12 மணி நேர வேலை சட்டமுன்வடிவு மசோதா நிறுத்தி வைக்கப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரிவித்துள்ளார்.
கடந்த ஏப்ரல் 21-ஆம் தேதி பட்ஜெட் கூட்டத்தொடரின் இறுதி நாளன்று 8 மணி நேர வேலையை 12 மணி நேரமாக அதிகரித்து தொழிற்சாலைகள் (தமிழ்நாடு திருத்தச்) சட்டமுன்வடிவு சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் எதிர்ப்பை மீறி தமிழ்நாட்டு அரசு இந்த மசோதாவை நிறைவேற்றியது.
இதனிடையே இன்று மாலை 3 மணிக்கு தலைமை செயலகத்தில் அமைச்சர்கள் ,தொழிற்சங்கங்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.கூட்டணி கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இந்த சட்ட திருத்த மசோதாவை முதலமைச்சர் தற்போது நிறுத்திவைத்துள்ளதாக அறிவித்துள்ளார்.