states

அழுகிய நிலையில் கரடி உடல்: கூராய்வு செய்த வனத்துறையினர்

கடமலைக்குண்டு, ஜன.1- தேனி மாவட்டம் மயிலாடும்பாறை அருகே பொன்னன்படுகை சாலை யோரம் அமைந்துள்ள தனியார் தோட்டத்தில் சுமார் 8 வயது மதிக்கத் தக்க ஆண் கரடி இறந்து அழுகிய நிலையில் கிடப்பதாக கண்டமனூர் வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.  இதையடுத்து கண்டமனூர் வனச்சரகர் திருமுருகன் தலைமையி லான வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று கரடியின் உடலை மீட்டனர். பின்னர் கால்நடை மருத்து வர்கள் வரவழைக்கப்பட்டு கரடியின் உடலை சோதனை செய்தனர்.  இதில் சந்தேகப்படும் படியான காயங்கள் எதுவும் இல்லை. இதையடுத்து கரடியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அதே  பகுதியில் புதைக்கப்பட்டது.  வயது மூர்ப்பு, நோய்வாய்ப் பட்டு கரடி இறந்திருக்கலாம் எனத் தெரிய வருகிறது.