு செய்  துள்ளது. டிஐஜி அந்தஸ்து அதிகாரி தலை மையிலான அக்குழு விசாரணை பொறுப்  பையும் ஏற்றுள்ளது. சிபிஐ இணை  இயக்குநர் கன்சியாம் உபாத்யாய் மாநில  அரசு அதிகாரிகளுடன் இணைந்த சிறப்பு விசாரணைக்குழுவுக்கு உதவுவார் என்று  அறிவிக்கப்பட்டுள்ளது. வன்முறைச் சம்பவம் தொடர்பாக, மணிப்பூருக்கு 101 கோடியே 75 லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கவும் ஒன்றிய  அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

3 பேர் சுட்டுக் கொலை

இதனிடையே, காங்போக்பி மற்றும் இம்பால் மேற்கு மாவட்டங்களின் எல்லை யில் சங்கைதெல் அருகேயுள்ள கோகன்  கிராமத்தில், வன்முறைக் கும்பல் ஒன்று  நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒரு பெண் உட்பட 3 பேர் கொல்லப்பட்டனர். 2 பேர்  படுகாயம் அடைந்தனர். “தாக்குதல் நடத்தியவர்கள் ராணு வத்தைப் போல் வேடமிட்டுள்ளனர். அது மட்டும் இன்றி, ராணுவம் பயன்படுத்தும்  வாகனங்களை போன்ற ஒரு வாகனத்தை  ஓட்டி வந்துள்ளனர். வெள்ளிக்கிழமை  அதிகாலை கோகன் கிராமத்திற்குச் சென்ற அவர்கள், தங்களுடைய தானி யங்கி துப்பாக்கியால் கிராம மக்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர்” என்று காவல்துறை தெரிவித்துள்ளது.  பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரான டோம்கோஹோய் அதிகாலை பிரார்த்த னையில் இருந்தபோது தேவாலயத்திற்  குள் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டுள் ளார். இது தவிர, நவுரியா பகாங்லாக்பா சட்டமன்றத் தொகுதி பாஜக எம்எல்ஏ வீடு  மீதும் பெட்ரோல் குண்டு வீச்சு நடந்துள்  ளது. 

ஆயுதங்கள் பறிமுதல்

கடந்த 24 மணி நேரத்தில் மணிப்பூ ரின் இம்பால் கிழக்கு, காக்சிங், தெங்னௌபால் மற்றும் பிஷ்னுபூர் மாவட்டங்களில் இருந்து 57 ஆயுதங்கள்,  1,588 வெடிமருந்துகள் மற்றும் 23 வெடி குண்டுகளை பாதுகாப்புப் படையினர்  கைப்பற்றியுள்ளனர். இதுவரை மொத்  தம் 953 ஆயுதங்கள், 13,351 வெடிமருந்து கள் மற்றும் பல்வேறு வகையான 223  வெடிகுண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. இந்நிலையிலேயே, மணிப்பூரில்  கடந்த மே 3 அன்று துவங்கிய வன்முறைச்  சம்பவங்கள் இப்போது வரை கட்டுக்குள்  வராத நிலையில், உள்துறை அமைச்சர்  அமித்ஷா கடந்த வாரம் அறிவித்தபடி, ஆளுநர் அனுசுயா உய்கே தலைமையில்  அமைதிக்கான குழு அமைக்கப்பட்டு உள்ளது. பாஜகவால் உருவாக்கப்பட்ட வடக்கு-கிழக்கு ஜனநாயகக் கூட்டணி யின் (NEDA) கன்வீனரும் அசாம் முதல்வ ருமான ஹிமந்த பிஸ்வா சர்மா, வன்முறை யால் பாதிக்கப்பட்ட மணிப்பூருக்கு நீண்ட  நாள் பயணமாக ஜூன் 10 அன்று இம்பால்  வந்தார். அவர், வன்முறைச் சம்பவங்கள்  தொடர்பாக மணிப்பூர் முதல்வர் பைரேன்  சிங்கை சந்தித்து ஆலோசனை மேற் கொண்டார்.

1 மாதமாக இணையதள சேவை இல்லை

முன்னதாக, மணிப்பூரில் இணைய தள சேவை முடக்கப்பட்டிருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வழக்கறிஞர் சொங்  தம் விக்டர் சிங், வணிகர் மயேங்பம்  ஜேம்ஸ் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில்  பொதுநல மனு தாக்கல் செய்திருந்தனர்.  “மணிப்பூரில் ஏற்பட்ட கலவரத்தை  அடுத்து இணையதள சேவை கடந்த மே 3 தொடங்கி காலவரையற்று முடக் கப்பட்டுள்ளது. இதனால் மணிப்பூர் மாநில மக்கள் அச்சமடைந்துள்ளதுடன், உறவினர்கள், அலுவலக சக ஊழியர் களுடன் தொடர்பு கொள்ள முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. மேலும் வங்கி சேவைகளை பெற முடியாமலும், குழந்  தைகளை பள்ளிக்கு அனுப்ப முடியாம லும், அத்தியாவசிய பொருட்கள், மருந்  துப் பொருட்களை பெற முடியாமலும் உள்ளனர். எனவே, மீண்டும் இணைய தள சேவையை அனைத்து மாவட்டங்களி லும் வழங்க மணிப்பூர் மாநில அரசுக்கு உத்தரவிட வேண்டும்” என்று மனுவில் அவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த மனுவை அவசரமாக விசா ரிக்க வேண்டும் என்றும் அவர்கள் வலி யுறுத்தியிருந்தனர். ஆனால், நீதிபதிகள் அனிருதா போஸ், ராஜேஷ் பிந்தல் ஆகி யோர் அடங்கிய கோடைகால விடுமுறை  அமர்வு, “இதே விவகாரத்தை உயர் நீதி மன்றமும் விசாரித்து வருகிறபோது, ஏன்  அதே கோரிக்கையை வலியுறுத்தி உச்ச  நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய  வேண்டும்? வழக்கமான அமர்விடம் முறையிடுங்கள்’’ என்று கூறி விட்டனர்.