states

img

உத்தரகண்ட் சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்கள் மீட்பு

சில்க்யாரா, நவ. 28- உத்தரகண்ட் மாநிலம் சில்க்யாரா சுரங்கப்பாதை விபத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களும் வெற்றிகர மாக மீட்கப்பட்டனர். செவ்வாயன்று இரவு 8 மணி அளவில் முதல் கட்டமாக 5 தொழி லாளர்கள் குழாய் வழியாக மீட்கப் பட்டனர். மற்றவர்களை ஸ்ட்ரெச்சர் மூலமாக கயிறு கட்டி இழுக்கும் பணி  துவங்கியது. சுமார் ஒரு மணி நேரம் நீடித்த இந்தப் பணியின் நிறைவில் 41 தொழிலாளர்களும் மீட்கப்பட்டனர். நவீன இயந்திரங்கள் மூலமாக மேற்கொள்ளப்பட்ட பணிகள் தடை பட்ட நிலையில் இறுதியாக மனித உழைப்பை பயன்படுத்தி ‘எலி வளை’ சுரங்க முறையில் பாறை களை குடையும் பணி நடைபெற்றது. இது வெற்றியடைந்துள்ளது. மனித சக்திக்கு கிடைத்த வெற்றியாகவும் அமைந்துள்ளது. 410 மணி நேரம் - அதாவது 17 நாட்கள் பல்வேறு இடையூறுகளுக்கு மத்தியில் நீடித்த தீவிரப் போராட்டம் வெற்றிகரமாக முடிவுக்கு வந்துள்ளது. 

17 நாட்கள் போராட்டம்

தொழிலாளர்களை மீட்க பாறை களை வேகமாக குடையும் அமெரி க்காவின் ஆகர் இயந்திரம் பயன் படுத்தப்பட்டு வந்த நிலையில்,  மொத்தமுள்ள 60 மீட்டரில் 46 மீட்டர் அளவுக்கு ஆகர் குடைந்தது. அது வரை தொழிலாளர்களை வெளியே அழைத்து வர இரும்பு பைப்புகள் பொருத்தப்பட்டன. ஆனால் 10 சதவீத துளையிடும் பணி (14 மீட்டர்)  மட்டுமே எஞ்சியிருந்த நிலையில், ஆகர் இயந்திரத்தின் பிளேடுகள் உடைந்து, இயந்திரம் பழுதடைந்து உள்ளே சிக்கிக் கொண்டதால் பக்க வாட்டில் துளையிடும் பணிநிறுத்தப் பட்டு சுரங்கத்தின் மேல் மலை உச்சிப் பகுதியில் இருந்து செங்குத்தாக துளையிட்டு, தொழிலாளர்களை மீட்க திட்டமிடப்பட்டது. திங்களன்று இரவு நிலவரப்படி மொத்தமுள்ள 86 மீட்டரில்  (தோராயமாக) 31 மீட்டர் செங்குத்தாக துளையிடப்பட்டது. இந்த வகையிலான மீட்புப்பணி 4  நாட்களுக்கு மேல் ஆகும் என தகவல்  வெளியாகியதால்,   செங்குத்தாக துளையிடும் பணிநிறுத்தப்பட்டது.  “எலி வளை” சுரங்க முறை அதற்கு மாற்றாக மீட்பு பணியின் 17ஆவது நாளான செவ்வா யன்று பக்கவாட்டில் இருந்து துளை யிட தில்லியில் இருந்து  “எலி வளை” சுரங்கத்தொழிலாளர்கள் வரவழைக் கப்பட்டனர். செவ்வாயன்று மாலை 7 மணி நிலவரப்படி மொத்தமுள்ள 60 மீட்டரில், 58 மீட்டர் வரை அவர்கள் துளையிட்ட நிலையில், இரவு நேரமானதால் கடைசி 2 மீ  துளையிட தாமதம் ஏற்பட்டது. அதன்பிறகு மீட்புக்குழாயில் மின்விளக்கு பொருத்தப்பட்டு தொடர்ந்து மீட்புப்பணி நடைபெற்ற நிலையில், இரவு 8 மணி அளவில் 41 தொழிலாளர்களில் முதற்கட்ட மாக 5 தொழிலாளர்கள் குழாய் வழி யாக வெளியே கொண்டுவரப்பட்ட னர். அதைத்தொடர்ந்து அடுத்த டுத்து 41 தொழிலாளர்களும் மீட்கப் பட்டனர்.

தற்காலிக மருத்துவ வசதி

முன்னதாக 41 தொழிலாளர்கள் எந்நேரத்திலும் மீட்கப்படலாம் என தகவல் வெளியாகிய நிலையில்,  சுரங்கப்பாதையில் 3 ஆம்புலன்ஸ் களுடன் தற்காலிக மருத்துவ வசதி ஏற்படுத்தப்பட்டது. வெளிப் பகுதியில் 20-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள், ராணுவ ஹெலி காப்டர்கள் என பல்வேறு வசதிகள் தயார்நிலையில் வைக்கப்பட்டு இருந்தன. மேலும் 41 தொழிலாளர் களின் உறவினர்களும் சம்பவ இடத்திற்கு அழைத்துவரப்பட்டனர்.  அதற்கேற்ப தொழிலாளர்கள் வெளியே மீட்கப்பட்ட நிலையில் அவ ர்களுக்கு உடனடியாக மருத்துவ பரிசோதனைகள் நடைபெற்றன.