பாஜக கூட்டணி ஆளும் பீகாரில் ஆசிரியர் பணிக்கான தகுதி தேர்வு வெள்ளியன்று நடை பெற்றது. தேர்வு நடை பெறும் முன்னரே ஹசாரி பாக் பகுதியில் இருக்கும் உணவகம் ஒன்றில் ஆசிரியர் தேர்வுக்கான வினாத்தாள் கிடைப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததையடுத்து, உண வகத்தில் போலீசார் சோதனை நடத்தியுள்ளனர். இந்த சோதனையில் ஆசிரியர் தேர்வுக்கான வினாத்தாளை வைத்து தேர்வுக்கு படித்துக் கொண்டிருந்த மற்றும் ஆசிரி யர் தேர்வு அறைக்கு செல்ல இருந்தவர்கள் என 200 பேரை போலீசார் கைது செய்தனர். ஆசிரியர் தேர்வுக் கான வினாத்தாளும், கசிந்த தாகக் கூறப்படும் வினாத்தா ளும் ஒரே மாதிரியாக உள்ளதா? என்று ஆய்வு செய்யப்படுகிறது என்றும், இந்த விவகாரம் தொடர்பாக 200 பேரை சந்தேகத்தின் அடிப்படையிலேயே கைது செய்துள்ளோம் என்றும் பீகார் அரசு மழுப்பலாக பதிலளித்துள்ளது. பாஜக கூட்டணி அமைந்த உடன் வினாத்தாள் கசிவு காங்கிரஸ் - ராஷ்ட்ரிய ஜனதாதளம் - ஐக்கிய ஜனதாதளம் - இடதுசாரிகள் ஆகிய கட்சிகள் இணைந்து “மகா கூட்டணி” என்ற பெயரில் கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. முதல்வராக நிதிஷ் குமார் இருந்தார். இந்நிலையில், ஜனவரி மாத இறுதியில் பாஜகவின் மிரட்டலால் மகா கூட்டணியில் இருந்து ஓட்டம் பிடித்த நிதிஷ் குமார் பாஜக உடன் கைகோர்த்து மீண்டும் முதல்வரானார். பீகாரில் “மகா கூட்டணி” ஆட்சி செய்த பொழுது மாநிலத்தில் குற்றச்சம்பவங்கள், அரசுப் பணி தொடர்பான தேர்வு களை சிறப்பாக நடத்தி அப் போது துணை முதல்வ ராக இருந்த ராஷ்ட்ரிய ஜன தாதள தலைவருமான தேஜஸ்வி மாநில நிர்வா கத்தை நல்ல நிலையில் வைத்து இருந்தார். ஆனால் தற்போது நிதிஷ் குமாரின் சுயநல அரசியலால் பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், 2 மாதங்களிலேயே ஆசிரி யர் பணிக்கான தேர்வு வினாத்தாள் கசிவு ஏற்பட் டுள்ளது. பாஜக ஆளும் மாநிலங்களில் வினாத்தாள் கசிவு என்பது வழக்கமான நிகழ்வாக உள்ளது. சமீபத் தில் பாஜக ஆளும் உத்த ரப்பிரதேச மாநிலத்தில் 40 லட்சம் பேர் எழுதிய போலீஸ் தேர்வு வினாத் தாள் கசிவால் ரத்து செய்யப் பட்டது என்பது குறிப்பி டத்தக்கது.