சென்னை,டிச.14- பொறியியல் கல்லூரிக ளில் தமிழ் பாடங்களை பயிற்றுவிக்க யுஜிசியின் வழிமுறையின்படியே தமிழ் பேராசிரியர்கள் பணிக்கு நியமிக்கப்படுவார்கள் என்று உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார். இதுகுறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் கூறி யதாவது:- தமிழகத்தில் பொறியி யல் பயிலும் மாணவர்க ளுக்கு ‘தமிழர் மரபு’, ‘தமிழ ரும் தொழில் நுட்பமும்’ என்ற 2 புதிய தமிழ் மொழி பாடங்கள் இந்த ஆண்டு முதல் அறிமுகம் செய்யப் பட்டுள்ளன. இப்பாடங்களை மாண வர்களுக்கு பயிற்றுவிக்க, பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி)வழிமுறை களின்படியே பேராசிரி யர்கள் நியமிக்கப்படு வார்கள். அதாவது, முது நிலை தமிழ் படித்து நெட், ஸ்லெட் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அல்லது பிஎச்டி முடித்த வர்கள் மட்டுமே உதவி பேராசிரியர்களாக நியமிக்கப்படுவார்கள். தகுதியான ஆசிரியர்களை தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது. அதுவரை, தற்காலிக ஆசிரியர்களை கொண்டு பாடங்கள் நடத்தப்படும். வெளிநாடுகள், பிற மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களும் தமிழகத்தில் பொறியியல் படிக்கின்ற னர். அவர்களும் தமிழர் மரபை தெரிந்து கொள்ளும் வகையில், இந்த 2 பாட நூல்களும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து, அவர்களுக்கு கற்றுத் தரப்படும். அடுத்த ஆண்டு முதல் பாலிடெக்னிக் கல்லூரிகளிலும் தமிழ் பாடங்கள் கொண்டுவரப்பட உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.