states

டாஸ்மாக் கடைகளை பிற்பகல் 2 மணிக்கு திறக்க ஆலோசனை

சென்னை, செப். 5- தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுக்கடைகள் பகல் 12 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 10 மணி வரை செயல்படுகிறது. இந்த விற்பனை நேரத்தை குறைக்க கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கே.கே.ரமேஷ் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், ‘மதுபான விற்பனை நேரத்தை மதியம் 2 மணியில் இருந்து இரவு 8 மணி வரை  குறைக்க வேண்டும் என்றும் 21 வயதுக்கு உட்பட்ட வர்களுக்கு மது விற்பனை செய்ய தடை விதிக்க வேண்டும் என்றும் மது வாங்குவோருக்கு உரிய அடையாள அட்டை வழங்க உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் மது விற்பனை  நேரத்தை அரசு குறைக்க வேண்டும் என்று உத்தர விட்டனர். ஆனால் இது நடைமுறைக்கு இன்னும் வரவில்லை. இந்நிலையில் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க கோரி ரமேஷ் மீண்டும் நீதிமன்றத்தில் முறை யிட்டார். இந்த மனு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது  டாஸ்மாக் கடைகளில் விலைப்பட்டியல் உள்ளதா? என்பதை உதவி சொலிசிட்டர் ஜெனரல் கோவிந்த ராஜன் தலைமையிலான குழுவினர் டாஸ்மாக் கடைகளில் நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும் என உத்தரவுகளை பிறப்பித்தனர். இதுபற்றி அக்டோபர் 23 ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர். இந்நிலை யில் நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தும் வகையில், மதுக் கடைகள் செயல்படும் நேரத்தை மாற்றி அமைக்க  அரசு ஆலோசித்து வருகிறது. அனேகமாக மதியம்  2 மணியில் இருந்து 10 மணி வரை கடை திறக்கும்  நேரத்தை மாற்றி அமைக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படு கிறது. இது தொடர்பான சாதக, பாதகங்களை அரசு விரிவாக ஆலோசித்து வருகிறது.