states

ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை? நீதிபதி குழு அறிக்கை தாக்கல்

சென்னை, ஜூன் 27- ஆன்லைன் ரம்மி விளையாட்டு தொடர்பான அறிக்கையை ஓய்வு  பெற்ற நீதிபதி சந்துரு தலைமை யிலான குழுவினர் முதலமைச்சர் ஸ்டாலினிடம் வழங்கினர். ஆன்லைன் ரம்மி விளை யாட்டால் ஏற்படக்கூடிய நிதியிழப்பு மற்றும் தற்கொலை உள்ளிட்ட பெரும் ஆபத்தை விளைவிக்கும் தன்மையைக் கண்டறியவும், இந்த விளையாட்டுகளால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை உரிய தரவுகளுடன் ஆராயவும், இவ்விளையாட்டுகளை விளையாடத் தூண்டும் விளம் பரங்கள் சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கங்களை கூர்ந்தாய்வு செய்து, அவற்றை உரிய முறையில் கட்டுப் படுத்தவும், இரண்டு வாரங்களுக் குள் குழுவின் பரிந்துரைகளை அரசுக்கு அளிக்க கடந்த 10 ஆம்  தேதி ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் 5 ஐஐடி தொழில்நுட்ப வல்லுநர் டாக்டர் சங்கரராமன், ஸ்நேஹா அமைப்பின் நிறுவனரும் உளவியலாளருமான டாக்டர் லட்சுமி  விஜயகுமார், காவல்துறை கூடுதல்  இயக்குநர் வினித் தேவ் வான்கடே ஆகியோர் அடங்கிய குழு அமைக் கப்பட்டது. இந்நிலையில் இரண்டு வாரங்க ளுக்குள் பரிந்துரைகளை அளிக்கு மாறு அரசு ஏற்கனவே உத்தர விட்டிருந்த நிலையில், தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் நீதிபதி சந்துரு தலைமையில் 5 பேர் கொண்ட குழுவினர் திங்களன்று (ஜூன்.27) அறிக்கையை தாக்கல் செய்தனர். இதனையடுத்து, குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் இச்சமூகப் பிரச்சனைக்கு உடனடித் தீர்வு காண வேண்டிய அவசியம் கருதி, அவசரச் சட்டம் விரைவில் இயற்றப்படும் என்று அரசு தரப்பில் தகவல் வெளியாகி உள்ளது.