states

நம்பிக்கை இழந்துவிட்டோம் : மார்ச் 28 மறியல்

சென்னை, பிப். 11 - அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறை வேற்றாத மாநில அரசு மீது நம்பிக்கை இழந்துள்ளதால் மார்ச் 28 அன்று ஒரு நாள்  அடையாள வேலை நிறுத்தம் நடைபெறும் என்று தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது. புதிய ஓய்வூதிய திட்ட த்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழு வதும் மாவட்ட தலை நகரங்களில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தி னர் கோரிக்கை ஊர்வலம்  நடத்தினர். அதன் ஒரு பகுதியாக வடசென்னை, தென்சென்னை மாவட்டங் கள் சார்பில் சிந்தாதிரிப் பேட்டையில் நடைபெற்றது.  அப்போது செய்தியாளர்க ளிடம் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஆ.செல்வம் கூறியதாவது: சரண் விடுப்பு ஒப்பு விப்பு முடக்கத்தை ரத்து  செய்ய வேண்டும், ஒன்றிய  அரசு வழங்கிய அகவிலைப் படி உயர்வை தர வேண்டும்,  சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம ஊழி யர்கள், எம்ஆர்பி செவிலி யர்கள், ஊர்ப்புற நூல கர்கள் என சுமார் 3.50 லட்சம் பேர் அத்துக்கூலியில் உள் ளவர்களுக்கு காலமுறை ஊதியம் தர வேண்டும். 6  லட்சம் காலிப் பணியிடங் களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு  கோரிக்கைகளை வலியு றுத்தி போராடி வருகிறோம். இவை அனைத்தும் அதி முக ஆட்சியின்போது முன்வைத்தாகும். அன்றைக்கு எதிர்க் கட்சித் தலைவராகவும், தேர்தல் அறிக்கையிலும், மாநாடுகளிலும் அளித்த உறுதிமொழிகளை இன்றைய முதலமைச்சர்  தற்போது நிறைவேற்ற வில்லை. அரசு மீது நம்பிக்கை இழந்த நிலை யில், பேரணிகளை நடத்துகி றோம். அடுத்த கட்டமாக மார்ச் 28 அன்று ஒருநாள்  அடையாள வேலை நிறுத்தம் செய்வோம். அதற் கடுத்து பட்ெஜட் கூட்டத் தொடரின் போது கோட்டை முற்றுகைப் போராட்டம் நடத்துவோம். இவ்வாறு அவர் கூறினார்.