பட்டாசு வெடிக்க உச்சநீதிமன்றம் நேரக் கட்டுப்பாடு
புதுதில்லி, செப். 22 - தீபாவளிக்கு சரவெடி மற்றும் பேரியம் மூலப் பொருளில் தயாராகும் பட்டாசுகளுக்கு அனுமதி கோரி உச்சநீதிமன்றத்தில் புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு வெள்ளி யன்று நீதிபதிகள் ஏ.எஸ். போபண்ணா, எம்.எம்.சுந்த ரேஷ் அமர்வில் விசார ணைக்கு வந்தது. அப்போது சுற்றுச்சூழ லைப் பாதிக்காத பட்டாசு களை வெடிக்கலாம். அது வும் வெறும் 2 மணி நேரம் மட்டும் பட்டாசு வெடிக்க அனுமதி உண்டு என்று ஏற்கெனவே வழங்கியிருந்த தீர்ப்பை உறுதிப்படுத்தினர். சரவெடி மற்றும் பேரியம் மூலப்பொருளில் தயா ராகும் பட்டாசுகளுக்கு அனு மதி கிடையாது எனக் கூறி இடையீட்டு மனுக்களை தள்ளுபடியும் செய்தனர். தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டத்தில் 1400 பட்டாசு ஆலைகள் இயங்கி வரும் நிலையில் உச்சநீதி மன்றத்தின் இந்த தீர்ப்பால் பட்டாசு தயாரிப்பாளர்களும் தொழிலாளர்களும் மிகுந்த கவலையடைந்துள்ளனர்.
சந்திரபாபு நாயுடுவுக்கு காவல்நீட்டிப்பு
விஜயவாடா, செப்.22- ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேச கட்சியின் தலைவருமான சந்திர பாபு நாயுடு ரூ.371 கோடி ரூபாய் ஊழல் ஊழல் வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு, நீதி மன்றக் காவலில் சிறையில் அடைக்கப் பட்டுள்ளார். இந்நிலையில், சந்திரபாபு நாயுடுவை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க ஊழல் தடுப்பு படை போலீசார் விஜயவாடா சிறப்பு நீதி மன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனு வெள்ளியன்று விசாரணைக்கு எடுக்கப் பட்ட நிலையில், வீடியோ கான்பரன்ஸ் மூலம் சிறையில் இருந்து சந்திரபாபு நாயுடு ஆஜர்படுத்தப்பட்டார். சந்திரபாபு நாயுடு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் போலீஸ் காவ லில் எடுத்து விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்தார். ஜாமீன் வழங்க கோரினார். இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் சந்திரபாபு நாயுடு வின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து, 2 நாட்கள் சிஐடி காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்தனர்
மகளிர் உரிமைத்தொகை: விண்ணப்பதாரர்களுக்கு உதவ இணையதளம் துவக்கம்
தென்காசி, செப். 22 தென்காசி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் விண்ணப்பதாரர்களுக்கு உத விடும் வகையில் அரசால் புதிதாக kmut.tn.gov.in என்ற இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. இதில் விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பத்தின் நிலையினை தாங்களாகவே தெரிந்து கொள்ளலாம், விண்ணப்பதாரர்கள் தங்களது வீட்டிற்கு அருகில் உள்ள இ.சேவை மையங்களிலும் விண்ணப்பத்தின் நிலை யினை தெரிந்து கொள்ளலாம். இதற்கு கட்டணம் ஏதும் செலுத்தத் தேவையில்லை. அரசால் அறிவிக்கப் பட்டுள்ள 1100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். இவை தவிர விண்ணப்பங்களின் நிலையை தெரிந்து கொள்வதற்கு தென்காசி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள், வட்டாட்சியர் அலுவலகங்களில் உதவி மையங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. கலைஞர் மகளிர் உரிமை தொகை கிடைக்க பெற்ற பய னாளிகளிடம் யாரேனும் தொடர்பு கொண்டு ஓடிபி (OTP) விபரங்களை கேட்கும்பட்சத்தில் தெரிவிக்க வேண்டாம் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் துரை.இரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
அக். 14இல் தமிழ்நாடு வருகிறார் சோனியா காந்தி
சென்னை, செப். 22- திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி அழைப்பின் பேரில் அக்டோபர் 14ஆம் தேதி சோனியா காந்தி தமிழ்நாடு வரவுள்ளார். திமுக மகளிரணி சார்பில் அக்டோபர் 14ஆம் தேதி சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் கருணாநிதி நூற்றாண்டு விழா நடைபெற உள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. பிருந்தா காரத் உள்ளிட்டோருக்கு திமுக துணைப் பொதுச்செய லாளர் கனிமொழி அழைப்பு விடுத்துள்ளார். அதை ஏற்று சோனியா காந்தி தமிழ்நாடு வருகை தர உள்ளார். அப்போது நாடாளுமன்றத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீட்டு இறுதியாவதற்கு வாய்ப்பிருப்பதா கக் கூறப்படுகிறது. கடைசியாக 2018ஆம் ஆண்டு கருணாநிதி சிலை திறப்பு விழாவிற்கு சோனியா காந்தி தமிழ்நாடு வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
காய்ச்சல் பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க நெல்லை அரசு மருத்துவமனையில் தனி வார்டு
திருநெல்வேலி, செப். 22- நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க தனி வார்டு தொடங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அரசு மருத்துவக் கல்லூரி டீன் ரேவதி பாலன் செய்தியா ளர்களிடம் கூறியதாவது: அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவமனையில் காய்ச்சல் தடுப்பு சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள் ளது. அந்த வார்டில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெறும் வகையில் 120 படுக்கைகள் ஏற் படுத்தப்பட்டுள்ளன. இதில் ஆண் மற்றும் பெண்கள் சிகிச்சைக்காக 60 படுக்கை கள் அமைக்கப்பட்டுள்ளன. தீவிர சிகிச்சைக்காக தனியாக இடம் ஒதுக்கப் பட்டுள்ளது. குழந்தைகள் சிகிச்சை பெறும் வகையில் தனியாக 55 படுக்கை வசதி களும் கர்ப்பிணி பெண்களுக்கு 5 படுக்கை களும் தனியாக ஏற்படுத்தப்பட்டுள்ளது. காய்ச்சலால் பாதிக்கப்பட்டு நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை யில் சிகிச்சை பெற்று வரும் நபர்களுக்கு டெங்கு பரிசோதனை உட்பட 7 வகையான ரத்த பரிசோதனை மேற்கொள்ளப்படும் வகையில் ஏற்பாடுகள் செய்யப் பட்டிருக்கிறது. டெங்கு பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு தேவைப்படும் ரத்தம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கையிருப்புகள் வைக்கப்பட்டுள்ளது. எந்த நேரத்திலும் யார் சிகிச்சை பெற வந்தாலும் உடனடி யாக சிகிச்சை அளிக்கும் வகையில் ஏற்பாடு கள் தயார் செய்யப்பட்டு மருத்துவர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். காய்ச்சல் பாதிப்பு இருப்பவர்கள் மருத்துவ மனையை நேரில் அணுகி சிகிச்சை பெற வேண்டும். மருந்தகங்களில் தனியாக மருந்து மாத்திரைகள் வாங்கி உட்கொள்ள வேண்டாம். நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் காய்ச்சல் பாதிக்கப்பட்டு குழந்தைகள் உட்பட 20 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 2 தினங்களுக்கு முன்பு டெங்கு பாதிக்கப் பட்ட 2 குழந்தைகள் நல்ல முறையில் சிகிச்சை முடித்து வீடு திரும்பியுள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.