states

வீரப்பனின் உறவினர் சந்தேக மரணம் விசாரணை நடத்த நீதிமன்றம் மறுப்பு

சென்னை, பிப்.10 - சந்தன கடத்தல் வீரப்பனின் உறவினர் அர்ஜூனன் சந்தேக  மரணம் குறித்து 30 ஆண்டுகளுக்கு பிறகு காவல்துறை விசாரணை நடத்த உத்தரவிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சந்தன கடத்தல் வீரப்பனின் உறவினர் அர்ஜூனன் கடந்த  1995 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் போலீசார் விசார ணைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அதன் பிறகு அவரை  காணவில்லை. இதற்கிடையில் தருமபுரி நீதிமன்றத்தில் அவருக்கு எதிராக நிலுவையில் இருந்த வழக்கில், அவர்  இறந்துவிட்டதாக காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப் பட்டது. அதனைத் தொடர்ந்து அவருக்கு எதிரான குற்றச் சாட்டுகள் கைவிடப்பட்டன. இந்நிலையில், தன்னுடைய தந்தையின் மரணம் குறித்து விசாரிக்க உத்தரவிடக் கோரியும், காவல் நிலை யத்தில் மரணம் அடைந்திருப்பதால் 20 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கக் கோரி அர்ஜூனனின் மகன் சதீஷ்குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி பரத சக்கரவர்த்தி முன்பு விசார ணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான  வழக்கறிஞர், காவல்துறை தாக்கல் செய்த அர்ஜூனனின் இறப்பு சான்றிதழ் சந்தேகத்திற்கு உரியதாக இருப்பதால், அவர் இயற்கையாக மரணமடைந்தாரா? அல்லது காவல் துறையினர் தாக்கி மரணமடைந்தாரா? என்பது குறித்து விசாரிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 30 ஆண்டு களுக்கு பிறகு இதுகுறித்து விசாரணை நடத்த முடியாது எனவும், காவல்துறையினர் தாக்கிதான் மரணமடைந்தார் என்பது தொடர்பாக எந்த புகாரும் இல்லை. எந்த குற்ற  வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என தெரிவிக்கப் பட்டது. அரசு தரப்பு வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி, 30  ஆண்டுகளுக்கு பிறகு அர்ஜுனனின் மரணம் குறித்து விசாரிக்க முடியாது. 20 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையையும் நிராகரித்து, வழக்கை  தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.