states

img

மடாதிபதிகள் சொல்வதுதான் சட்டம் என்றாகி விடுமா? - பெ.சண்முகம் ,பொதுச் செயலாளர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்

திமுக அரசு, இந்தப் பிரச்சனையில் துணிந்து முடிவெடுக்க வேண்டும். இந்து மதத்திற்கு எதிரான செயலில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் சிலர் திமுகவை ‘ஹிந்து விரோதி’ என்று சொல்கிறார்கள்  என்பதற்காக இதில் தயங்க வேண்டிய அவசியமில்லை. நாங்கள் கோருவதும் சில லட்சம் இந்து பக்தர்களுக்காகத்தான் என்பதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.

“இந்து ஆலயங்களை பக்தர்களிடம் ஒப்படையுங்கள்” என்ற குரல் அவ்வப்போது ஒலிக்கிறது. இப் போது மட்டுமல்ல, பிரிட்டிஷ் ஆட்சிக்காலம் துவங்கி பிறகு நீதிக்கட்சி ஆட்சி, காங்கிரஸ் ஆட்சி, திமுக ஆட்சி என தொடர்ந்து இந்தக் குரல் இந்துத்துவா வெறியர்களாலும், மடாதி பதிகளாலும் எழுப்பப்பட்டு வருகிறது. இந்துக் கோயில்களில் அரசுக்கு என்ன வேலை என்பது தான் இவர்களின் கேள்வி. 

 உண்மை நோக்கம் என்ன?

கோயில் சொத்துக்களை பாதுகாக்க வேண்டும் என்பதெல்லாம் இவர்களின் நோக்கமல்ல. மாறாக, அரசின் தலையீடு எதுவும் இல்லாமல் மொத்தத்தையும் தாங்கள் அனுபவிக்க வேண்டும். தங்களின் மதவெறி அரசியலுக்கான களமாக கோயில்களை பயன்படுத்த வேண்டுமென்ற தீய நோக்கத் தில் தான் இந்துத்துவா சக்திகள் இத்தகைய கோரிக்கைகளை தொடர்ந்து எழுப்பி வரு கிறார்கள். எனவே, இவர்களின் இந்த கோ ரிக்கை புறங்கையால் தள்ளப்பட வேண்டியது என்பதில் சந்தேகமில்லை. இத்தகையோரின் கையில் ஆலய சொத்துக்கள் சென்று விட்டால் அரசிடம் கோரிக்கை வைப்பதோ, மக்களுக்கு சொந்தமாக்க வேண்டுமென்று கோருவதற்கே கூட வாய்ப்பிருக்காது. மாறாக, இந்த நவீன மடாதிபதிகளின் வாயில்களில் மக்கள் காத்துக்கிடக்க வேண்டிய அவல நிலைக்கு உள்ளாவார்கள். மடாதிபதிகள் சொல்வது தான் சட்டம் என்றாகிவிடும். 

ஏற்கனவே மடங்களுக்கு சொந்தமான இடங்களில் வசிப்பவர்கள் மற்றும் விவசா யம் செய்பவர்களின் கதியை அறிந்தால் ரத்தக் கண்ணீர் வரும். மடங்களின் நிர்வாகிகளால் புழுப் பூச்சிகளைப் போல் நடத்தப்படு கிறார்கள் என்பதை நாம் அறிந்தே இருக்கி றோம். மடங்களுக்கு எதற்காக இவ்வளவு நிலம்? எண்ணிலடங்கா கட்டிடங்கள், கல்வி நிலையங்கள், கோவில்கள் மூலம் வருமானம் என தனி ராஜ்ஜியத்தையே நடத்திக் கொண்டி ருக்கிறார்கள். எனவே, மடங்களை அரசு நேர டியாக நிர்வகிக்க வேண்டும். மடாதிபதிக ளின் வாழ்க்கைத் தேவைக்கான ஊதியத்தை அரசு வழங்கலாம் என்பது உட்பட பரிசீலிக்கப் பட வேண்டும்.

அரசுக்கு உரிமை உள்ளது

கோவில்கள், மடங்கள், அறக்கட்டளை கள் இவைகளெல்லாம் பொது ஸ்தாபனங் கள் என்ற முறையில் அதில் தலையிடுவதற் கான உரிமை அரசுக்கு இருக்கிறது. அரசர்கள் ஆண்ட காலத்திலும், கோயில்கள் அரசின் கட்டுப்பாட்டில் தான் இருந்திருக்கிறது. இதற் கான ஆதாரங்கள் கல்வெட்டுக்கள், செப்பேடு கள், ஓலைச்சுவடிகளில் காணக் கிடைக்கின் றன. அர்ச்சகர்கள் மற்றும் கோயிலின் பரா மரிப்பு உள்ளிட்ட இதர பணிகளில் ஈடுபட்ட வர்களுக்கு அரசர்கள் ‘பிரம்மதேயம்’ என்ற பெயரில் நிலங்களையும், கிராமங்களையும் கொடையாக வழங்கியுள்ளனர். இதர பணி செய்பவர்களுக்கு “பணிமானியம்’ என்ற பெய ரில் நிலங்கள் தானமாக வழங்கப்பட்டுள் ளன. கோயில்களுக்கு வேண்டுதல், காணிக் கை என்ற பெயரில் மக்கள் அவரவர் வசதிக் கேற்ப பொன், பொருள், கால்நடைகள், நிலம், தலைமுடி என்று வழங்கி வருகின்றனர். இதன்  காரணமாகத்தான் கோயில்களுக்கு சொத்துக்கள் உருவாகியுள்ளன. 

கோயில் மனைகளில் பல தலைமுறை களாக தங்கள் சொந்த பணத்தில் வீடுகள் கட்டியும், கடைகள் அமைத்தும் வியாபாரம் செய்து வாழ்ந்து வருபவர்கள் பெரும்பாலா னோர் இந்து மத வழிபாட்டை பின்பற்றுப வர்கள் தான். கோயிலை நம்பித்தான் இவர்க ளின் வாழ்வாதாரம் இருக்கிறது. எனவே, அடி மனையை இவர்களுக்கே விற்பனை செய்யுங் கள் என்ற கோரிக்கையை நீண்ட நெடுங்கால மாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் முன் வைத்து போராடி வந்திருக்கிறது. 

வலுக்கட்டாயமாக வெளியேற்றம்

1959ம் ஆண்டு இந்து அறநிலையச்சட்டம் தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்டு அதுதான் இப்போதும் நடைமுறையில் இருக்கிறது. இந்த சட்டத்தை அடிப்படையாகக் கொண்டு அவ்வப்போது பல அரசாணைகள் வெளி யிடப்பட்டு வந்துள்ளன. மாநில அரசு அவ்வப் போது வாடகையை உயர்த்துவது, அதை முன் தேதியிட்டு செலுத்துமாறு வற்புறுத்துவது, குறிப்பிட்ட தேதிக்குள் பணத்தை கட்டத்தவ றினால் வீட்டை விட்டு வலுக்கட்டாயமாக வெளியேற்றுவது என்ற நிலை ஏற்பட்டுள் ளது. பத்து லட்சம் ரூபாய் செலவு செய்து வீடு கட்டியிருந்தாலும், வெளியேறுவதைத் தவிர வேறு வழியில்லை. இல்லையென்றால், நீதி மன்றத்திற்கு செல்வது, வழக்கறிஞர்களுக்கு பல்லாயிரக்கணக்கில் பணத்தை செல வழித்து தக்க வைத்துக் கொள்ள முயற்சிப்பது என்பது வாடிக்கையான ஒன்றாக இருக்கிறது. அதிகாரிகளின் இத்தகைய அதிரடி நடவ டிக்கையில் பலர் உயிரை இழந்துள்ளனர். குடும்பம் நிர்க்கதியாய் விடப்பட்ட சம்ப வங்கள் ஏராளம். 

பிரம்ம தேயம் போல...

அதே போல், கோயில் நிலங்களில் குத்தகை விவசாயிகளாக இருந்தவர்களை யும், குத்தகை பாக்கி என்று வெளியேற்று வது, இல்லையென்றால் வருவாய் நீதிமன் றங்களில் வழக்கு தொடுத்து இழுத்தடிப்பது, அதற்கும் வழக்கறிஞர்களுக்கு செலவ ழிப்பது என்று பல்லாயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கோயில் நிர்வாகத் துக்கும் செலவு. இதற்கெல்லாம் ஒரு நிரந்தர தீர்வை ஏற்படுத்தும் நோக்கத்தில்தான், அடி மனையை அவர்களுக்கே சொந்தமாக்குங் கள். பயிர் செய்யும் நிலத்தை குத்தகை விவசா யிகளுக்கே சொந்தமாக்குங்கள் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டிருக்கிறது. அரசே, விலையைத் தீர்மானித்து பயனாளி களிடமிருந்து தவணைமுறையில் பணத்தை பெற்று கோயில் பெயரில் நிரந்தர வைப்புத் தொகையாகவோ, அல்லது வேறு வகையில் வருமானம் வரும் வகையிலோ அதை பயன்படுத்தி கோயில் காரியங்கள், நித்திய கால பூஜைகள் எவ்வித குறைவுமின்றி தொடர முடியும் என்று கூறுகிறோம். 

அந்தக் காலத்தில், “பிரம்மதேயம்” என்ற பெயரில் பிராமணர்களுக்கு இலவசமாக வழங்கியதைப் போல ஏழைகளுக்கு மட்டும் இலவசமாக வழங்குங்கள் என்று தான் கோருகிறோம். இதேபோல், வக்புவாரியம், தேவாலயங்களுக்கு சொந்தமான இடங்கள், மடங்களுக்கு சொந்தமான இடங்களில் வாழ்பவர்கள் மற்றும் விவசாயம் செய்ப வர்களுக்கும் சொந்தமாக்கிட வேண்டும் என்று கோருகிறோம். இதை வலியுறுத்தி நடத்தப்பட்ட தொடர் போராட்டத்தின் விளை வாக ஏழைகளுக்கு இலவசமாக மனைப் பட்டா வழங்குவது, அதற்குரிய பணத்தை அரசே ஆலயங்களுக்கு செலுத்திவிடுவது என்ற நல்ல முயற்சி அதிமுக ஆட்சிக் காலத்தில்  மேற்கொள்ளப்பட்டது. அதற்கென அரசாணை 318 வெளியிடப்பட்டது. இந்த  அரசாணையை எதிர்த்து, ஆலயப் பாதுகாவ லர்கள் என்ற போர்வையில் ஆர்.எஸ்.எஸ் பின்புலம் உள்ளவர்கள் உயர்நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்றுவிட்டார்கள். ஏழை இந்து பக்தர்களுக்கு இடம் வழங்கக் கூடாது என்று நீதிமன்றத்தை பயன்படுத்தியது ஆர்.எஸ்.எஸ். அதிலும் 5 லட்சம் ஏக்கரில் வெறும் 600 ஏக்கரைத்தான் விலைக்கு வாங்கி வழங்க அரசுத் தரப்பில் முயற்சித்தார்கள். இதைக் கூட செய்ய அனுமதிக்கவில்லை இந்த குடிகெடுத்த கூட்டம். 

பயபீதியிலேயே வாழ முடியுமா?

திமுக அரசு, இந்தப் பிரச்சனையில் துணிந்து முடிவெடுக்க வேண்டும். இந்து மதத்திற்கு எதிரான செயலில் தொடர்ந்து  ஈடுபட்டு வரும் சிலர் திமுகவை ‘ஹிந்து விரோதி’ என்று சொல்கிறார்கள் என்பதற்காக இதில் தயங்க வேண்டிய அவசியமில்லை. நாங்கள் கோருவதும் சில லட்சம் இந்து பக் தர்களுக்காகத்தான் என்பதை அரசு கவனத் தில் கொள்ள வேண்டும். ‘சிவன் சொத்து  குலநாசம்’ என்பதெல்லாம் மற்றவர்களை அச்சுறுத்துவதற்காக சொல்லப்பட்டதே தவிர அவர்கள் சிலை திருட்டு, கோயிலில் உள்ளவற்றை திருடி விற்பது போன்ற செயல் களை அச்சமின்றி செய்து வருகிறார்கள் என்பது காவல்துறை பதிவேடுகளில் நிரம்பிக் கிடக்கிறது. கோயிலில் நடைபெற்ற திருட்டுக் கள் முழுவதையும் தொகுத்தால் பெரிய நூலே வெளியிடலாம். சிலை திருட்டை கண்டு பிடிக்க போடப்பட்ட சிறப்பு பிரிவு அதிகாரிகள் இந்தப் பணியை மேற்கொண்டால் நல்லது. அப்படிப்பட்டவர்களின் குலங்கள் நன்றா கத்தான் இருக்கிறார்கள். நாசமாகிவிட வில்லை. தாங்கள் வாழும் வீட்டிலிருந்து எப்போது வேண்டுமானாலும் வெளியேற்றப் பட்டுவிடுவோம், தங்களின் வாழ்வாதாரம் எந்த நேரத்திலும் பறிக்கப்பட்டுவிடலாம் என்ற பயபீதியிலேயே வாழும் ஒரு மனித னின் நிலையை எண்ணிப் பாருங்கள் என்பது தான் நமது வேண்டுகோள்.

மாநில மாநாடு

அரசு செய்ய நினைத்தாலும் அந்த முயற்சிக்கு ஆதரவாகவும், இந்தக் கோரிக்கை நியாயம் என்று மற்றவர்களை ஏற்கச் செய்வதிலும், ஒரு பொதுக்கருத்தை உருவாக்கவும் தொடர்ந்து வலியுறுத்தி அதைப் பெறுவதற்கும் சம்பந்தப்பட்ட மக்கள் அமைப்பாய் தங்களை ஒன்று திரட்டிக் கொள்வது அவசியம். எனவே தான் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் முன்முயற்சியில் “அனைத்து சமய நிலங்களைப் பயன்படுத்து வோர் பாதுகாப்பு சங்கம்” என்ற அமைப்பு 2018ம் ஆண்டு துவங்கப்பட்டது. 20க்கும் மேற் பட்ட மாவட்டங்களில் மாவட்ட அமைப்புகள் உருவாக்கப்பட்டு இந்த அமைப்பின் முதல் மாநில மாநாடு மயிலாடுதுறையில் ஜுன் 6,7 இரண்டு நாட்கள் நடைபெறவிருக்கிறது. 

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு, ஒற்றுமை நீங்கினால் அனைவருக்கும் தாழ்வே என்ற வைர வரிகளுக்கொப்ப, மக்கள் அனைவரும் ஒன்றுபட்டுப் போராடினால் வெற்றி நிச்சயம். போராடித்தான் இவ்வளவு காலமும் அந்த இடத்தில் வாழ்ந்து வருகிறோம் என்பது தான் உண்மை. மக்கள் வாழ்வுரிமையை முன்னிறுத்தியும், அதை சட்டப்படி நிலை நிறுத்தவும் தொடர்ந்து செயல்பட்டு வரும் அனைத்து சமய நிலங்களை பயன்படுத்து வோர் பாதுகாப்பு சங்கத்தின் மாநாட்டிற்கு வாருங்கள்.  நமது துயரங்களுக்கு முடிவு கட்ட திட்டமிடுவோம்!