states

தீக்கதிர் விரைவு செய்திகள்

ஸ்விக்கி, ஜொமாட்டோ மதுபானங்களை ஹோம் டெலிவரி செய்ய திட்டமா?

உணவுப் பொருட்களை போல பீர், ஒயின் உள்ளிட்ட ஆல்கஹால் குறைவாக சேர்க்கப்பட்ட மது பான வகைகளை ஆன்லைன் ஆர்டர் மூலம் ஹோம் டெலிவரி செய்யும் வசதி யை அமல்படுத்த ஸ்விக்கி, ஜொமாட்டோ, பிக் பாஸ்கேட் உள்ளிட்ட ஆன்லைன் உணவு நிறுவனங்கள் திட்டமிட்டு வருவ தாகத் தகவல் வெளியாகியுள்ளது. கர்நாடகா, ஹரியானா, தமிழ்நாடு, பஞ்சாப், கோவா, கேரளா உள்ளிட்ட மாநி லங்களின் அரசுகளிடம் அனுமதி பெற்று, இதனை விரைவாக நடைமுறைப்படுத்த ஆன்லைன் டெலிவரி நிறுவனங்கள் திட்டமிட்டு வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. பாஜக ஆளும் ஒடிசா மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் ஆளும் மேற்கு வங்கத்தில் மதுபானங்க ளை ஹோம் டெலிவரி செய்ய அனுமதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மூத்த ஐஏஎஸ்  அதிகாரிகள் மாற்றம்!

சென்னை, ஜூலை 16- உள்துறைச் செயலாளர் அமுதா, சென்னை மாநகராட்சி ஆணையர் ராதா கிருஷ்ணன் உள்ளிட்ட 15 ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் 10 மாவட்ட ஆட்சி யர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ள னர். உள்துறைச் செயலர் அமுதா அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டு, வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை முதன்மைச் செய லாளராக நியமிக்கப்பட்டுள்ளார். உள்துறைச் செயலாளராக தீரஜ் குமார் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை முதன்மைச் செய லாளர் பொறுப்பு வகித்த வி. ராஜா ராமன் ஐஏஎஸ் தமிழ் வளர்ச்சி மற்றும் தகவல் துறை செயலாளராக நியமிக்கப் பட்டுள்ளார்.

சென்னை ஆணையராக குமரகுருபரன்

சென்னை மாநகராட்சி ஆணையராக இருந்த ஜெ. ராதாகிருஷ்ணன் மாற்றப் பட்டு, பள்ளிக்கல்வித் துறை செயலாள ராக இருந்த ஜெ. குமரகுருபரன் சென்னை பெருநகர மாநகராட்சி ஆணை யராகவும், கூட்டுறவுத்துறை கூடுதல் பதி வாளராக இருந்த ஜெ. விஜயா ராணி இணை ஆணையராகவும் நியமிக்கப் பட்டுள்ளனர். ஜெ.  ராதாகிருஷ்ணன் உணவு, நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவுத் துறை கூடுதல் முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். சிட்கோ மேலாண் இயக்குநராக இருந்த எஸ். மதுமதி ஐஏஎஸ் பள்ளிக்கல்வித்  துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். 

தாம்பரம் ரயில் நிலையத்தில் கூடுதல் வசதிகள் 

சென்னை, ஜூலை 16- சென்னையின் 3-வது மிகப்பெரிய ரயில் முனையமாக தாம்பரம் ரயில் நிலையம் உள்ளது.  எழும்பூர் மற்றும் சென்ட்ரலுக்கு அடுத்த படியாக தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலி, கோவை, நாகர்கோவில் உள்பட தமிழகத்தின் பல பகுதிகளுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படு கின்றன. ஆந்திரா வழியாக வடமாநிலம் செல்லும் ரயில்கள் சென்ட்ரலுக்கு பதிலாக தாம் பரத்தில் இருந்து புறப்படத் தொடங்கி உள்ளன. இனி சென்னைக்கு புதிதாக அறி விக்கப்படும் எந்த ரயிலாக இருந்தாலும் தாம்பரத்தில் இருந்தே புறப்படும் என்று தெரிகிறது. சென்ட்ரல், எழும்பூர் போல தாம்பரம் ரயில் நிலையத்தில் மிகப்பெரிய அளவில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லை.  இந்த நிலையில், தாம்பரம் ரயில் நிலை யம் ரூ.1000 கோடி செலவில் உலகத் தரத்தில் மறுசீரமைக்கப்பட இருப்பதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. ரயில் நிலையத்தில் கழிவறைகள், டிஜிட்டல் பலகைகள், நகரும் படிகட்டு கள், புதுப்பிக்கப்பட்ட இருக்கைகள், வேளச் சேரி சாலை, ஜிஎஸ்டி சாலை என இரு பக்கமும் பிரமாண்ட முகப்புகள், வாக னங்கள் வந்து செல்லும் வழி, நடை மேம்பாலங்கள், பார்க்கிங் வசதி, குடிநீர் வசதிகள், விளக்குகள், நடைமேடைகள் அனைத்தும் சீரமைக்கப்பட உள்ளது. தாம்பரம் ரயில் நிலையத்தின் உள்நுழைவு, வெளியேறும் பகுதி, ஜி.எஸ்.டி. சாலையில் வாகனங்கள் செல்லும்  பகுதி, வேளச்சேரி சாலையில் ரயில் நிலை யத்தின் வெளியேறும் பகுதி, உள்ளே வரும் பகுதி என எல்லாமே மிக அகலமாக மாறு கிறது. மேலும் பசுமை பூங்காக்களும் அமைக்க ப்பட உள்ளது. ரெயில் நிலையத்தில் 6  அடுக்கு கட்டிடங்களும் கட்டப்பட உள்ளன. மேலும் பன்னடுக்கு வாகன நிறுத்தும் வசதி யும் அமைக்கப்படுகிறது. இந்த திட்டம் 5 வருடங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது பணிகள் தொடங்கப்பட உள்ளது.

தனியார் நிறுவன பங்குதாரரிடம்  ரூ.27 கோடி மோசடி: ஒருவர் கைது

அம்பத்தூர், ஜூலை 16- திருமழிசையில் உள்ள தனியார் நிறு வனத்தில் பங்குதாரரிடம் ரூ.27 கோடி வரை மோசடி செய்த வழக்கில் ஆவடி மத்திய குற்ற ப்பிரிவு காவல் துறையினர் ஒருவரை கைது செய்தனர். நாகப்பட்டினம் மாவட்டம், ஆலியூர் மேளத் தெருவைச் சேர்ந்தவர் அகமது கபீர்  (56). இவர் சிங்கப்பூரில் பணியாற்றிய போது, அங்கு பணியாற்றி வந்த மலேசியாவைச் சேர்ந்த செல்வேந்திரன் என்பவருடன் தொடர்பு ஏற்பட்டது. பின்னர் அகமது கபீர்,  செல்வேந்திரன் மற்றும் சென்னை, வளசர வாக்கம் பகுதியைச் சேர்ந்த காதர் ஆகிய 3  பேரும் சேர்ந்து பூந்தமல்லி அருகே திரு மழிசை தொழிற்பேட்டையில் மின்சார வயர் தயாரிக்கும் நிறுவனம் நடத்தினர். இதில் காதர் என்பவருக்கு 50 விழுக்காடு பங்கு தொகையும், செல்வேந்திரன் மற்றும் அகமது கபீர் ஆகிய இருவருக்கும் சேர்த்து 50 விழுக்காடு பங்கு தொகையும் பிரித்துக் கொள்வதாக முடிவு செய்தனர். இதற்கிடையில் செல்வேந்திரன் மற்றும் அகமது கபீர் இருவரையும் நிறுவனத்தில் உள்ள பங்குகளை தனியாக நடத்திக் கொள்ளும்படி கூறி விட்டு, காதர் பிரிந்து  சென்று விட்டார். இந்நிலையில் செல்வேந்தி ரன், பாஸ்கர் என்பவர் மூலம் நிறுவனம் தொடர்பான முடிவுகளை தன்னிச்சையாக கையாண்டு, தனது பங்குதாரரான அகமது கபீர் போன்று ஆவணங்களில் பாஸ்கரை வைத்து போலியாக கையொப்பமிட்டு சுமார்  ரூ.27 கோடி வரை மோசடியில் ஈடுபட்டுள் ளார். இதுகுறித்து அறிந்த அகமது கபீர் ஆவடி காவல் ஆணையரகத்தில் அண்மையில் புகார் அளித்தார். ஆணையர் கி.சங்கர் புகார் மனுவை ஆவடி மத்திய குற்றப்பிரிவுக்கு அனுப்பி வைத்து நடவடிக்கை எடுக்க உத்தர விட்டார். போலி ஆவண தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் ஆல்பின் பிரிஜிட் மேரி தலை மையில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கு தொடர்பாக நாகப்பட்டினம் மாவட்டம், புலி யூர் ராமர் மடம் பகுதியைச் சேர்ந்த பாஸ்க ரன் (56) என்பவரை காவல் துறையினர் கைது செய்து, பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள செல்வேந்திரனை தேடி வருகின்றனர்.