states

img

ரூ.146 கோடிக்கு கேரளம் கையகப்படுத்திய எச்என்எல் கேப்பிஎல் என்கிற பெயரில் செயல்படத் தொடங்கியது

46 மாதங்களில் முழு அளவிலான செயல்பாடு,  3,000 க்கும் மேற்பட்டவர்களுக்கு வேலை

கோட்டயம், ஜன. 1- சிக்கலான சட்டத் தகராறுகளை உள்ளடக்கிய நீண்ட செயல்முறையின் முடிவைக் குறிக்கும் வகையில், கோட்டயம் மாவட்டம் வேலூரில் செயலிழந்த ஹிந்துஸ்தான் நியூஸ்பிரிண்ட் லிமிடெட் புத்தாண்டு (ஜன.1) முதல் கேரளா பேப்பர் புராடக்ட்ஸ் லிமிடெட் (கேபிபிஎல்) என்கிற பெயர் மாற்றத்துடன் செயல்படத் தொடங்கியது. கேரள அரசின் கீழ் புதிய நிறுவனம் 46 மாதங்க ளில் நான்கு கட்டங்களில் முழு அளவிலான செயல் பாட்டை அடையும். ஆலை திறப்பதற்கான முன் னேற்பாடாக இயந்திரங்களின் பராமரிப்பு பணியை வெள்ளியன்று (டிச.31) அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இந்நிறுவனம் முழுமையாக செயல்படும் போது 3,000 க்கும் மேற்பட்டவர்களுக்கு வேலை வழங்க முடியும். மே மாதம் கேரள முதல்வர் பினராயி விஜயன் இந்த முறைப்படி திறந்துவைக்க உள்ளார். தொழிற்சாலையை நவீனப்படுத்த ரூ.34.3 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இரண் டாவது கட்டத்தில், ரூ.44.9 கோடி செலவில் மூன்று முதல் ஆறு மாதங்களில் உற்பத்தி தொடங்கும், மேலும் இதற்கு செயல்பாட்டு மூலதனம் ரூ.75.15 கோடி தேவைப்படுவதாக தொழில்துறை அமைச்சர் பி.ராஜீவ் தெரிவித்தார். இந்த சீரமைப்பு பணிகளை கேரள அரசின் தொழில் முதலீட்டு அமைப்பான கின்ஃப்ரா நிறுவனம் கவனித்து வருகிறது. எச்என்எல் நிறுவனமாக இருந்தபோது, அதில் 260 நிரந்தர ஊழியர்களும், 200 ஒப்பந்தத் தொழிலாளர்களும் இருந்தனர். மாநில அரசின் ரப்பர் பூங்காவும் இங்கு வருகிறது.

ஓராண்டுக்குள் பொதுத் துறையில் கேபிபிஎல் வலுப்பெறும். அடுத்த 17 மாதங்களில் நான்காவது கட்டத்தில் 3.50 லட்சம் டன் காகிதம் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதன்மூலம், ரூ.350 கோடி லாபம் ஈட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. செய்தித்தாள் மூலம் உற்பத்தியைத் தொடங்கும் அதே வேளையில், அடுத்தடுத்த கட்டங்களில் டிஷ்யூ பேப்பர் உள்ளிட்ட பிரீமியம் பேப்பர் தயா ரிப்புகளாக பன்முகப்படுத்தப்படும். இறுதிக் கட்டத்தில் ரூ.3,200 கோடி வருவாய் ஈட்டி முன்னணி நிறுவனமாக மாறும் எனவும் எதிர்பார்க்கப் படுகிறது. கேரள அரசு வழங்கிய 700 ஏக்கரில் ஹிந்துஸ்தான் நியூஸ் பிரின்ட் லிமிடெட்டை, பொதுத்துறை நிறுவனமாக 1983 இல் ஒன்றிய அரசு தொடங்கியது.  நிதி இழப்பைக் காரணம் காட்டி அதன் உற்பத்தி ஆலையை இரண்டு ஆண்டுக ளுக்கு முன்பு ஒன்றிய அரசு மூடியது. நிறுவ னத்தை தனியார்மயமாக்கும் திட்டத்தை ஒன்றிய அரசு தொடங்கிய பிறகு, மாநில அரசு கையகப் படுத்தியது. கேரள செய்தி காகித ஆலை (கேபிபிஎல்) செயல்பாட்டை தொடங்கியதன் மூலம் எல்டிஎப் அரசு தேர்தலின் போது அளித்த மற்றொரு வாக்குறுதி நிறைவேற்றப்படுகிறது.