states

img

"தகைசால் தமிழர்" விருதுக்கு தோழர் இரா.நல்லகண்ணு தேர்வு

தகைசால் தமிழர் விருதுக்கு இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்த தலைவர் தோழர் இரா.நல்லகண்ணு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாட்டிற்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களைப் பெருமைப்படுத்தும் வகையில் "தகைசால் தமிழர்" என்ற பெயரில் புதிய விருது 2021 - ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சுதந்திர போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான தோழர் இரா.நல்லகண்ணு அவர்களுக்கு 2022-ஆம் ஆண்டிற்கான "தகைசால் தமிழர் விருது" வழங்க தமிழக அரசு முடிவு செய்யப்பட்டது.

மேலும், 75வது சுதந்திர தின விழா கொண்டாட்டத்தின் போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருது வழங்குவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

;