அமைச்சர் சேகர்பாபு பேட்டி சென்னை, ஜூலை 21- கிளாம்பாக்கம் ரயில் நிலைய பணி களை அடுத்தாண்டு மார்ச் மாதத்திற்குள் முடிக்க ரயில்வே துறை உறுதி அளித்துள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னையை அடுத்த முடிச்சூர் பகுதியில் வெளிவட்ட சாலையில் அமைக்கப்பட்டு வரும் ஆம்னி பேருந்து நிலைய பணிகளை இந்துசமய அற நிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு ஆய்வு செய்தார். அப்போது ஆம்னி பேருந்து ஓட்டுநர்கள் ஓய்வெடுக் கும் அறை, உணவு அருந்தும் இடம், கழி வறை வசதிகள், குளியல் அறை கட்டும் பணிகளை விரைவாக முடிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன் பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் சேகர்பாபு கூறுகையில் , “கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் கடந்த ஆட்சி காலத்தில் சரியான திட்டமிடல் இல்லாமல் கட்டப்பட்டு வந்தது. தற்போது இந்த பேருந்து நிலையத்திற்கு தேவையான அனைத்து பணிகளையும் செய்து வருகிறோம். ஆம்னி பேருந்துகளை நிறுத்துவதற்காக முடிச்சூர் அருகே 5 ஏக்கர் நிலத்தில் ரூ. 40 கோடி செலவில் பல்வேறு வசதிகளுடன் ஆம்னி பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது. அடுத்த ஆண்டு இறுதிக்குள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். இது தொடர்பாக துறை அதிகாரிகளுடன் ஆய்வு செய்து வருகிறோம். சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் கீழ் 655 ஏக்கர் பரப்பளவில் உள்ள வண்டலூர் வெளிவட்ட சாலையில் நான்கு இடங்களில் உடற்பயிற்சி கூடம், விளையாட்டு பூங்கா, நடைபயிற்சி பூங்கா கட்டப்பட்டு வருகிறது. அதையும் ஆய்வு செய்துள்ளோம். கிளாம்பாக்கம் ரயில் நிலைய பணிகளை விரைவாக முடிக்க சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் மூலம் ரயில்வே துறை அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது. அடுத்தாண்டு மார்ச் மாதத்துக்குள் ரயில் நிலைய பணிகள் முடிவடையும் என்று ரயில்வே துறை உறுதி அளித்துள்ளது” என்று அமைச்சர் சேகர்பாபு கூறினார்.