மேற்கு தில்லியில் உள்ள திலக் நகர் பகுதியில் பிளாஸ்டிக் கவரால் சுற் றப்பட்ட நிலையில் இளம் பெண் ஒருவரின் சடலம் இருந்துள்ளது. இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் இது குறித்து போலீசாருக்கு தக வல் தெரிவித்தனர். இதையடுத்து, உடலை மீட்டு போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் சடலமாக மீட்கப் பட்ட இளம் பெண் சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்தவர் என்றும், குர் பிரீத் சிங் என்ற வாலிபரின் தோழி என்றும் தெரியவந்துள்ளது. இதை யடுத்து குர்பிரீத் சிங்கை போலீ சார் கைது செய்து விசாரணை மேற் கொண்டனர். அதில் சுவிட்சர்லாந்து பெண் ணுக்கு வேறொருவருடன் தொடர்பு இருந்ததாகவும், அவரை இந்தியா வரவைத்து பிறகு அவரை தனி அறையில் அடைத்து, கை, கால் களை கட்டிப்போட்டு கொடூரமாகக் கொலை செய்துள்ளதை குர்பிரீத் சிங் ஒப்புக் கொண்டுள்ளார். பின் னர் பழைய கார் ஒன்றை வாங்கி பிளாஸ்டிக் கவரால் அவரது உடலை மறைத்து உடல் அழுகி துர்நாற்றம் வீசியதால் உடலைச் சாலையில் வீசி சென்றதாக கூறி னார். குர்பிரீத் சிங் வீட்டில் சோதனை மேற்கொண்ட போலீசார் ரூ.2.25 கோடியை பறிமுதல் செய்துள்ள னர். திலக் நகர் பகுதி பலத்த பாது காப்பு பகுதியாக இருந்த போதி லும், அப்பகுதியில் சுவிட்சர்லாந்து பெண் கொலை செய்யப்பட்டு உடல் சாலையில் வீசப்பட்டது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.