சென்னை, ஏப்.3- நாட்டின் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு கள் தன்னாட்சி அமைப்பு மூலம் அடித்தள த்தில் ஜனநாயகத்தை உருவாக்குகின்றன. இந்த அமைப்பில் ஒரு வலுவான நிறுவன கட்ட மைப்பை உருவாக்குவதுடன் செயல்பாடுகள், நிதி மற்றும் செயல்பாட்டாளர்களை மாநில அரசு மாற்றுவதன் மூலம் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரம் அளித்ததா என்பதை கண்டறியும் நோக்கத்தோடு இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கைத் துறை (சிஏஜி) கடந்த 2015-16 முதல் 2019-20 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31ஆம் தேதியுடன் முடிவடைந்த 78 பக்க அறிக்கை தமிழக சட்டப்பேரவையில் கடந்த வாரம் தாக்கல் செய்யப்பட்டது.
நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி ஆதாரம் என்பது அதன் சொந்த ஆதாரம் மற்றும் ஒன்றிய-மாநில அரசுகளிடமிருந்து கிடைக்கும் மானியங்களாகும். அத்தோடு சொந்த வரு வாய் ஆதாரத்தில் வரி வருவாய், வரி அல்லாத வருவாய், ஒதுக்கப்பட்ட வருவாய் மற்றும் இதர வருமானங்கள் மூலமே கிடைக்கிறது. இவைகளைத் தவிர்த்து, மாநில நிதி ஆணையம் பரிந்துரைக்கும் மானியங்கள் மற்றும் 80 விழுக்காடு அடிப்படை மானியம், 20 விழுக்காடு செயல்திறன் மானியம் என இரண்டு கூறுகளாக ஒதுக்கும் ஒன்றிய அரசின் மானி யத்தைப் பரிந்துரை செய்யும் ஒன்றிய நிதி ஆணையம் பரிந்துரை செய்யும் நிதிகளாகும்.
நிதியை முடக்கும் பாஜக அரசு
ஒன்றிய நிதி ஆணையத்தின் அடிப்படை மானியம் அந்தந்த நிதியாண்டின் ஜூன் மற்றும் அக்டோபர் மாதங்களில் இரண்டு தவணை களாகவும் செயல்திறன் மானியம் அக்டோ பர் மாதமும் வழங்க வேண்டும். ஒன்றிய அரசு, உள்ளாட்சி அமைப்புகளுக்கு மானியம் தொகை விடுவிப்பதில் 2015-16 ஆம் ஆண்டில் செயல்திறன் மானியம் என்ற ஒரு புதிய கோட்பாட்டை கொண்டு வந்தது. இந்த நிதியை பெறுவதற்கு ஒன்றிய நிதி ஆணையத்தின் அனைத்து தகுதி, நிபந்தனைகளையும் தமிழ்நாட்டில் உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் பூர்த்தி செய்தன. இதனால், 2017-18 முதல் 2019-20 வரையிலான ஆண்டு களில் 1,646.47 கோடி ரூபாய் செயல்திறன் மானி யம் ஒதுக்கப்பட்டது. ஆனால், இதில் வழங்கப் பட்டது வெறும் ரூ.323 கோடி மட்டுமே. மீத முள்ள ரூ.1,323.60 கோடியை 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரையில் விடுவிக்காமல் உள்ளாட்சி அமைப்புகளின் நிதி ஆதாரங்களை ஒன்றிய பாஜக அரசு பறித்திருப்பது சரியானது அல்ல என்று இடித்துரைக்கிறது சிஏஜி அறிக்கை.
கடனை அதிகரித்த பாஜக அரசு
குடிதண்ணீர் வழங்கல் திட்டங்கள், மின்சார கட்டணம் செலுத்துதல், திடக்கழிவு மேலாண்மை, சாலைகள், பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள் போன்றவற்றின் பராமரிப்புக்காக பயன்படுத்த வேண்டிய ஒன்றிய நிதி ஆணையத்தின் அடிப்படைத் மானியம் 2015-20 ஆம் ஆண்டு வரைக்கும் ஒதுக்கியதாக கணக்கில் காட்டப்பட்ட 6,585.84 கோடி ரூபாயை விடுவிப்பதில் ஏற்பட்ட கால தாமதத்தின் பின்விளைவுகளையும் சுட்டிக்காட்டியுள்ளது.
தத்தளித்த உள்ளாட்சிகள்
உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒன்றிய அரசின் மானியங்கள் குறித்த காலத்திற்குள் கிடைக்காமல் போனதால் 2015-16 முதல் 2019-20 ஆண்டு காலகட்டத்தில் ரூ.4,076 கோடி கடன் வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப் பட்டன.
நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2015-20 ஆம் ஆண்டு காலகட்டத்தில் மாநில நிதி ஆணையம் ரூ.20,580 கோடி மானியமாக பரிந்துரை செய்தும், ஒன்றிய பாஜக அரசின் ஊதுகுழலாக ஆட்சி நடத்திவந்த எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு, ரூ.1,307 கோடி குறைவாக விடுவித்து இருக்கிறது. அதிமுக ஆட்சியின்போது, தமிழ்நாடு நகர்ப்புற சாலை உள்கட்டமைப்பு நிதியில் இருந்து ஒரு ரூபாய் கூட ஒதுக்கவில்லை. இதன் விளைவு, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு களில் சாலை பணிகளை மேற்கொள்ள வில்லை. இது மட்டுமல்ல, 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் வெவ்வேறு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு களில் 1000 பேருக்கு 6.69 மற்றும் 3.78 என்ற வரம்பில் இருந்த அலுவலர்களின் எண்ணிக்கை, 2019 மக்கள் தொகை அடிப்படை யில் 1000 பேருக்கு 0.55 மற்றும் 3.35 ஆக குறைந்திருக்கிறது. உதாரணத்துக்கு மூன்று மாநகராட்சிகளில் வருவாய் பிரிவுகளில் 244 அலுவலர்கள் இருக்க வேண்டிய இடத்தில் 69 பேர் மட்டுமே பணியில் உள்ளனர்.
அதுமட்டுமல்லாமல், நிதி ஒதுக்கீடுகளை மாநில அரசு நிர்வாகம் தற்செயல் செலவு களுக்காக மடைமாற்றம் செய்து கொண்டது. மூன்று மாதம் வரைக்கும் காலதாமதம் செய்த தால் உள்ளாட்சி அமைப்புகள் தங்களது ஊழியர்களுக்கு சம்பளம் கூட வழங்க முடியாமல் எப்படியெல்லாம் தத்தளித்தன என்பதையும், மக்களுக்கு தேவையான சேவை களை நிறைவேற்றிக் கொடுக்க முடியாமல் திணறியதையும் இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கைத் துறை தலைவரின் செயல்திறன் அறிக்கை புட்டுப்புட்டு வைத்திருக்கிறது.
மின் கொள்முதலும் அதிமுக முறைகேடும்!
சூரிய சக்தி மூலம் மின் உற்பத்தி செய்யும் மின்சாரத்தை கொள்முதல் செய்ய 86 உற்பத்தியாளர்களிடம் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (டான்ஜெட்கோ) 25 வருடத்திற்கான நீண்ட கால ஒரு ஒப்பந்தத்தை செய்து கொண்டது. அதன்படி 2015ஆம் ஆண்டு முதல் 19 ஆம் ஆண்டு வரை இடைப்பட்ட காலங்களில், மின் அளவீடு கருவி யை தங்களது சொந்த செலவில் உற்பத்தி கட்ட மைப்பும் அதை சார்ந்த மின் கடத்தி பகிர்மான கட்டமைப்பும் சந்திக்கும் முனையில் இணை க்க வேண்டும். ஆனால், 86 உற்பத்தியாளர் களும் தங்களுக்கு சொந்தமான மின் உற்பத்தி நிலையங்களில் மின் அளவீட்டு கருவியை நிறுவிக் கொண்டனர். இதுமட்டுமின்றி, ஒப்பந்தத்திற்கு நேர்மாறாக நடந்து கொண்ட மின் உற்பத்தி யாளர்கள் நிறுவிய அளவீட்டு கருவியில் பதிவான ஒட்டுமொத்த மின்சாரத்திற்கும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் பணம் கொடுத்துள்ளது.
இதன் விளைவாக, மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் நான்காண்டு காலத்தில் கூடுதலாக 245 கோடி ரூபாய் இழப்பை சந்தித்துள்ளதையும் இந்த இழப்பு மூலம் மின் உற்பத்தியாளர்கள் பெரும் ஆதாயம் அடைந்து இருப்பதையும் தணிக்கைத் துறை தலைவரின் அறிக்கை ஆய்வில் கண்டுபிடித்துள்ளது. இந்த சூரிய சக்தி மின் உற்பத்தி கொள்முதல் ஒப்பந்தம் 25 ஆண்டுகளுக்கு செல்லத் தக்கவை என்பதால் அதிமுக ஆட்சியின் இறுதிக் காலம் வரைக்கும் ஏற்பட்டிருக்கும் இழப்பு 2040 ஆம் ஆண்டு வரைக்கும் தொடரக் கூடும் என்பதால் மேலும் இது நீடிக்காத வகையில் உடனடியாக மின் அளவீடு கருவியின் இருப்பிடத்தை மாற்ற வேண்டும் என்றும் சிஏஜி அறிக்கை பரிந்துரை செய்திருக்கிறது.
பொதுத்துறை நிறுவனங்களில் ரூ.20,584 கோடி இழப்பு!
மாநில அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் 60 பொதுத்துறை நிறுவனங்களில் 24 நிறுவனங்கள் 2019-2020 ஆம் ஆண்டுகளில் 1,340 கோடி ரூபாய் லாபம் ஈட்டிக் கொடுத்துள் ளன. அதே நேரத்தில் நான்கு நிறுவனங்கள் இழப்பை சந்திக்கவில்லை என்றாலும் 29 நிறு வனங்கள் ரூ.18,584 கோடி இழப்பை சந்தித்து இருக்கின்றன. திருநெல்வேலி மற்றும் செங்கல்பட்டில் சட்டக் கல்லூரி மாணவர்களின் தேவையை ஆராயாமல் 2010 மற்றும் 2016 ஆண்டுகளில் தங்கும் விடுதிகள் கட்டப்பட்டதால் பயன்பாடு இல்லாமல் திருநெல்வேலி கட்டடத்துக்குள் செடிகள் வளர்ந்து உட்கட்டமைப்பு சீரழிந்தும் செங்கல்பட்டில் 10 ஆண்டுகளுக்கு மேலாக பயன் பாடு இல்லாமல் பூட்டி புதர் மண்டிக் கிடப்ப தாலும் ரூபாய் 2.76 கோடி வீண் விரயமாகி இருப்பதை புகைப்பட ஆதாரத்துடன் வெளிக்கொண்டு வந்திருக்கிறது தணிக்கைத் துறை தலைவரின் அறிக்கை.
இதேபோல், உசிலம்பட்டி நகராட்சி அலுவலகத்திற்கு சொந்தமாக கட்டடம் கட்டு வதற்கு தவறான மனையை தேர்ந்தெடுத்தால் கடந்த 10 ஆண்டுகாலமாக பயன்படுத்த முடி யாமல் குப்பைகள் குவியலாக இருப்பதையும், திருவள்ளூர் மாவட்டம் திருமாழிசை மற்றும் திருநின்றவூரில் இறைச்சிக் கூடங்கள் கட்டிக் கொடுத்தும் போதிய வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்காமல் 7 ஆண்டுகளுக்கு மேலாக பயன்படுத்த முடியாமல் இருப்பது, நிலம் கையகப்படுத்துவதற்கான கையேடு விதிகள் மற்றும் அரசு வழிகாட்டுதலை கடை பிடிக்காமல் மற்றும் நிலத்தை கையகப்படுத்தா மல் பால பணிகள் தொடங்கியது, அனு மதிக்கப்பட்ட அளவுக்கும் அதிகமாக சோடியம் குளோரைடு கரைசலை திருச்சி மாநகர பகுதி யில் பயன்படுத்தியதால் ஏற்பட்ட சுகாதார கேடு உள்ளிட்ட பல்வேறு கூடுதல் மற்றும் தேவை யில்லாமல் செலவழித்து பல கோடி ரூபாய் வீண் விரயம் செய்யப்பட்டு இருப்பதும் தணிக்கைத் துறை தலைவரின் அறிக்கையில் வெளிக் கொண்டு வரப்பட்டுள்ளது.
முந்தைய அதிமுக ஆட்சியின்போது பத்தாண்டு காலத்தில் நடந்துள்ள முறைகேடு கள், தவறுகளை களை எடுப்பதற்கு இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கைத் துறை தலைவர் கூறியிருக்கும் ஆலோசனைகளை யும் பரிந்துரைகளையும் அரசு உடனடியாக அமலுக்குக் கொண்டு வந்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகும்.
தொகுப்பு : சி.ஸ்ரீராமுலு