states

கோதுமை மாவு விலை 12 ஆண்டுகளில் இல்லாத உயர்வு!

மும்பை, மே 9- இந்தியாவில் கோதுமை மாவு விலை ஏப்ரல் மாதத்தில் சராசரியாக கிலோ ஒன்று 32 ரூபாய் 38 காசுகளாக உயர்ந்துள்ளது. இது கடந்த 12 ஆண்டுகளில் இல் லாத அளவிற்கான கடுமையான விலை உயர்வாக அமைந்துள்ளது. மத்திய நுகர்வோர் விவகாரங்கள்,  உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்திற்கு மாநில குடிமைப் பொருள் விநியோகத் துறைகள் இது தொடர்பான தரவுகளை அளித்துள்ளன.  இதன்படி, கோதுமை மாவின் அகில இந்திய சராசரி சில்லரை விலை மே 7-ஆம் தேதியன்று கிலோ 32 ரூபாய் 78 காசுகளாக இருந்தது. இது கடந்த ஆண்டின் விலையான 30 ரூபாய் 03 காசுகள் என்ற விலையிலிருந்து 9.15 சதவிகிதம் அதிகம்.  கோதுமை மாவின் சில்லரை விலை  சராசரியாக மும்பையில் கிலோ 49 ரூபாய்க்கும் அதிகமாக உள்ளது. அதைத் தொடர்ந்து சென்னையில் 34 ரூபாய், கொல்கத்தாவில் 29 ரூபாய்,  தில்லியில் 27 ரூபாய் என்ற அளவில் விற்கப்படுகிறது.

உற்பத்தி வீழ்ச்சி மற்றும் உக்ரைன் போரால் இந்திய கோதுமைக்கான அதிக வெளிநாட்டு தேவை அதிகரித்தி ருப்பதன் காரணமாக, கோதுமை விலை உயர்ந்து, அதுவே மாவு விலை யிலும் எதிரொலித்து இருப்பதாக நுகர்  வோர் துறை வட்டாரங்கள் தெரிவிக் கின்றன. உள்நாட்டில் டீசலின் விலை  உயர்வும், கோதுமை மற்றும் மாவின்  விலைகள் அதிகரிப்புக்கு காரணமாகி உள்ளது. உற்பத்தி வீழ்ச்சி மற்றும் தனியார் வியாபாரிகளின் அதிக தேவை காரண மாக, வெளிச்சந்தையில் கோதுமை விலை, நடப்பு ரபி பருவத்தில் அரசு அறிவித்த குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 2 ஆயிரத்து 015 என்ற குறைந்தபட்ச ஆதரவு விலையை விட அதிகமாக உள்ளது. நுகர்வோர் விலைக் குறியீட்டின் அடிப்படையில், பொது விநியோகத் திட்டத்தின் கீழ் (PDS)  ‘கோதுமையின் சில்லரைப் பணவீக்கம் மார்ச் 2022 இல்  7.77 சதவிகிதத்தை எட்டியுள்ளது.  கோதுமை மாவின் அகில இந்திய சராசரி தினசரி சில்லரை விலை, காலண்  டர் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து  அதிகரித்து வருகிறது. ஜனவரி 1 முதல் 5.81 சதவிகிதம் அதிகரித்துள்ளது. கோதுமை உற்பத்தி வீழ்ச்சியை நாடு சந்திப்பதன் காரணமாக மாவு  மற்றும் பேக்கரி ரொட்டியின் விலை களும் உயரத் துவங்கியுள்ளன. 2022  மார்ச் மாதத்தில் பேக்கரி ரொட்டிக் கான சில்லரைப் பணவீக்கம் 8.39 சதவிகி தமாக இருந்துள்ளது.