1988ம் ஆண்டு வத்திராயிருப்பில் நடைபெற்ற விவசாயிகள் சங்க பேரவைக் கூட்டத்தில் விவசாயிகளின் போராட்ட பாரம்பரியம் குறித்தும், 1946 ம் ஆண்டுகளில் நடந்த சுத்தவாரப் போராட்டம் பற்றியும் மிகவும் உணச்சிப்பூர்வமாக பேசினார். அப்போது அவர் விவசாயிகள் சங்கத்தின் விருதுநகர் மாவட்டச் செயலாளர். அன்றைய எனது முதல் சந்திப்பின்போது அவர் ஆற்றிய உரை மிகவும் ஆகர்ஷிப்பதாக இருந்தது. அன்று தொடங்கி 2022 ஏப்ரல் 18 அன்று விருதுநகரில் நடைபெற்ற அரசியல், தத்துவம் குறித்த கருத்தரங்கில் ஆற்றிய உரை வரையிலும் ஒவ்வொரு கூட்டத்திலும், ஒவ்வொரு அரசியல் வகுப்பிலும் அவரது நேர்த்தியான வார்த்தைகளின் தொகுப்பாக வெளிப்படுத்தும் கருத்துக்கள் சிறப்பாக ஆழ் மனதில் பதிந்து விடும்.
1993 அன்று ஆண்டு டிசம்பர் 1 அன்று மாவட்ட இடைக்காலப் பரிசீலனையில் கட்சியின் மாவட்டச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டு 2002ம் ஆண்டு ஏப்ரல் மாதம் மாநில செயற்குழு உறுப்பினராக தேர்வான பின்னணியில் செயலாளர் பொறுப்பிலி ருந்து விடுவிக்கப்பட்ட எட்டரை ஆண்டு கால இடைவெளியில்.. கட்சி வர்க்க-வெகுஜன அமைப்புகள் விரி வாக்கம்; வெகுஜன வசூல் வடிவம்-இதன் மூலம் கட்சியின் பணிகள் தொய்வின்றி நடப்பது உத்தர வாதம்; தீண்டாமை பிரச்சனைகளில் குறிப்பான தலையீடு; பெண்கள் மீதான பாலியல் வன்முறை களில் தலையீடு - இவையாவும் தோழர் எம்.என்.எஸ். தலைமையில் நடைபெற்ற போராட்டங்க ளில் குறிப்பிடத்தக்க நிகழ்வுகள் ஆகும். தீப்பெட்டி, அச்சு, பஞ்சாலை, விசைத்தறி, கைத்தறி ஆகியவற்றில் வர்க்க அமைப்புகளை உருவாக்கினால் கட்சி பலமடையும் என்று முடி வெடுத்து அதன்படி பட்டாசுத் தொழிலாளர்களை திரட்ட திட்டமிட்டு 2000 ஆம் ஆண்டில் இரண்டு நாட்களில் 53 கிராமங்களில் 4050 பேர் உறுப்பி னர்களாக சேர்க்கப்பட்டனர். தற்போது வரை பட்டாசுத் தொழிலாளர்களுடன் வலுவான தொடர்பு இருப்பதற்கு அப்போது போட்ட விதையே காரணம்.
கட்சி செயல்பாட்டுக்கான நிதியாதாரத்தை உழைப்பாளி மக்களிடமிருந்தே பெரும்பகுதி உரு வாக்க வேண்டும் என்ற கட்சியின் ஸ்தாபனக் கோட்பாட்டினை செயல்படுத்துவதில் மிக முக்கி யப் பங்கு வகித்தார். கட்சியின் முழுநேர ஊழி யர்களுக்கும் மாவட்ட அளவில் மையப்படுத்தி கட்சி ஊதியம் கிடைப்பதை 1995ம் ஆண்டு முதல் உறுதி செய்யப்பட்டது. அப்போது துவங்கிய வெகு ஜன நிதி திரட்டும் வடிவமும் ஊழியர்களுக்கென அலவன்ஸ் உறுதிப்படுத்தியதும் தற்போது வரை விருதுநகர் மாவட்டத்தில் வெற்றிகரமாக அமுல் படுத்தப்படுகிறது. 1995 ஆம் ஆண்டு முதல் மூன்றாண்டுகள் தென் மாவட்டங்களில் சாதிக் கலவரம் தலை விரித்தாடியது. 96 ஆம் ஆண்டு விருதுநகரை தலை மையிடமாகக் கொண்டு வீரன் சுந்தரலிங்கம் போக்குவரத்துக் கழகம் துவங்கப்பட்டதைத் தொடர்ந்து பெரும் பிரச்சனைகள் உருவெடுத்து ஒருமாத காலம் பேருந்துகள் இயக்கப்படவில்லை. சாதிய மோதல்களுக்கு இருதரப்பையும் கார ணமாக பலரும் சொல்லிக் கொண்டிருந்தபோது, பட்டியலின மக்கள் மீதான சமூக ஒடுக்குமுறையும், தீண்டாமைக் கொடுமைகளுமே கலவரங்களுக்கு காரணம் என கட்சியின் மாநிலக்குழு சரியான மதிப்பீட்டிற்கு வந்தது. அதனை விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கட்சி அணிகளுக்கு புரிய வைத்ததிலும் ஒடுக்கப்பட்ட மக்களின் பக்கம் நின்று அவர்களுக்கு ஆதரவான போராட்டத்தை முன்னெடுத்ததிலும் முத்திரை பதித்தவர் தோழர் எம்.என்.எஸ். வெங்கட்டராமன்.
2000 ஆம் ஆண்டு பிப்ரவரியில் இரண்டு நாட்கள் மாவட்டத்தில் 112 கிராமங்களில் தீண்டாமைப் பிரச்சனைகள் குறித்த கள ஆய்வு நடத்தி அத னைத் தொகுத்து ஒவ்வொரு கிராமத்திலும் ஒவ் வொரு விதத்திலிருந்த தீண்டாமைக் கொடுமை களை அம்பலப்படுத்தியதோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி ஒடுக்கப்பட்ட உழைப்பாளி மக்களின் பேரணி நடத்தப்பட்டது. இதற்கென துல்லியமாக திட்டமிட்டு உணர்வுப் பூர்வமாக ஒருங்கிணைத்தவர் தோழர் எம்.என்.எஸ். பெண்ணுரிமை, ஆண்-பெண் சமத்துவம் போன்ற பெண்கள் குறித்த மார்க்சியப் பார்வை யை கட்சிக்குள் ஏற்படுத்தியதில், பெண்கள், பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை களுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுத்த திலும் முக்கியப் பங்கு வகித்தவர் தோழர் எம்.என்.எஸ்.
அருப்புக்கோட்டை, ஆலங்குளம், கல்லூ ரணி, தேவதானம், காரியாபட்டி, பெரியகொல்ல பட்டி, ஏழாயிரம்பண்ணை, திருவில்லிபுத்தூர் என பல்வேறு இடங்களில் நடந்த பெண்கள், பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகளுக்கு எதிராக தொடர் போராட்டங்களை நடத்தி பல வழக்குகளில் குற்றவாளிகளுக்கு தண்டனையும் பெற்றுக் கொடுக்க முடிந்தது. இதில் ஒவ்வொரு பிரச்சனை மீதும் கட்சி அணி களையும், மாதர் சங்க தோழர்களையும் முழுமை யாக தலையிடச் செய்வதில் முழு முயற்சி செய்வதவராக தோழர் எம்.என்.எஸ் இருந்தார். அரசியல், தத்துவம், பொருளாதாரம், வரலாறு என அனைத்துப் பொருளிலும் மார்க்சியப் பார்வை யில் எளிமையாக விளக்கும் ஆசிரியராக திகழ்ந்தார். கட்சியின் அனைத்து மட்டத் தோழர்களி டமும் உணர்வுப்பூர்வமான உறவைக் கொண்டி ருந்தார். நேரிலோ,தொலைபேசியிலோ எப்போது பேசி னாலும் பேச்சினிடையே எவ்வளவு கலகலப்பான சிரிப்பு-அந்தச் சிரிப்பு மட்டும் இன்னும் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.